ரஜினியின் ரசிகர் சந்திப்பால் புஸ்வானமான விஷகாந்த் மாநாடு - FansMeet Coverage




பொதுமக்களிடம் சூப்பர் ஸ்டாரின் இந்த சந்திப்பு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்துகொள்ள இப்போது நான் முயற்சித்துவருகிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் நண்பர்களிடம் இது குறித்து பேசி தகவல்களை சேகரித்து வருகிறேன்.

கோடிகள் சாதிக்காததை எளிமை சாதித்தது
நம் வலைத்தளத்தின் ரெகுலர் விசிட்டர்/என் நண்பர் ஒருவரிடம் சந்திப்பு குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறியது:“நான் அலுவலகம் செல்லும் கேப் (cab) ஓட்டுனர், எப்போதும் ரஜினியை கிண்டலடித்துக்கொண்டும் கேலிசெய்துகொண்டும் இருப்பார். இந்த பேட்டி குறித்து பேச்சு எழுந்தபோது, அவர் கூறியது எனக்கு பெரிய ஆச்சரியம். ‘இந்த ஆள் எப்போ அரசியலுக்கு வந்தாலும் ஈஸியா ஜெயிச்சுடுவார் போலிருக்கே…’ என்று கூறினார் சுந்தர். எனக்கே மிகவும் ஆச்சரியம். அவர் இப்போது அப்படி கூறுவதற்கான காரணத்தை நான் ஆராய்ந்தபோது தான் புரிந்தது அந்த பேட்டியை பற்றி அந்தளவு அவருக்கு “feedback” கிடைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து மக்கள் மத்தியில் கொண்டு வர முடியாத மன மாற்றத்தை தலைவரின் இந்த எளிமையான ரசிகர் சந்திப்பு சாதித்துவிட்டது. அந்த அளவு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் விஷ காந்தின் மாநாடு புஸ்வானம் ஆகிவிட்டது” என்றார். மனதிற்குள் உற்சாகம் பீரிட்டெடுத்தது.
பிறகு இன்று காலை, ஒரு வாரமிருமுறையை புரட்டியபோது, நண்பர் கூறிய கருத்து அதை உறுதி செய்தது. (ஸ்கேன் இணைப்பில் காண்க). படித்துவிட்டு, என்னடா இந்த பத்திரிகையில் இப்படி ஒரு ரஜினி ஆதரவு செய்தி என்று யோசிக்க வேண்டாம். ரஜினி ரசிகர்களின் பிரவாகத்தை எதிர் காலத்தில் கலைஞருக்கு பிறகு அறுவடை செய்யவேண்டாமா? அந்த சுயநலம் தான் இந்த பத்திரிக்கைக்கு.
இது ஆண்டவனால் தூவப்பட்ட விதை. இதற்க்கு பெருமழை தானாக கிட்டும் என்ற நண்பர் ஈ.ரா.வின் கூற்று இவ்வளவு சீக்கிரம் பலிக்கும் என்று நானும் எதிர்ப்பார்க்கவில்லை.
குறிப்பு:ஆலமரமும், தோட்டக்காரனும்…
ஒரு ஆர்வத்தாலும் தலைவரின் மேல் உள்ள பற்றினாலும் நான் ஆரம்பித்த ஒரு சாதரண blog, உங்கள் ஆதரவால் எதிர்பாராதவிதமாக இன்று onlyrajini.com என்னும் ஒரு பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இந்த தோட்டக்காரன் அதை பராமரிக்க மிகவும் திண்டாடுகிறேன். அதைத்தான் நான் முந்தைய பதிவுகளில் ஒன்றில், என் பிரச்னை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு இருந்த மனநிலையில் நான் அப்படி கூறிவிட்டேன். அது தவறு என்று பிறகுதான் எனக்கு புரிந்தது. நானும் ஒரு சாதாரண மனுஷன் தானே?
இத்துடன் இந்த டாபிக்கை முடித்துவிட விரும்புகிறேன். எனவே இதுகுறித்து, என்னை தொடர்புகொள்ள விரும்புபவர்கள், எனது இ-மெயிலில் மட்டுமே தொடர்புகொள்ளவும். தயவுசெய்து யாரும் இங்கு பின்னூட்டம் இட வேண்டாம். எதுவாயினும் என்னை simple_sundar@yahoo.com இல் தொடர்பு கொள்ளவும்.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...