Enthiran – A film that everybody rejected

The poster of 'Enthiran', India's biggest box office hit. CHENNAI: What would you think of a film that had a storyline that was earlier rejected by several quarters; a film that was struck by economic recession soon after the shooting began; a film that changed producers because of want of funds; and a film that took three years to be completed?

It had all the hallmarks of a box office disaster waiting to happen. But here’s the twist. This jinxed project turned into a blitzkrieg and changed the face of the Indian film industry, as far as sci-fi filmmaking is concerned. That’s the story of ‘Enthiran’.

The numbers say it all: The Rs 200-crore Rajni-Aishwarya starrer, the costliest Indian film ever made, reaped over Rs 300 crore within a fortnight of its release.

It was simultaneously released in the highest number of theatres, a whopping 3,000 screens. In Chennai, ‘Enthiran’ opened to over 200 shows a day.

Casting legends in the film industry - from Rajnikanth to Aishwarya Rai Bachchan and AR Rahman — ‘Enthiran’ was meant to display the might of both the actors and the production house, Sun Pictures, who entered film production through it.

In another first, a reported Rs 60 crore was devoted entirely to promote this technically path-breaking film. It helped make the film Indian cinema’s highest grosser. The release of nearly a dozen Tamil films was put off or advanced so as not to compete with the magnum opus.

Rajni never likes promoting his flicks, perhaps one reason why he continues to be an enigma to fans. ‘Enthiran’ changed that for good as he did not miss any opportunity — from the small screen to radio stations — to offer promotional interviews ahead of the release. Rajni shared the spotlight at all occasions with producer Kalanithi Maran.

In an industry where the superstar was seen as bigger than the product itself, ‘Enthiran’ charted a new course. And these efforts more than paid off. ‘Enthiran’ scripted success not only in Tamil, where the superstar reigns supreme, but in Bollywood as well. It beat Aamir Khan’s ‘3 Idiots’ hands down at the box office.

Apart from raising the bar for Tamil films in terms of technical brilliance, ‘Enthiran’ has just crossed another milestone: it was included as a case study for film success in the curriculum of the best B-school in India — IIM Ahmadabad.

Better distribution network

“‘Enthiran’ came as the savior for theatre owners, who had seen only one hit film so far this year in the State, ‘Singam’. ‘Enthiran’ was distributed in such a way that theatre owners did not lose money. We, the theatre owners, are going to convene a meeting in early January to discuss how films next year can be released with similar mechanisms. By regulating the release of films in the future, we want to ensure that screening films remains a profitable venture,” says Sridhar, joint secretary, Tamil Nadu Theatre Owners Association.

- Indian Express

Director Shankar received Indian of the year in entertainment

On receiving the CNN-IBN Indian of the Year award in entertainment category in the Capital this past week, Shankar says it has encouraged him to continue working on innovative bold scripts. “Earlier, I used to feel whether it is worth putting so much effort. But finally I have realised that hard work pays.” He also mentioned that Rajini sir's co-operation, his hard work and his huge fans following helped for the success of Endhiran movie.





Video clip of Director Shankar recieving Indian of the Year in entertainment award



On behalf of Superstar Rajinikanth and his fans, we heartfully congratulate director Shankar and we are proud of you!

எந்திரன் மூலம் பரந்து விரிந்த ரஜினியின் ராஜ்ஜியம்!

ந்தியத் திரையுலகில் எந்திரன் பெற்றுள்ள வெற்றி எத்துனை பெரியது, முக்கியத்துவம் பெற்றது, தனித்துவம் பெற்றது என்பதை பற்றி விரிவாக அலசி 28/12/2010 அன்றைய Times of India நாளிதழ் மெயின் ஷீட்டில் இரண்டாம் பக்கத்தில் ஒரு மிகப் பெரிய கட்டுரை வெளியாகியுள்ளது.

robot  making 1 B 640x519  எந்திரன் மூலம் பரந்து விரிந்த ரஜினியின் ராஜ்ஜியம்!

முக்கியத்துவம் வாய்ந்த இந்த் கட்டுரையை தமிழில் அளிக்க வேண்டும் என்பதால் ஒரிஜினல் ஸ்கேனிங் பக்கத்துடன் கூடவே மொழிபெயர்த்தும் தந்திருக்கிறேன். (நாம் இதுவரை மொழி பெயர்த்த கட்டுரைகளில் மிகவும் கடினமான அதிக நேரம் பிடித்த கட்டுரை இது. ஆனாலும் படிக்க படிக்க, எழுத எழுத சுவாரஸ்யம்!)

————————————————————————————–
தமிழ் சினிமாவை ஆளும் ரோபோ! – Times of India – 298/12/2010

2010 – சூர்யா சிங்கத்தின் மூலம் கர்ஜித்தார். விஜய் சுறாவின் மூலம் காணமல் போனார். சிம்பு தனக்கு தானே எம்.ஜி.ஆர். பாணியில் எஸ்.டி.ஆர். என பெயரிட்டுக்கொண்டார்.(??!!), ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தனது இமேஜை மாற்ற முயற்சித்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மூலம் சாகவரம் பெற்றுள்ள நண்பேண்டா என்ற வாசகத்தை தந்தார் ஆர்யா. ஆனால் இவர்கள் அனைவரையும் ஒரு ரோபோ தூக்கி சாப்பிட்டுவிட்டது. பத்து நாட்கள் படம் ஓடுவதையே பெரிய விஷயமாக கருதி போஸ்டர் ஒட்டி பார்ட்டி கொடுத்து தயாரிப்பாளர்கள் கொண்டாடும் இன்றைய சூழ்நிலையில், அக்டோபர் 1 இல் ரிலீசாகி நூறாவது நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் எந்திரன் இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திரையுலகம் மற்றும் இன்றைய சினிமாவின் போக்கு குறித்த அனைத்து எதிர்ப்பார்ப்புக்களையும் ஆரூடங்களையும் பொய்யாக்கிவிட்டு, முற்றிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான படங்களை வெற்றிப் பெறச் செய்திருக்கிறார்கள் மக்கள் இந்த ஆண்டு.

robot  making 1 A 640x519  எந்திரன் மூலம் பரந்து விரிந்த ரஜினியின் ராஜ்ஜியம்!

உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்: தமிழில் நீண்ட காலத்துக்கு பிறகு வெளிவந்த கௌபாய் படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,’ தமிழ் சினிமாவின் செக்குமாட்டுத் தனத்தை கிண்டலடித்து வெளியான ‘தமிழ் படம்’, ஒரு மெல்லிய காதல் கதையினூடே நம்மை ஆங்கிலயேர் காலத்துக்கு கூட்டி சென்ற ‘மதராசப்பட்டினம்’, லிங்குசாமியின் ‘பையா’, நமது மண்மணத்துடன் கிராமியக் காதலை அழகாக சொல்லிய பிரபு சாலமனின் ‘மைனா’, என தமிழ் சினிமாவின் வெற்றி இந்த ஆண்டு ஒரு கதம்பாக அமைந்தது.

இந்த படங்களுக்கு நடுவே, புயலாக நுழைந்த எந்திரன், பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை, சுழன்றடித்து வயது வித்தியாசம், ஜாதி மதம், இனம் மொழி வேறுபாடு இன்றி, அனைவரையும் ஆட்கொண்டு, பாக்ஸ் ஆபீஸ் சூறாவளியாக உருவெடுத்து, பல ரெக்கார்டுகளை உடைத்து, புதிய சாதனைகளை படைத்தது. இதன் மூலம் தனது உச்சநிலையை, ராஜ்ஜியத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் புவியின் மற்ற பக்கங்களிலும் தக்கவைத்துகொண்டார் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அசாத்திய ஈர்ப்பு சக்தி, இசைப்புயல் ரஹ்மானின் மேஜிக், இவை தவிர எந்திரனின் பிரம்மாண்ட வெற்றிக்கு மற்றொரு காரணம் இருந்தது. படத்தில் கச்சிதமாக செய்ப்பட்ட VISUAL EFEX எனப்படும் கிராபிக்ஸ் தான் அது.

இந்திய சிநாம்வில் அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எந்திரன் தான் முன்னோடி என்றால் மிகையாகாது.

அனிமேட்ரானிக்ஸ் என்றால் என்ன? (இயந்திரங்களின் அசைவுகளை கொண்டு உயிருள்ள பொருட்களுக்கனான அசைவுகளை செய்தல். ஜூராசிக் பார்க் இப்படித் தான் செய்யப்பட்டது.)

அதை போல ‘light stage technology’ என்னும் நவீன தொழில்நுட்பம். இதன் முன்னோடியும் எந்திரன் தான். ஒரு கூண்டுக்குள் சம்பந்தப்பட்ட நடிகரை உட்காரவைத்து, சுற்றிலும் பல திசைகளிலிருந்து ஒளியை பாய்ச்சி அவரது அங்க அசைவுகள் எப்படியிருக்கும், அவரது உடல் நிறம், தோலின் தன்மை இப்படி பல விஷயங்களை சேகரித்து கிராபிக்க்சில் மறுபதிப்பு செய்தல்). இந்த நவீன தொழில் நுட்பத்தை உலகிலயே பயன்படுத்திய நான்கே படங்களுள் எந்திரனும் ஒன்று. (தெற்காசியாவில் எந்திரன் மட்டுமே!). மற்ற படங்கள் ஸ்பைடர்மேன் II, த க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், & அவதார்.

robot  making 1 C 640x853  எந்திரன் மூலம் பரந்து விரிந்த ரஜினியின் ராஜ்ஜியம்!

மேற்படி ஹாலிவுட் படங்களை ஒப்பிடுகையில் எந்திரன் கிராபிக்சுக்கு செலவிடப்பட்ட தொகை தூசி. எந்திரன் படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸ் சூப்பர் வைசரான, ஸ்ரீனிவாஸ் மோகன் இது பற்றி கூறுகையில், ஹாலிவுட்டின் அறிவியல் படங்கள் பொதுவாக சுமார் 1,000 கோடி ருபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறன. ஆனால் எந்திரனின் மொத்த பட்ஜெட்டே ரூ.160 கோடிகள் தான். அதில், 40 % மட்டுமே ஸ்பெஷல் எபக்டுகளுக்கு செல்வனாது.

அணிமேற்றாநிக்ஸ் தொழில் நுட்பம் தொடர்பான பணிகள், ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோவிற்கும், சில CG பணிகள் அங்குள்ள நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டது. ஆனாலும் 60% பணிகள் இங்கு மோகனின் இந்தியன் ஆர்டிஸ்ட் நிறுவனத்தால்தான் செய்யப்பட்டது. அப்படியிருந்தும் கூட மோகன் படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் பலவற்றை ஹாங் காங், யூ.கே., பிரான்ஸ், ஈரான் என பல நாடுகளில் உள்ள வல்லுனர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யவேண்டியிருந்தது. (இல்லேன்னா படம் அடுத்த அக்டோபருக்கு கூட வந்திருக்காது!).

இது தவிர இந்தியன் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் மற்றொரு புதுமை என்ன தெரியுமா? அனிமேட்டட் ஸ்டோரி போர்ட். அதாவது முழு படமும் 3d கிராபிக்ஸ் செய்யப்பட்டு ஸ்டோரி போர்ட் உருவாக்கப்பட்டது. “ஷங்கர் என்னிடம் முழு கதையையும் முதலிலேயே கூறிவிட்டார். அதற்க்கு பிறகு 3D யில் முழு ஸ்டோரி போர்ட் செய்ய எங்களுக்கு ஆறு மாதம் பிடித்தது. ஆனால் அது தயாரான பிறகு ஷூட்டிங் ஜெட் வேகத்தில் நடைபெற்றது. டைரக்டர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உள்ளிட்ட அனைவருக்கும் அவரவர் பணி சுலபமாக இருந்தது. ஆகையால் நேரமோ, ஃபிலிமோ எதுவுமே வேஸ்டாகவில்லை. நிறைய அவற்றை மிச்சப்படுத்த முடிந்தது.

அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ், ‘light stage technology’ தொழில்நுட்பம் போன்றவற்றை கொண்டு என்ன செய்ய முடியும் என்று நிரூபித்தது மட்டுமல்லாமல் இது குறித்த விழிப்புணர்வை திரையுலகிற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தியது எந்திரன் என்றால் மிகையாகாது. “இதுக்கு முன்னாடியெல்லாம் டைரக்டர்கள் எங்களை கூப்பிட்டு மேட்ரிக்ஸ் டைப் சண்டை காட்சிகள் வேணும். அதுவும் ரெண்டு மூன்று நாட்கள்ல தயார் செய்து தரனும் அப்படி இப்படின்னேல்லாம் கேப்பாங்க. ஆனா இப்போ அவங்களுக்கு ஓரளவு விஷயம் புரிஞ்சிருக்கு. எல்லாத்துக்கும் திட்டமிடல் வேணும்கறதை அவங்க உணர்றாங்க.

“அது மட்டுமா, இங்கே இந்தியாவிலும் அறிவியல் ரீதியிலான கதைகளை படமெடுக்க முடியும், அதுவும் வெற்றிகரமாக எடுக்க முடியும் என்பதை எந்திரன் நிரூபித்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. இது போன்ற படங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது” என்று கூறுகிறார் மோகன்.

இதன் தொடர்ச்சியாக DreamWorks Pictures, Sony Pictures Imageworks, Rhythm & Hues போன்ற நிறுவனங்கள் கிராபிக்ஸ் பணிக்கு ஆளெடுத்துவருகின்றன.

என்ன, அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் தொழிலுக்கு இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசு ஆதரவு வேண்டும். அப்போது தான் நாம் இங்கு மேலும் மேலும் அது போன்ற படங்ளை தயாரிக்க முடியும். அடுத்த 3 – 5 ஆண்டுகளில் இந்த துறை ஐந்து மடங்கள் வளர்ச்சி காணும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐ.டி.துறை போலவே, இந்த துறையிலும் அவுட் சோர்சிங்குகள் செய்யப்படுகின்றது. என்ன அதற்குரிய ஆதாயம் கிடைப்பதில்லை. இந்த நிலை மட்டும் மாறினால், அடுத்த் ‘அவதார்’ நிச்சயம் இங்கு தயாரிக்கப்படும்.

Times of India scan page:

TOI 28  12 10 640x699  எந்திரன் மூலம் பரந்து விரிந்த ரஜினியின் ராஜ்ஜியம்!

[END]

ஐஸை காப்பாற்றிய எந்திரன்!

‘படையப்பா’ படம் முதலே ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர விரும்பி, சூப்பர் ஸ்டார் அவரிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். டேட்ஸ் பிரச்னை, ஏற்கனவே ஒப்புக்கொண்ட கமிட்மென்ட்டுகள் உள்ளிட்ட பல காரணங்களால் தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய், இறுதியில் ஒரு வழியாக எந்திரனில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

Robot3  ஐஸை காப்பாற்றிய  எந்திரன்!

ஐஸ்வர்யா ராய் எந்திரனில் நடிப்பதை பல ரசிகர்கள் அன்றைய சூழலில் விரும்பவில்லை. தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகைகள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். (ஆனால், நம் சாய்ஸ் தீபிகாவாக இருந்தது!).

இந்நிலையில், மேற்படி காரகடருக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று உறுதியாக நம்பிய ஷங்கர், அவரிடம் கதை சொல்லி, மிகப் பெரிய ஊதியத்தை அவருக்கு பேசி, சம்மதிக்க வைத்தார். ஐஸ்வர்யா ராயும் ஒப்புக்கொண்டார். (படம் வெளியான பிறகு புரிந்தது ஐஸ்வர்யா ராயை தவிர வேறு யாரும் அந்த காரகடருக்கு பொருந்தமாட்டார்கள் என்று. Wonderful selection! Stupendous performance!)

சூப்பர் ஸ்டாருடன் படப்பிடிப்பில் பழகிய நாட்கள் ஐஸ்வர்யா ராய்க்கு தலைவரின் செல்வாக்கு என்ன, அவரது ரேன்ஜ் என்ன, தான் உண்மையில் எங்கு இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது. விக்கை வைத்து, மேக்கப்பை போட்டு, வயதை மறைக்கும் பாலிவுட் நடிகர்களையே பார்த்து பழக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்க்கு சூப்பர் ஸ்டாரின் எளிமையும், உண்மையும், யதார்த்தமும், வியப்பை தந்தன. சூப்பர் ஸ்டாரின் மக்கள் செல்வாக்கை கண்டு அவர் வியந்த பல தருணங்கள் ஷூட்டிங் சமயங்களில் நடந்தது.

“சூப்பர் ஸ்டார் ரஜினி எத்துனையோ முறை என்னிடம் தனது படங்களில் நடிக்க கூப்பிட்டிருக்கிறார். ஆனால், என்னால் டேட்ஸ் கொடுக்க இயலவில்லை. ஆனாலும் அவர் கொஞ்சம் கூட தவறாக நினைக்கவில்லை. அது தான் அவரது பெருந்தன்மை. அதற்காக நான் இப்போது வெட்கப்படுகிறேன்” என்று ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூட கூறியிருப்பார்.

இதோ, 2010 ஆம் ஆண்டு ரிசல்ட் வந்துவிட்டது. பாடிபில்டிங் ஹீரோக்களுடன் ஐஸ்வர்யா ராய் நடித்த ஆக்க்ஷன் ரீப்ளே, குஷாரிஷ் மற்றும் கணவர் அபிஷேக்குடன் நடித்த மணிரத்னத்தின் ராவண் ஆகியவை படு தோல்வியை தழுவ அவரை கைகொடுத்து காப்பாற்றியிருப்பது சூப்பர் ஸ்டார் மட்டுமே. 2010 ஆம் ஆண்டு வெளியான படங்களில் எந்திரன் முதலிடத்தை கைப்பற்றியது மட்டுமல்லாமல், இந்திய சினிமா சரித்திரத்தில் மிகப் பெரிய பிலாக்பஸ்டர்களில் ஒன்றாக இடம்பிடித்தது. எந்திரன் படத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்க வில்லையெனில் அவர் இந்நேரம் முன்னால் ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பார். அவரது கேரீர் கிராஃப்பை ரோபோ சற்று நீட்டித்திருக்கிறது எந்திரன் என்றால் மிகையாகாது.

ஐஸ்வர்யா ராய் நடித்தால் அவரால் தான் எந்திரன் வட மாநிலங்களில், அயல்நாடுகளில் எந்திரன் வெற்றிபெற்றது என்று யாராவது சொல்லக்கூடும் என்று கருதி, பல ரசிகர்கள் அவர் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், பிற்பாடு படம் வெளியான பின்பு, விமர்சனம் எழுதிய பல வட இந்திய ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள், தலைவரின் ஈர்ப்பாலும், ஷங்கரின் இயக்கத்தாலும் மட்டுமே எந்திரன் இந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்று எழுதி கடைசியில் ஐஸை கண்டுகொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டாரின் அபரிமிதமான CHARISMA உலக அழகி ஐஸ்வர்யா ராயை பின்னுக்கு தள்ளியது.

இதோ இந்த ஆண்டு வெளியான படங்களின் ரிப்போர்ட் கார்டை ‘எகனாமிக் டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள இந்த அலசலின் தமிழாக்கத்தை கீழே தருகிறேன். ஒரிஜினல் ஆங்கில எழுத்துரு கடைசீயில் தரப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வெற்றிக்கோப்பை எந்திரனுக்கே! – ‘எகனாமிக் டைம்ஸ்’

2010 ஆம் ஆண்டு பாலிவுட்டை பொறுத்தவரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் ராஜநீதி, டபாங் ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றன. ராவண், கைட்ஸ், குஷாரிஷ் உள்ளிட்ட எதிர்பார்க்கப்பட்ட படங்கள் அதிர்சியடையத் தக்க வழியில் தோல்வியை தழுவின.

அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்துடன் இந்த ஆண்டு சிறப்பாக துவங்கியது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீசானாலும் இந்த ஆண்டும் தொடர்ந்து ஓடி, வரலாறு படைத்தது.

Robot AlbertJ 640x424  ஐஸை  காப்பாற்றிய எந்திரன்!

Fans dancing in Albert theatre during Endhiran screening

ஆனால், வெற்றி மகுடம் செல்வது யாருக்கு தெரியுமா? எந்திரன். ஆம், சூப்பர் ஸ்டார் ராஜினி நடிப்பில் வெளியான எந்திரனுக்கு தான் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி கோப்பை. ரஜினியின் மேஜிக் என்று சொல்லுங்கள் அல்லது இயக்குனரின் ஷங்கரின் அசத்தலான பேக்கேஜிங் என்று சொல்லுங்கள்.. எப்படி சொன்னாலும் சரி…. வெற்றி மாலை எந்திரனுக்கே. மொழி எல்லைகளை கடந்து அது குவித்த வரவேற்பும் வெற்றியும் இதை சாத்தியப்பட வைத்தது.

ரஜினிக்கு நன்றி. ஆம், ஐஸ்வர்யா ராயின் மற்ற படங்கள் (ராவண், குஷாரிஷ், அக்ஷன் ரீப்ளே) தோல்வியை தழுவ அவரை காப்பாற்றியது எந்திரன் தான்.

இதை தவிர சல்மான் கானின் வீர், அக்க்ஷை குமாரின் கட்டா மீட்ட, ஆக்க்ஷன் ரீப்ளே உள்ளிட்ட வேறு சில படங்களும் தோல்வியை தழுவின. மேற்படி தோல்விப் படங்களால் ஏற்பட்டுள்ள இழப்பு மட்டுமே சுமார் ரூ.400 முதல் 500 கோடி வரை இருக்கும். (அட… எங்க எந்திரன் மொத்த வசூலப்பா அது!)

Bollywood 2010: Masala makes comeback, biggies disappoint

MUMBAI: Hardcore commercial films with rural backdrop made a big bang in 2010 with the success of ‘Raajneeti’ and ‘Dabangg’ but many other mega budget films like ‘Raavan’, ‘Kites’ and ‘Guzaarish’ flopped at the box office.

The year began on a high note with Aamir Khan starrer ’3 Idiots’. Though the film released in late December in 2009, it continued to do well in 2010 with its feel-good appeal. The Rajkumar Hirani directed movie is now one of the biggest blockbusters of the recent times.

However, it was Rajnikanth starrer Tamil film ‘Endhiran’, that took the crown of being the biggest hit of year. Call it the sheer magic of Rajni’s presence or director Shankar’s neatly packed action-sequences, the movie transcended language barriers to emerge the highest grosser of the year.

Thanks to Rajni, Bollywood beauty Aishwarya Rai got her only hit of the year with two of her mega budget movies like ‘Raavan’ and ‘Action Replayy’ failing to do well.

Small budget films like ‘Tere Bin Laden’, ‘Udaan’, ‘Phas Gaye Re Obama’ continued to surprise the convention-loving industry by earning big bucks in theatres without any backing from big stars or producers.

Some of the major disappointments of the year came from top stars and directors. Much anticipated films like ‘Mani Ratnam’s grand cinematic effort ‘Raavan’, Ashutosh Gowariker’s freedom saga ‘Khelein Hum Jee Jaan Se’ and Hrithik Roshan and Mexican stunner Barbara Mori’s ‘Kites’ failed to take flight despite the hype surrounding them.

Apart from these movies, other biggies like Salman Khan’s ‘Veer’ and Akshay Kumar-Aishwarya Rai starrer ‘Action Replayy’, Akshay’s ‘Khatta-Meetha’ also flopped.

According to trade analyist Taran Adarsh, the failure of these movies resulted in a loss of about Rs 400 to Rs 500 crore.

Another trade analyst Amod Mehra said the losses would be more than Rs 500 crore as Salman Khan’s rustic entertainer ‘Dabangg’ and ‘Golmaal 3′ were the only two superhits of the year while Prakash Jha’s ‘Raajneeti’, Milan Luthria’s period crime thriller ‘Once upon a time in Mumbai’ and ‘I hate Luv Storys’ did well.

Shah Rukh Khan’s ‘My Name Is Khan’, Aamir Khan’s ‘Peepli Live’, which is also India’s official entry to the Oscars, and Sajid Khan’s madcap ‘Housefull’ also fared well at the box office.

Mehra said a total of 237 movies including those dubbed were released during the year. “2010 was very bad. There were more flops and a very few hits. No particular trend was witnessed except the fact that hardcore commercial films were back in the business,” he said.

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/bollywood-2010-masala-makes-comeback-biggies-disappoint/articleshow/7144023.cms

ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை!

ஜினி என்ற நடிகனை விட அவருடைய தன்னடக்கம் பெருந்தன்மை எளிமை அனைவரிடமும் பந்தா இல்லாமல் பழகும் குணம் போன்றவற்றிக்கு ரசிகர்கள் அதிகம். இதை அவர் இதற்காக செய்ய வேண்டும் என்று செய்வதில்லை அவருடைய இயல்பே அது தான். ரஜினியைப்போல அமைதியாக இருக்க ஒரு சிலர் முயற்சித்தாலும் அல்லது அவரைப்போல நடக்க முயற்சித்தாலும் அது நடிப்பாகவே தெரிவதால் மக்களிடம் அவர்களால் ரஜினியைப்போல நன்மதிப்பை பெற முடிவதில்லை.

மற்றவர்களின் படங்களைப்பாராட்டி அவர்களுக்கு ஊக்கம் தருவதில் ரஜினியை மிஞ்ச யாருமே இல்லை இதைக்கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை. கலைஞரோட பெண் சிங்கம், தனுஷ் படங்கள் உட்பட பல மொக்கைப்படங்களை ரஜினி வேறு வழி இல்லாததால் பாராட்ட வேண்டி வரும் ஆனால் அவை எல்லாம் தவிர்க்க முடியாத விஷயங்கள். படம் பார்த்து வருபவர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படம் எடுத்தவர்கள் மனம் வருத்தப்படக்கூடாது என்று சம்பிரதாயமாக கூறும் வார்த்தைகள்.

ரஜினி உண்மையிலேயே அது சிறந்த படமாக இருந்தால் அந்தப்படக்குழுவினரை தனியாக அழைத்து பாராட்டி கவுரவிப்பார் அந்தப்படத்தைப் பற்றி தனது எண்ணங்களைக் கடிதமாக அனுப்பி வைப்பார். இது தான் சம்பிரதாய பாராட்டிற்கும் உண்மையான பாராட்டிற்கும் உள்ள வித்யாசம். எடுத்துக்காட்டாக நான் கடவுள், வெண்ணிலா கபடிக்குழு சமீபத்திய மைனா வரை பல நல்ல படங்களைக் கூறலாம். அதிலும் குறிப்பாக மைனாவை கூறலாம் தனது மருமகன் படம் உடன் வெளியாகி இருந்தும் மைனாவை மனம் திறந்து பாராட்டி எழுதியது குறிப்பிடத்தக்கது.

விசயத்திற்கு வருகிறேன்..

rajini+kamal ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம்  கமலுக்கு இல்லை!ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தொழில்முறையில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் தங்களின் கருத்து வேறுபாடுகளை என்றும் தங்களுடைய நட்பில் போட்டுக்குழப்பிக் கொள்வதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கமலின் திரையுலகம் 50 ஐ குறிப்பிடலாம். இதில் இருவருமே பேசிய பேச்சுகள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு விஷயம்.

ஆனால் ரஜினி எப்போதுமே கமலை விட ஒருபடி உயர்வாக தன்னுடைய நட்பை வெளிப்படுத்தி வருகிறார். அது திரைப்படமாக இருக்கட்டும் பொது வாழ்க்கை ஆகட்டும் எப்போதும் கமலை விட்டுக்கொடுத்ததில்லை. ஒரு உண்மையான நல்ல நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறார். திரைப்படம் என்றால் பல படங்களைக் கூறினாலும் எடுத்துக்காட்டாக சிவாஜியில் முல்த்தானி மெட்டியில் குளித்து விட்டு “கமலஹாசன் மாதிரி வரப்போகிறேன்” என்று கூறுவதும் சமீபத்திய எந்திரன் படத்தில் கமலுடைய தொலைபேசி எண்ணை ரோபோ சொல்லும் போது அது அனைவருக்கும் தெரியும் என்று கூறுவதிலும் எப்போதும் கமலை இணைத்தே வந்து இருக்கிறார்.

இவை எல்லாம் இயக்குனர் வைத்தக்காட்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அதை ரஜினி அனுமதிக்கவில்லை என்றால் வர வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரஜினியின் விருப்பமில்லாமல் இன்னொரு நடிகரைப்பற்றி வசனம் வர வாய்ப்பில்லை இது ரஜினி என்றில்லை அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பொருந்தும். இதைப்போல கமலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அப்படி எதிர்பார்ப்பதும் ஒரு அர்த்தமற்ற செயல். ஏனென்றால் ஒவ்வொருவொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் இருக்கும் அதன் படி நடப்பார்கள் அதில் நாம் ரஜினி வைக்கும் போது கமல் ஏன் வைக்கக்கூடாது என்று கேட்பது நியாமான ஒன்றில்லை.

கமல் படம் என்று வெளியானாலும் ஆர்வமாக சென்று பார்த்து அதைப் பாராட்டி அது நன்றாக உள்ளதோ இல்லையோ அவருக்கு ஒரு உற்சாகமான வார்த்தையைக் கூறி அவரை பாராட்டுவார். தனக்கு நெருக்கமில்லாத அறிமுகமில்லாத இயக்குனர் படங்கள் வெளிவந்தாலே அதைப்பாராட்டுபவர் அப்படி இருக்கும் போது தன்னுடைய நெருங்கிய நண்பன் படம் வரும்போது பாராட்டாமல் இருப்பாரா! அதை இது வரை தவறவிடாமல் பாராட்டி வருகிறார். பாராட்டி வருகிறார் என்பது பொய் என்று சிலர் நினைத்தாலும் கமலுக்கு உற்சாகம் கொடுக்கிறார் என்ற வாதத்தை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் கமல் இன்று வரை ரஜினியின் எந்திரன் படத்தை பாராட்டவில்லை படம் வெளிவந்து நீண்ட நாட்களுக்குப்பிறகு அவரிடம் எடுத்த பேட்டியில் பின்வருமாறு கூறி இருக்கிறார். தமிழ்படுத்தினால் அர்த்தம் மாறலாம் என்று அப்படியே கொடுத்து இருக்கிறேன்.

Robot” is successful not because of the content, but due to the marketing strategy and of course, Rajini is a saleable star. Huge-budget films are good as long as they have solid content

கமல் உங்களுக்கு எப்படி இதைப்போல கூற முடிந்தது! விளம்பரத்தால் ஒரு படம் வெற்றி பெற முடியும் என்றால் அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்ட சன் பிக்சர்சின் “வேட்டைக்காரன்” “சுறா” போன்ற படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? கண்டிப்பாக படம் என்றில்லை எதற்கும் ஒரு விளம்பரம் அவசியமே ஆனால் அது மட்டும் ஒருவருக்கு வெற்றியைத் தந்து விடாது என்பது நிரூபிக்க எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். ஒருபடத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக அமைந்தால் மட்டும் ஒரு படம் வெற்றி பெற முடியும்.

உங்களின் மன்மதன் அம்பு படத்திற்குக் கூட இந்தியாவில் இருந்து பலரை மலேசியா அழைத்து வந்து அங்கே இருந்து சிங்கப்பூருக்கு சொகுசு கப்பலில் அழைத்து வந்து பிரம்மாண்டமாக பாடல் வெளியீட்டு விழா நடத்தினீர்கள். தமிழகத்தில் எப்படியோ இங்கே சிங்கப்பூர் உள்ளூர் தொலைக்காட்சியில் வார இறுதியில் உங்கள் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைத் தான் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள். இது இல்லாமல் விஜய் டிவி யில் சிறிது நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் வந்து படத்தைப் பற்றிக் கூறிக்கொண்டு இருந்தீர்கள். எந்திரன் அளவிற்கு இல்லை என்றாலும் அதற்கு போட்டியாக விளம்பரம் செய்து கொண்டு இருந்தீர்கள். இந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்பட்ட உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட உங்கள் மன்மதன் அம்பு படம் எப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்கள் படத்தை வாங்கிய ஜெமினி பிலிம் நிறுவனத்தை கேட்டுப்பாருங்கள் விளக்கமாக கூறுவார்கள்.

ரஜினி ஒரு விற்பனை மதிப்புள்ள நபர் தான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அப்படி நீங்கள் நினைக்கும் ரஜினி நடித்த பாபா மற்றும் குசேலன் படம் ஏன் வெற்றி பெறவில்லை? உங்களை விட உங்கள் நண்பர் ரஜினி இதை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார் அதனால் தான் குசேலன் படத்தின் ஒரு காட்சியில் “யார் நடித்தாலும் படம் சரி இல்லை என்றால் மக்கள் படத்தை புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறி இருப்பார். எனவே யாராக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் இல்லை என்றால் படம் பப்படம் தான்.

ரஜினி கமலின் மன்மதன் அம்பு படத்தை விருப்பமாக கேட்டுப் படம் வெளியான நாளுக்கு ஒரு நாள் முன்பு பார்த்து அவரை உற்சாகப்படுத்தினார். கமல் ரஜினியின் அனைத்து படங்களையும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமான ஒன்று. ஒரு குசேலன் படத்தையோ பாபா படத்தையோ அல்லது பக்கா மசலாப்படமான சிவாஜி படத்தையோ பாராட்டக் கூறி எதிர்பார்க்கவில்லை ஆனால் எந்திரன் படம் அப்படி அல்ல.

கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகருக்கு எடுத்துக்காட்டாக கமலைத்தான் கூறுவார்கள் தற்போது சூர்யா போன்று ஒரு சில இளம் நடிகர்களும் வந்து விட்டாலும் இன்றும் பலரின் நினைவிற்கு வருவது கமல் தான். மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேர மேக்கப் போட்டு மிகவும் சிரத்தையாக நடிப்பார் அதைப்பற்றி பேட்டியும் கொடுத்து இருப்பார். எனக்கு இன்று வரை கமலின் மேக்கப் என்றால் நினைவிற்கு வருவது அன்பே சிவம் படம் தான் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட 100 மடங்கு சிறந்த ஒன்றாகும்.

Rajini with Mask ரஜினியின் பெருந்தன்மை  நிச்சயம் கமலுக்கு இல்லை!ரஜினி மேக்கப் போட சிரமம் எல்லாம் எடுப்பதில்லை அதற்கு காரணம் ரஜினி தேர்ந்தெடுக்கும் கதைகள் அப்படி. இதைப்போல ரஜினியின் படத்திற்கு எந்திரன் படத்தைக் கூறலாம். பல மணிநேரம் மேக்கப் போட எடுத்துக்கொண்டார். சன் டிவி பேட்டியில் கூட “இரண்டு மணி நேரத்துல பானு மேக்கப் போட்டுடுவாங்க” என்று கூறிய போது நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. இரண்டு மணி நேரம் என்பது என்ன இரண்டு நிமிஷமா! எளிதாகக்கூற. தான் கஷ்டப்படுவதை பட்டதை என்றுமே பெருமையாக கூறிக்கொண்டதில்லை அதனால் தான் என்னவோ 7 மணி நேரம் அசையாமல் ரோபோ கதாப்பாத்திரத்திற்க்காக போட்ட மேக்கப்பைக்கூட கூறியதில்லை. மேக்கிங் ஆஃப் எந்திரன் மட்டும் சன் டிவி வெளியிடவில்லை என்றால் ரஜினி பட்ட சிரமம் எவருக்குமே தெரிந்து இருக்காது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெண்கள் பலர் இவர் எதுக்கு எவ்வளோ கஷ்டப்படனும் என்று தான் நினைத்தார்கள். ரசிகர்கள் எல்லாம் வாயடைத்து விட்டார்கள் எவருமே ரஜினி இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்ல ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள். இவ்வளவு சிரமப்பட்டு ரஜினி நடித்த படத்தை இந்திய அளவில் ஒரு தமிழ் படத்தை உயர்த்திய, வசூலில் இந்தியாவில் தற்போதைய நிலவரத்திற்கு முதல் இடத்தில் உள்ள ஒரு தகுதியான படத்தை குறைந்த பட்சம் கூட பாராட்டாமல் கூறியதைக் கூட ஏனோ தானோவென்று கமல் கூறியதை என்னவென்று கூறுவது!

ரஜினி ஏன் எப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறார்! அனைவராலும் புகழப்படுகிறார் என்பதற்கு காரணம் அவரின் பெருந்தன்மையும் ஒன்றாகும் கமல் தனிப்பட்ட முறையில் ஒருவேளை ரஜினியைப் பாராட்டி இருக்கலாம் ஆனால் ஒருவரை இதைப்போல விசயங்களில் அனைவர் முன்பும் பாராட்டுவதே சிறப்பாகும். நம்முடைய அலுவலகத்தில் கூட நம்மை தனியாக அழைத்துப் பாராட்டுவது எப்படி அனைவர் முன்பும் பாராட்டுவது எப்படி! இதை எல்லாம் ரஜினி என்றும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அவரைப்போல அவரது ரசிகர்களும் இருப்பதில்லை.

நண்பேன்டா! என்ற வார்த்தைக்கு முழுத்தகுதியானவர் ரஜினி மட்டுமே! கமல் சிறந்த நடிகராக இருக்கலாம் நல்ல மனசு, நட்பு என்று வந்தால் அங்கே சந்தேகமில்லாமல் ரஜினியே அனைவரின் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.

- http://www.giriblog.com

Petty beauty eyes to pair up with Rajinikanth


Trisha who paired with Ulaganayagan Kamal in Manmadhan Ambu has set her eyes on the superstar Rajinikanth to share the screen space in 2011

Trisha has also signed many commericals on television these days, reveals that the actress has plans to catch hold of he number one position in Tollywood which has been taken over by Ileana and Anushka in the recent times.

She also plans to take another baby step into Bollywood to try her luck this time.

Well, that`s a good planning Trisha.

KS Ravi Kumar made Rajini wait

Soundarya Rajinikanth’s Hara (earlier titled Sultan – the Warrior) was to have recommenced in December. But this plan was postponed as director KS Ravi Kumar as held up with the Manmadhan Ambu release.

Hara was initially planned as a full-fledged animation movie with Soundarya directing and producing it. But later, there was a change in plan and it was decided to make a part of it as a feature film.

KS Ravi Kumar was approached with the offer to direct Rajini in the feature film portion and the director gladly accepted the offer with the condition that he will be able to do so only after Mamadhan Ambu’s release. With the release of Manmadhan Ambu, Hara’s shooting is expected to commence very soon.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடப் படத்தில் ரஜினி!!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடப் படம் ஒன்றில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. நடிக்கிறார் என்பதை விட, சில நிமிடங்கள் நட்புக்காக தோன்றுகிறார் என்பதே சரியாக இருக்கும்.

அந்தப் படத்தின் பெயர் ஜோகய்யா. கன்னட திரையுலகின் ஜாம்பவனான மறைந்த ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார் நடிக்கும் 100 வது படம் இது.

சில வாரங்களுக்கு முன் இந்தப் படத்தின் துவக்க விழா பெங்களூரில் நடந்தபோது, இந்தியத் திரையுலக விவிஐபிக்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இப்போது, இந்தப் படத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரு காட்சியிலாவது ரஜினி நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சிவராஜ்குமார். ராஜ்குமார் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக மிகுந்த நெருக்கமாக இருப்பவர் ரஜினி. எனவே சிவராஜ்குமாரின் இந்த கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புக் கொண்ட ரஜினி, "எப்போது தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்கள், உடனே தருகிறேன்" என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில், ராஜ்குமார் பற்றியும், சிவராஜ் குமாரின் 100வது படம் குறித்தும் அறிமுகம் தருவதாக காட்சிகளை எடுக்கவிருக்கிறார்கள். அதிகபட்சம் 5 அல்லது 6 நிமிடங்கள் இந்தக் காட்சி ஓடக்கூடும்.

ரஜினி கடைசியாக நடத்த கன்னடப் படம் கர்ஜனே. இது தமிழில் கர்ஜனை என வெளியாகி 100 நாட்கள் ஓடியது.
English summary
Superstar Rajinikanth will be appeared in a Kannada movie after 3 decades. Titled Jogayya, the film is the 100th movie of Kannada leading star Sivarajkumar. according to sources, Rajini will appear only for 5 minutes in this film.

நெட்டை கலக்கும் ‘டாய் கூகுல்’ – தி ஹிந்து செய்தி!

ம் தளத்தில் சில நாட்களுக்கு முன்பு, நண்பர் விஜய் ஆனந்த் ஒரு கமெண்ட் அனுப்பியிருந்தார். அதில் தற்போது வலையுலகை கலக்கிகொண்டிருக்கும் ஒரு புதிய தளத்தை பற்றி கூறியிருப்பார்.

Dai  Google HP 640x480  நெட்டை கலக்கும் ‘டாய் கூகுல்’ – தி ஹிந்து செய்தி!

www.daigoogle.com என்னும் அந்த தளம் Search Engine ஐ மையமாக வைத்து வடிவமக்கைப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் பாபா முத்திரை காட்டும் ஒரு ஸ்டில்லுடன் அமைந்துள்ளது. இது பற்றிய செய்தி இன்றைய ஹிந்துவில் வெளிவந்துள்ளது.

DaiGoogle The Hindu  நெட்டை கலக்கும் ‘டாய் கூகுல்’ – தி ஹிந்து  செய்தி!

சூப்பர் ஸ்டாரை பற்றி சில மாதங்களுக்கு முன்பு வந்த கூகுல் ஜோக் உண்மையாகிவிட்டது.

[END]

ஃபோர்ப்ஸ் இதழின் 2010 ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

லகப் புகழ் பெற்றது ஃபோர்ப்ஸ் என்னும் பிசினஸ் இதழ். அதன் இந்தியப் பதிப்பு – ஃபோர்ப்ஸ் இந்தியா. அசத்தலான பிசினஸ் மற்றும் கார்பரேட் செய்திகளுடன் ஒவ்வொரு மாதமும் வெளிவரும் இந்த இதழ், தற்போது YEAR END SPECIAL இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ.100/- மதிப்புள்ள இந்த இதழில், 2010 ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Forbes Cover J 230x300  ஃபோர்ப்ஸ் இதழின் 2010 ஆம்  ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!தொழில் துறை ஜாம்பவான்கள், தலை சிறந்த நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். மற்றவர்களை பொறுத்தவரை அவர்களை பற்றிய ஒரு அலசல்களுடன் அவர்களது பேட்டி மற்றும் கருத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் தலைவர் விஷயத்தில் அவரிடம் கருத்து கேட்பதோ பேட்டி எடுப்பதோ சாதாரணமானதா என்ன?

எனவே, ஒரு வித்தியாசமான கோணத்தில் சூப்பர் ஸ்டாரை பற்றி அலசியிருக்கிறார்கள். நாடே போற்றும் – இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஹிட் படத்தை கொடுத்திருக்கும் ரஜினி என்னும் ஒரு சூப்பர் ஸ்டார் – உண்மையில் எப்படி? அவரது மறுபக்கம் எத்தகையது…? என்று சுவாரஸ்யமாக அலசி, அவரது ஆத்ம நண்பர் ராஜ் பகதூரிடம் பேசி பல விஷயங்களை தந்திருக்கிறார்கள். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.

சூப்பர் ஸ்டாரை எப்படி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் தெரியுமா?

Forbes Content 1J 640x445  ஃபோர்ப்ஸ் இதழின் 2010  ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

பாலிவுட்டில் நடிப்பதை இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திக்கொண்ட ரஜினி, இதோ தற்போது 2010 ஆம் ஆண்டில், அதன் மீது படையெடுத்து கைப்பற்றியிருக்கிறார். அவரின் சமீபத்திய படமான ‘ரோபோ’ பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்து சரித்திரம் படைத்திருக்கிறது. தான் மட்டுமே ‘சூப்பர் ஸ்டார்’ என்பதை மீண்டும் அழுத்தந்திருத்தமாக நிரூபித்திருக்கிறார் ரஜினி. ஆனால், நிஜத்திலோ வெற்றி போதையை தலையில் ஏற்றிக்கொள்ளாது பணிவுடனும் அடக்கத்துடனும் செயல்படுகிறார். புகழ் வெளிச்சத்திலிருந்து விலகியிருக்க கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் அவர் விடுவதில்லை.

Forbes Content New2 640x445  ஃபோர்ப்ஸ் இதழின் 2010  ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

அதற்க்கு அடுத்த சில பக்கங்களில் த்ரீ இடியட்ஸ் படத்தின் இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி பற்றிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. (சூப்பர் ஸ்டார் தவிர சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே திரைத்துறை பிரபலம் இவர் தான். வேறு யாரும் பட்டியலில் இல்லை.). அவரது புகைப்படத்திற்கு கீழே இடம் பெற்றுள்ள வாக்கியத்தை கவனியுங்கள். //”Rajkumar Hirani directed the immensely popular ‘Munnabhai MBBS’, ‘Lage Raho Munnabhai’, and 3 Idiots., which became the highest grossing film ever in India. when it was released. (‘Enthiran/Robot’ recently took its place!).// இது எப்படி இருக்கு!

மலை டா… அண்ணாமலை!

Forbes Content New1 640x433  ஃபோர்ப்ஸ் இதழின் 2010  ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

குறிப்பு 1 : ஃபோர்ப்ஸ் இதழின் முக்கிய பக்கங்களை ஸ்கேன் செய்து இணைத்திருக்கிறேன். கட்டுரையின் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்டாரின் இடப் புறம் கொடுக்கப்பட்டுள்ள க்ளோசப் புகைப்படம் எனது சேர்க்கை ஆகும். கட்டுரையை SINGLE PAGE ஆக கொடுப்பதில் சிரமங்கள் உள்ளன. எனவே ஒரு நல்ல புகைப்படத்தை சேர்க்க விரும்பி அந்த ஸ்டில்லை சேர்த்துள்ளேன்.

குறிப்பு 2 : இந்த கட்டுரையின் தமிழாக்கம் விரைவில் வெளியிடப்படும்.

——————————————-
Please check the following URL for text version: (Total 2 pages)
http://business.in.com/article/person-of-the-year-10/rajinikanth-who-really-is-the-super-star/20452/1
——————————————-

——————————————-
Please check the following URL for text version: (Total 2 pages)
http://business.in.com/article/person-of-the-year-10/rajinikanth-who-really-is-the-super-star/20452/1
——————————————-

Forbes Content 3J 640x892  ஃபோர்ப்ஸ் இதழின் 2010  ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

(Our thanks to Forbes India Magazine and also our site readers Sriram and Vignesh for bringing this to my notice.)

[END]

Rajini Refuses to do Chandramukhi Sequel(சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!)

According to the latest reports, superstar Rajinikanth has denied to do the sequel of his yesteryear blockbuster Chandramukhi. Sources say that the actor advised director P Vasu to approach Ajith for lead role.

Tamil summary

சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ரிலீஸ் செய்து வெற்றி பெற்ற இயக்குநர் வாசு, அதை தமிழில் ரஜினியை வைத்து இயக்க விரும்பினார்.

ஆனால் அப்போது, முதலில் இதை தெலுங்கு இயக்குங்கள், பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம்.

அதன்படி வெங்கடேஷ் - அனுஷ்காவை வைத்து தெலுங்கில் நாகவள்ளி் எனும் பெயரில் எடுத்து வெளியிட்டுள்ளார் வாசு. இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் பார்த்து இயக்குநர் வாசுவைப் பாராட்டினார் ரஜினி.

ஆனால் தமிழில் தான் நடித்தால் சரியாக வராது என்று கூறிய அவர், அஜீத்தை வைத்து எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளார். தேவைப்பட்டால் ஓரிரு காட்சிகளில் நடித்ததுத் தருவதாகவும் ரஜினி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்போது அஜீத்தை அணுகியுள்ளார் இயக்குநர் வாசு.

Rajini in Forbes India 2010 of the List 2010


Forbes India listed Rajinikanth, the superstar of India, as Indian of the year 2010 in its annual edition released recently.

Tamil summary
பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது.

இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தனது கட்டுரையில், 'இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்', என்று புகழாரம் சூட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை, ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Rajini appreciated Kamal


Kamal Haasan hosted a special show in which his forthcoming release Manmadhan Ambu was screened for his close buddy Rajinikanth. Soon after watching the movie, Rajini appreciated Kamal for his excellent work, which not only included acting but also penning story and dialogues.

Manmadhan Ambu is said to be a comedy flick with Trisha, Madhavan, Sangeetha and others included in the star cast. The film is directed by KS Ravi Kumar and produced by Udayanidhi Stalin of Red Giant Movies. Manmadhan Ambu is touted to be a visual treat as a major of the film is shot in a luxury cruise ship.

Rajinikant's 'Muthu','Robot', Part of IIM-A course


"Robot", the Rajinikanth-starrer which became the second highest grosser among Indian films and spawned a slew of Rajini jokes, is set to come to the laboratory of IIM-Ahmedabad. As part of an elective course [^] called "Contemporary film industry: A business perspective", students of the postgraduate programme at IIM-A will take up "Robot" or "Enthiran" as a case study to analyse the business of cinema and its success story. The course will also study "Muthu", another Tamil film starring Rajinikanth. The movie was later translated into Japanese as "Muthu Odoru Maharaja" or "Muthu: The Dancing Maharaja".

Tamil summary
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.

ஐஐஎம் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு எலெக்டிவ் கோர்ஸாக 'Contemporary film industry: A business perspective' என்ற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் குறித்து ஆராய்ந்து கட்டுரை எழுதவேண்டும். இது ஒரு தனி பாடப் பிரிவாகும்.

இந்தப் பிரிவில் இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டின் நாயகனும் ரஜினிதான். இந்தப் படங்களில் ஒன்று முத்து. மற்றொன்று எந்திரன் / ரோபோ.

முத்து திரைப்படம் சர்வதேச அளவில் சாதனைப் படைத்த முதல் இந்தியப் படமாகும். டான்சிங் மகாராஜா எனும் பெயரில் இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி 250 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் சாதனைப் படைத்தது. இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட் உள்ளதை நிரூபித்து, புதிய வர்த்தகத்தைக் காட்டிய படம் முத்து. ரஜினியின் நடனமும், ரஹ்மானின் இசையும் சர்வதேச மக்களையும் ஆட்டி வைத்தன.

அடுத்த படமான எந்திரன், ரஜினியை இந்திய சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்திலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்துக்குக் கொண்டுபோனது. ரூ 380 கோடி வரை வசூலைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஒரு படத்தை பொருத்தமான நடிகர்களைக் கொண்டு திட்டமிட்டு தரமாக உருவாக்குதல், சரியாக மார்க்கெட்டிங் செய்தல், வர்த்தகத்தில் முதல் நிலையில் கொண்டுவந்து நிறுத்துதல், இவை அனைத்துக்கும் மேல், இந்தப் படங்களை ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் வெற்றி பெறச் செய்த விதம் போன்ற பல காரணிகளுக்காக இந்தப் படங்களை முதுகலைப் பட்டதாரிகளுக்கு பாடங்களாக வைத்துள்ளனர்.

ஏற்கெனவே மத்திய அரசின் சிபிஎஸ்ஸி பள்ளி பாடத் திட்டத்திலும் மாணவர்களுக்கு பாடமாக ரஜினியின் வாழ்க்கை வரலாறு வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

இதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெரும் அங்கீகாரம் இது. ஐஐஎம் என்பது உலக அளவில் வணிக மேலாண்மைப் படிப்புக்கு புகழ்பெற்ற ஒரு கல்வி மையம். இங்கு பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர கேட் (common admission test) என்ற தனி நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகக் கடினமான ஒன்று.

தலைவரின் ‘பன்ச்’ பாடமாக மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அநேக சாதனைகளை சூப்பர் ஸ்டார் படைத்திருக

திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அநேக சாதனைகளை சூப்பர் ஸ்டார் படைத்திருக்கிறார். அவரது பெயரை உத்வேகமாக எடுத்துக்கொண்டே அநேகம் வாழக்கையில் முன்னேறியிருக்கிறார்கள். முன்னேறி வருகிரார்கள்.

(Please wait till the browser loads completely to display the pictures attached in this post)

Kungumam Panch Thanthiram1 640x425  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக  மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

திரையில் அவர் கூறிய பன்ச் டயலாக்குகளில் பொதிந்துள்ள நிர்வாகவியல் மற்றும் மேலாண்மை கருத்துக்களை, தொகுத்து அண்மையில் ‘பன்ச்’தந்திரம் என்ற நூலாக வெளியிடப்பட்டது. நமது தளத்தில் கூட அது பற்றிய செய்தி வெளியானது.

Kungumam Panch Thanthiram2 640x425  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக  மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

அந்த நூல் உருவானது எப்படி? சூப்பர் ஸ்டார் அந்த நூல் பற்றி அறியவந்தபோது கூறியது என்ன? நூலாசிரியர்கள் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வாரம் குங்குமம் வார இதழ் சுவையாக தந்திருக்கிறது.

Kungumam Panch Thanthiram3 640x425  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக  மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

தான் பேசிய பஞ்ச்களில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்த பன்ச் எது தெரியுமா?

“கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது; அப்படி கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது!”

No Pains No gains  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக மாறியது எப்படி?  சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

தலைவர் வீட்டு வரவேற்பறையில்..!

இதை தான் தனது வீட்டிலேயே அவர் சுவரில் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கிறார்.

ஒவ்வொரு ரசிகனும் மனதில் இருத்தவேண்டிய பொன்மொழி இது.

இதை தான் தலைவர் ஒரு பேட்டியில், “இந்த உலகத்துல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. அதை நாம கொடுத்தே தீரனும். எதுவுமே ஃப்ரீ கிடையாது கண்ணா” என்று கூறியிருப்பார்.

அதாவது நமது புகழுக்கும் பெயருக்கும் நாம் விலை கொடுத்தே தீரவேண்டும். (தலைவர் விலையாக கொடுத்தது தனது ப்ரைவசியை.) இதை தான் குருநாதர் கே.பி.யுடனான நேர்காணலிலேயே கூறியிருப்பார்.

[END]

Rajni's Hara coming,Sultan Going....

எல்.ஐ.சி பாலிஸி மாதிரி ரஜினிக்கும் பாலிஸி உண்டு... அது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஆண்டு கணக்கில் இடைவெளி எடுத்துக் கொள்வது. ‘எந்திரன்’ படத்துக்கு பிறகு அந்த கொள்கையை கிடப்பில் போட்டு விட்டார். மூன்று வருஷத்துக்கும் மேலாக முடியாமல் அனாமத்தாக கிடக்கும் ‘சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படம்தான் ரஜினி விரதத்தை உடைத்து இருக்கிறது.

இதுகுறித்து ஏற்கெனவே சௌந்தர்யாவின் அனிமேஷன் ஸ்டுடியோவில் பணியாற்றும் முக்கியபுள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘ஆக்கர் ஸ்டுடியா அமைத்து பிறபடங்களுக்கு அனிமேஷன் வேலை செய்து செவ்வனே சென்று கொண்டிருந்தார், சௌந்தர்யா. அப்பா ரஜினியை வைத்து யார் யாரோ படத்தை டைரக்ஷன் செய்கிறார்களே நாம் செய்தால் என்ன? என்கிற ஆசை மேடம் மனசை மாம்பழத்து வண்டாய் குடைந்தது. ஒரு நெகிழ்வான நேரத்தில் அப்பாவிடம் தன் அவாவைச் சொல்ல... முதலில் ‘‘நோ... நோ... அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது...’’ என்று தடாலடியாக முதலில் மறுத்தவர் கடைசியில் மகளின் அன்பில் கரைந்து போனார்.

சுல்தான் தயாராகும் வேலையில் சுறுசுறுப்பாக மொத்த யூனிட்டே இயங்கியது. 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்டுவந்த மன்னன் போரில் தன்நாட்டின் பகுதியை பறி கொடுக்கின்றான். திரைகடல் ஒடி திரவியம் தேடிச்சென்ற மன்னனின் நண்பன் சுல்தான் தமிழகம் திரும்புகிறான். விஷயத்தை கேள்விப்பட்டு படைகளை திரட்டிப்போய் பறிகொடுத்த பகுதியை மீட்டு வருகிறான். இதுதான் சுல்தான் அனிமேஷன் படத்தின் கதை. முதலில் ‘ஹரா’ (ஹரிஹரன்) என்றுதான் பேர் சூட்டினார்கள். ஏற்கெனவே முஸ்லீம் பெயரில் வெளிவந்த ‘பாட்ஷா’ கமர்ஷியல் ரீதியாக சக்கைபோடு போட்டதால் சென்டிமென்ட்டாக சுல்தான் என்கிற இஸ்லாமிய பேரை சூட்டினர்.

ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவில் அல்லும், பகலும் ‘சுல்தான் தி வாரியர்’ உருவானது. வெளிப்படத்தின் வேலைகளைகூட தள்ளி வைத்துவிட்டு ரஜினியின் அனிமேஷன் படம் வளர ஆரம்பித்தது.

நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என்று மகள் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் ரஜினி சென்று அனிமேஷன் படத்துக்காக கடுமையாக போஸ் கொடுத்தார். உலகின் அதிநவீன தொழில்நுட்பம் தெரிந்த ஜாம்பவான்கள் அனிமேஷன் ரஜினியை உருவாக்கினார்கள். ரஜினியின் உடம்பில் ஒயர்களை சொருகி எலக்ட்ரானிக் முறை மூலம் இன்னொரு 2டி ரஜினியை இஞ்ச் பை இஞ்ச்சாக உருவாக்கினர்.

3டி படத்தை அதற்கான கண்ணாடி அணிந்தால்தான் பார்க்க முடியும். ஆனால் ரஜினியின் 2டி அனிமேஷன் படத்தை தமிழ்நாட்டு கிராமத்தில் இருக்கும் டூரிங் தியேட்டர்களில்கூட பார்த்து ரசிக்கலாம். சுல்தானாக இருக்கும் அனிமேஷன் உருவம் ரஜினியை போலவே நடக்கும், ஸ்டைல் செய்யும், மேனஸிம் காட்டும், பேசும், சிகரெட்டை மேலே தூக்கிப்போட்டு லாவகமாக உதடுகளால் கவ்வும்.

அனிமேஷன் ரஜினிக்கு அழிவே கிடையாது ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அதன் செயல்பாடுகள் கிஞ்சித்தும் மாறாது உயிர்ப்போடு வாழும். இந்த அனிமேஷன் பேட்டர்னை வைத்துக் கொண்டு ரிமோட் கண்ட்ரோல் கொண்ட பொம்மைகளை தயாரித்து விற்கலாம். ரிமோட்டை இயக்கினால் ரஜினி செய்யும் அத்துனை சேட்டைகளையும் ஸ்டைலையும் அந்த பொம்மை அட்டகாசமாக செய்யும். அதுபோல அனிமேஷன் ரஜினியை அடிப்படையாக வைத்து வீடியோ கேம்ஸ் விளையாடலாம்.

‘கோவா’படத்தை தயாரித்தார். அப்படம் கொடுத்த தோல்வியால் துவண்டு போனார், சௌ. ஆக்கர் ஸ்டியோவில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினார். ‘‘உனக்கு டைரக்ஷனும் வேணாம்... ஒண்ணும் வேணாம் பேசாம கல்யாணத்தை பண்ணிக்கிட்டு லைஃப்ல செட்டிலாகு... சுல்தான் விவகாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்...’’ என்று சங்கடத்தில் தவித்த சௌ மனசை சமாதான படுத்தினார், ரஜினி. அதன்பிறகே சௌந்தர்யா அஸ்வின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.

இமயமலை செல்வதற்கு முன்பு திடீரென்று டைரக்டர் ரவிக்குமாரின் காதில் சுல்தான் படவிஷயத்தை சொல்லிவிட்டு போனார்.’’ என்று விளக்கம் சொல்கிறார்கள். டைரக்டர் ரவிக்குமாருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம்,‘‘இமயவாசம் செல்லும் முன்பே ரவிக்குமாரை அழைத்து, கமலின் ‘மன்மதன் அம்பு’ படம் முழுசாக முடிந்து விட்டதா?’’ என்றவர் தொடர்ந்து ‘‘நான் ரிஷிகேஷ் போய் வருவதற்குள் சௌந்தர்யா எடுத்து முடித்து இருக்கும் ‘சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படத்தை ஒருமுறைக்கு இரண்டுமுறை பாருங்கள்... என்ன மாற்றங்கள் செய்யலாம் என்று யோசித்து வையுங்கள்’’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

தொடர்ந்து,‘‘ போயஸ் கார்டனில் இருக்கும் தன்னுடைய வீட்டில் சௌந்தர்யா, ரவிக்குமார், ரஜினி மூன்று பேரும் சுல்தான் பற்றிய விவாதத்தில் தீவிரமாக இருக்கின்றனர். பொதுவாக ரஜினி ‘சிவாஜி’ ‘எந்திரன்’ படத்தின் கதை, விவாதங்களை தனது கேளம்பாக்க பண்ணையில்தான் வைத்துக் கொண்டார். சுல்தான் சௌந்தர்யாவின் கனவுப்படம் என்பதால் அவருடைய பங்களிப்போடு போயஸ் கார்டனிலேயே டிஸ்கஷன் நடக்கிறது. ‘எந்திரன்’ படத்தில் ரோபோ ரஜினி ப்ளஸ் நேச்சுரல் ரஜினி இருவரும் இருப்பதைப் போலவே இதுவரை எடுத்திருக்கும் அனிமேஷன் ரஜினியோடு நிஜ ரஜினி இணைந்து மிரட்டும் விதமாக திரைக்கதையை அமைக்கச் சொல்லி ரவிக்குமாரிடம் கேட்டுள்ளார், ரஜினி. தற்போது கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களையே உதவி டைரக்டர்களாக வைத்துள்ளார், ரவிக்குமார். இரவு பகலாக கலந்துரையாடி இரண்டு, மூன்று ஆக்ஷன் திரைக்கதைகளை அமைத்திருக்கிறார், டைரக்டர். ரஜினியும், ரவிக்குமாரும் அனிமேஷன் ரஜினியும், கேஷூவல் ரஜினியும் இணைந்து உருவாகும் படத்துக்கு ஆரம்பத்தில் வைத்த ‘ஹரா’ பெயரையே மீண்டும் சூட்டி இருக்கிறார்கள்.’’ என்று விவரமாக சொன்னார்கள்.

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajini Sultan the warrior Photo Gallery Updated!

Rajni Statue at London Wax Museum?


In addition to Shahrukh Khan [^] , Aishwarya Rai [^] and Amitabh Bachchan [^] , Superstar Rajinikanth [^] will now be offered a place at the prestigious Madame Tussaud"s wax museum in London. This initiative is being taken in view of request by the Superstar"s fans for his wax statue to be displayed at the museum.

Tamil Summary

லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுஸாட்ஸ் (Madame Tussauds) மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெழுகுச் சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த மியூசியத்தில் ரஜினியின் மெழுகுச் சிலை இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

குறிப்பாக ரஜினியின் சிவாஜி படம் உலகளவில் பிரபலமடைந்து சக்கைப் போடு போட்டபோது, 'பெட்டிஷன் ஆன்லைன்' போன்ற பிரபல இணையதளங்கள் மூலம் ரசிகர்களும் பிரபலங்களும் இந்தக் கோரிக்கையை வைத்தனர்.

சென்னையிலிருந்து இயங்கும் ரஜினி ரசிகர்களின் இணையதளங்கள் மூலம் முதல்முறையாக இந்தக் கோரிக்கை 2008-ல் வைக்கப்பட்டது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த மனுவை ஆதரித்து மேடம் டுஸாடுக்கு மின்னஞ்சல்களை அனுப்பினர்.

இப்போது மேலும் சில முன்னணி செய்தி இணையதளங்கள் ரஜினிக்கு மெழுகுச் சிலை வைக்கக் கோரி கட்டுரைகள் வெளியிட்டும், வாசகர் கருத்துக்கணிப்பை நடத்தியும் வருகின்றன.

இணையதளங்கள், மின்னஞ்சல்கள் மூலம் குவியும் கோரிக்கைகளை அடுத்து, இதனைப் பரிசீலித்து ரஜினிக்கு மெழுகுச்சிலை அமைக்க மேடம் டுஸ்ஸாட்ஸ் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், "ரஜினி சாருக்கு மெழுகுச் சிலை வைப்பதன் மூலம் அந்த மியூசியத்துக்குதான் பெருமை. ரஜினி சார் சிலை அங்கே வைக்கப்பட்ட பிறகு பாருங்கள்... வழக்கமாக வரும் கூட்டத்தை விட இருமடங்கு கூட்டம் வரும். அப்புறம்தான் அவர்களுக்கே தெரியும்... நாம் ரொம்ப லேட் பண்ணிட்டோமே.. உலகளாவிய ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்" என்றார்.

இயக்குநர் எஸ்பி முத்துராமன் கூறுகையில், "ரஜினி சாருக்கு மெழுகுச் சிலை வைப்பதற்கு இது பொருத்தமான நேரம்தான். அவரைப் போன்ற சிறந்த மனிதர் - கலைஞர் எவருமில்லை..." என்றார்.

Kollywood cricket team in the name of Superstar


Film stars in Indian movies have come together to form the Celebrity Cricket Leauge (CCL) on the lines of IPL. Kollywood too has joined the bandwagon by forming the "Tamil Superstars" cricket team under the aegis of Nadigar Sangam chief Sarath Kumar. Radhika Sarathkumar is the director of the CCL. Superstar Rajinikanth will be appeared during the match to cheer up all language teams

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்-கோலிவுட்டின் கிரிக்கெட் டீம்!

சூப்பர் ஸ்டார்ஸ்-கோலிவுட்டின் கிரிக்கெட் டீம்-ரஜினி முன்னிலையில் கிரிக்கெட் ஆட்டம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி நட்சத்திரங்கள் பங்கேற்றும் மெகா கிரிக்கெட் போட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினி முன்னிலையில் வரும் ஐனவரி மாதம் நடக்கிறது.

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்.

இவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடினால் அதற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வருவாயை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தும் நோக்கிலும் பிரபலங்களின் கிரிக்கெட் அமைப்பு ஒன்றை செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.

இந்த அமைப்பின் அறிமுக விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது.

கிரிக்கெட் அமைப்பு அறிமுகப்படுத்தி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியதாவது:

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி பட கலைஞர்களும் பங்கேற்கும் செல¤ப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. இதற்காக தமிழ் நடிகர்களைக் கொண்ட அணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரராக சூர்யா இருப்பார்கள். விஜய்யுடன் பேச்சு நடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டதும் அறிவிப்போம்.

இவர்களைத் தவிர ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, கார்த்தி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அழைத்தோம். அவரும் வருவதாகவும், அணியை உற்சாகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அவர் முன்னிலையில் இந்தப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தெலுங்கு டீமில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., இந்தி டீமில் சல்மான் கான், சுனில் ஷெட்டி அணி, கன்னடத்தில் சுதீப், புனித் ராஜ்குமார் அணி பங்கேற்கின்றன. இது பொழுதுபோக்காக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி தொழில்முறையிலான ஆட்டமாக இருக்கும். ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்போட்டிகள் நடக்கும். சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுவதால், இங்கு ஆட்டம் நடத்துவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். போட்டிக்கென பிரத்யேக கோப்பை, ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு கலரில் ஆடை ஆகியவை தயாராகிறது. ராடன் மீடியா, ஸ்பிரின்ட் அண்ட் ரிதம் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

ஜெயிக்கும் அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு அளிக்கப்படும். இந்தத் தொகை நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும், என்றார் சரத்குமார்.

அணியின் பெயர் என்ன?

அணியின் பெயர் என்ன என்ற கேள்விக்கு, இந்த சிசிஎல்லின் இயக்குநர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் கூறியது:

"மும்பை அணிக்கு மும்பை ஹீரோஸ் என்று வைத்துள்ளனர். கன்னட அணிக்க கன்னட ராயல்ஸ் என்று வைத்துள்ளனர். தெலுங்கு அணிக்கு தெலுங்கு டைகர்ஸ் என்று வைத்துள்ளனர். தமிழ் டைகர்ஸ் என்று நாம் வைக்க முடியாது. விட மாட்டார்கள். அதனால், நம் எல்லோருக்கும் பிடித்த, ஒரே ஸ்டார்... சூப்பர் ஸ்டார் பெயரில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் என்று வைத்துள்ளோம்", என்றார்.

ரஜினி இந்த போட்டிகளில் பங்கேற்பாரா? என்று கேட்டபோது, "ரஜினி சார்கிட்ட இந்த விஷயம் குறித்துப் பேசியதும் உற்சாகமாக எங்களை வாழ்த்தினார். அப்போது, 'நான் வந்து கிரிக்கெட் ஆடறது சரியா வராது. எந்த குறிப்பிட்ட அணிக்காகவும் ஆட முடியாது (காரணம் எல்லா மொழியிலும் அவருக்கு ஆதரவு உள்ளது!). வேண்டுமானால் நான் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். வீரர்களுக்கு கூல்டிரிங்கஸ் கொடுக்கச் சொன்னா கூட ஓகேதான்... நான் வர்றேன் கவலைப்படாதீங்க", என்றார் தமாஷாக. எப்படியோ நீங்கள் வந்தா போதும் என்று கூறியுள்ளோம்," என்றார்.

போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ராதிகாவின் ராடான் டெலிவிஷன் பெற்றுள்ளது.

20 ஓவர்கள் கொண்ட அனைத்துப் போட்டிகளையும் ராதிகாவின் ராடான் மீடியா மற்றும் சீனிவாசலு மூர்த்தி, திருமால்ரெட்டி, விஷ்ணுவர்த்தன், இந்தூரி ஆகியோர் நடத்துகின்றனர்.

சிசிஎல் அமைப்பின் அணிகளுக்கென பிராண்ட் அம்பாஸடர், சியர் லீடர் என இன்னும் பல கவர்ச்சிகரமான அம்சங்களை அறிவிக்கவிருக்கிறார்களாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...