ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் டிவி நிறுவனங்களுக்கு அல்வாவை அப்படியே சாப்பிடுவது போல. அவரது படங்களை வாங்க கடும் போரே நடக்கும். அந்தப் போரில் பெரும்பாலும் சன் டிவிதான் இது காலம் வரை வென்று வந்தது. ஆனால் தற்போது திரையுலகில் உலா வரும் ஒரு செய்தி வியப்பளிப்பதாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுவதே அந்த செய்தியாகும்.
அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எந்தப் புதிய படம் எடுத்தாலும் அதை முதலில் சன் டிவிக்கு விற்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் பல தயாரிப்பாளர்கள். பலர் படத் தயாரிப்பின்போதே சன் பிக்சர்ஸிடம் விற்ற செய்திகளும் நிறைய வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. புதுப் படம் எதுவுமே சன்டிவிக்குப் போவதற்குத் தயங்குகிறதாம். காரணம் ஜெயா டிவி இப்போது பெரும் பணத்தைக் கொடுத்து புதுப் படங்களை வாங்கத் தயாராக இருப்பதால். அத்தோடு ஆட்சி வேறு ஜெயா டிவிக்கு சாதகமாக இருப்பதாலும், தயாரிப்பாளர்கள் தரப்பு ஜெயா டிவிக்கே படங்களைக் கொடுக்க முன் வருகிறார்களாம்.
இதனால் சன் டிவிக்கு சமீப காலமாக புதுப் படங்கள் எதுவுமே வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயா டிவியுடன் போட்டியிட விரும்பாததை ஒரு காரணமாகக் கூறினாலும், இன்னொரு முக்கியக் காரணத்தையும் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதாவது கோச்சடையான் ஒரு அனிமேஷன் படம் என்பதால்தான் சன் டிவி அதை வாங்கத் தயக்கம் காட்டியதாம்.
வழக்கமான ரஜினி படங்களுக்கும், இதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதை ரசிகர்கள் நிச்சயம் வேறுபட்ட படமாகத்தான் பார்ப்பார்கள். ஒரு முழு நீள ரஜினி படமாக இது இருக்க வாய்ப்பில்லை என்பது சன் டிவியின் கருத்தாம். இதனால்தான் கோச்சடையானை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள்.
முதலில் சன் டிவியைத்தான் கோச்சடையான் தயாரிப்புத் தரப்பு அணுகியதாம். ஆனால் அவர்கள்தான் விருப்பமில்லை என்று கூறி விட்டார்களாம். அதன் பிறகே ஜெயா டிவி வந்து கேட்டதாம். பெரும் விலை பேசி வியாபாராத்தை முடித்தார்களாம்.
எது உண்மையோ...?
English summary
 
Sun TV, the leading Tamil entertainment television, has been ruling the TV market for over a decade. When it comes to acquiring the satellite rights, it always stood tall by bagging big movies. However, recently the channel has not bought any notable movies and it was surprised when it did not turn up to join the race to buy the television rights of Kochadaiyaan.

OMG! Rajnikanth to take over Akshay Kumar’s movie!

It would be a dream come true for any filmmaker or actor to have his movie remade with the screen God in the lead… Literally, we say… Screen God here is of course Rajnikanth….

News is abuzz that Rajnikanth might soon be in the Tamil remake of Akshay Kumar‘s ‘OMG! Oh My God‘. The soon-to-be-releasing film stars Paresh Rawal in lead besides Akki and is co-produced by Ashwini Yardi and Akshay Kumar‘s banner Grazing Goat.

Talks are that south filmmaker Krishna Prasad has showed his interest for the film’s remake in Tamil. Incidentally he is going to work with Dhanush, Rajnikanth‘s son-in-law and thus, hopeful of making a deal with the superstar himself through contacts.

So if all goes well, Rajnikanth will be in the Tamil version of ‘OMG! Oh My God‘, while Akshay Kumar and Yardi will be on the producers’ board along with Prasad.

‘OMG! Oh My God‘ revolves around an atheist (Paresh Rawal) and how he drags Lord Krishna (Akshay Kumar) to court on a legal case.


omg 2012 OMG! Rajnikanth to take over Akshay Kumars movie!

omg still 1 OMG! Rajnikanth to take over Akshay Kumars movie!


டோக்கியோவில் ஸ்ரேயாவுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு!

சிவாஜி 3D படத்தின் பிரீமியரை காண ஜப்பான் தலைநகர் சென்றுள்ளார் ஸ்ரேயா. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டனர் ஜப்பானியர்கள்.

தனது தாயாருடன் ஜப்பான் சென்ற ஸ்ரேயா, படம் தேரியாயிடப்படும் திரையரங்கிற்கு முன்னாள் ரெட் கார்பெட் விரிக்கப்பட்டு, ஜப்பான் பாரம்பரியப்படி, கை ரிக்ஷாவில் அமரவைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தன.

“டோக்கியோ மிக அழகான நகரம். மக்கள் மிகவும் இனிமையானவர்கள். எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்துவிட்டது. தமிழ் செல்வி என்ற காரெக்டரை எனக்கு தந்ததற்காக ஷங்கர் சாருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதே போல எனக்கொரு அருமையான நடிகராக அமைந்ததற்கு  ரஜினி சாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்திய சினிமா கண்ட மிக அற்புதமான இயக்குனர்களில் முத்னமையானவராக ஷங்கர் சார் எப்போதும் இருப்பார். அவருடன் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த அதரிஷ்டம்” என்று கூறியுள்ளார்.

சிவாஜி 3D படம் ஜப்பானில் பெறும் வரவேற்பு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து அம்மக்கள் கோச்சடையானை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறார்கள்.
———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

———————————————————————————————-

மறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்!!!

திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்றாலே அனைவரது நினைவிற்கும் வருபவர் "ரஜினிகாந்த்" தான். அவர்கள் தென்னிந்தியாவில் மட்டும் புகழ் பெற்று விளங்கவில்லை. உலகம் முழுவதும் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப் பெற்று, அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வருகிறார். இத்தகைய புகழ் பெற்ற ரஜினிகாந்த், தன் ஸ்டைலால் மட்டும் அனைவரையும் கவரவில்லை, பஞ்ச் டயலாக்குகள் மூலமும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதை, தன் படங்களின் வழியாக உண்மையாக வெளிகாட்டி வருகிறார். இவரது பெயரைக் கேட்டாலே அனைவரின் மனதிலும் ஒரு குதூகலம் பிறக்கும். இத்தகைய சூப்பர் ஸ்டார் ரஜினியின், சிறந்த, இன்றும் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும், மறக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை படித்து பாருங்களேன்...
rajinikanth famous punch dialogues
* ரஜினியின் சூப்பர் ஹிட் படமான "பாட்ஷா" படத்தில் நிறைய டயலாக்குகள், மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதில் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக், இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.
* அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்குகளான "பேரை கேட்டாலே, சும்மா அதிருதுல்ல...", "பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்" போன்றவை சிறந்த பஞ்ச் டயலாக்காக உள்ளது.
* ரஜினி அவர்கள் சிவாஜியுடன் நடித்த கடைசி படமான "படையப்பா"-வில் கூட வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் டயலாக்கை சொல்லியுள்ளார். அதுதான் "அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல".
அதுமட்டுமல்லாமல், இன்னும் சில சூப்பர் மற்றும் சிந்திக்க வைக்கும் உண்மை டயலாக்குகளான...
* "எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடி தான் இதெல்லாம் வரணும்."
* "நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்."
* "நம்ம வாழ்க்கை நம்ம கையில தான் இருக்கு."
* "நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."
* "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது."
* "வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது."
* "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது."
இவை மட்டுமல்ல இன்னும் இருக்கின்றன. மேலும் ரஜினி அவர்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அளவே இல்லை. அந்த அளவு அவர் தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார். என்ன நண்பர்களே! உங்களுக்கு பிடித்த டயலாக் என்னன்னு, எங்களோடயும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

English summary
Super Star Rajinikanth is not just impressing his style. he impressing people with his punch dialogues also. And Super Star Rajinikanth’s films are known for their “punch” dialogues. These are rhyming lines of dialogue delivered by the Rajinikanth. So it quickly reached our people's heart.

ரஜினி - கமல் படங்களுக்கு இன்சூரன்ஸ்!

நாளுக்கு நாள் சினிமா தொழில் நுட்பம் வளர வளர, படங்களின் நஷ்டத்திலிருந்து பாதுகாப்பாகக் கரையேறும் உத்திகளையும் சினிமாக்காரர்கள் முன்ஜாக்கிரதையாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ரிஸ்க் அதிகமுள்ள தொழில்களில் ஒன்றான சினிமாவுக்கு இப்போது இன்சூரன்ஸ் செய்வது வாடிக்கையாகி வருகிறது.
ரஜினி, கமல் உள்பட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இப்போது கட்டாய இன்சூரன்ஸ் என்பதில் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நடிகர்களே கவனமாக உள்ளனர்.
இந்த காப்பீட்டால் படங்களின் ஷூட்டிங்குகளின் போது ஏற்படும் விபத்துக்களுக்கு ஓரளவு நஷ்ட ஈடு கிடைக்கிறது.
முன்பு ரஜினியின் சிவாஜி, எந்திரன் படப்பிடிப்புகளின்போது நடந்த சிறு விபத்துக்களுக்கு நஷ்ட ஈடு கிடைத்தது. அதேபோல மணிரத்னத்தின் ராவணன் பட செட் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. அதற்காக ரூ 30 லட்சம் இழப்பீடு கிடைத்தது.
இப்போது ரஜினி நடிக்கும் 'கோச்சடையான்', கமல் நடிக்கும் 'விஸ்வரூபம்', ஆர்யாவின் 'இரண்டாம் உலகம்', மணிரத்னம் இயக்கும் 'கடல்', பாலா இயக்கும் 'பரதேசி' படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன.
Related Posts Plugin for WordPress, Blogger...