Superstar Rajini’s 1995 Doordarshan interview


தூர்தர்ஷனுக்கு இப்படி ஒரு பேட்டியை பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக அளிக்கலாம் என்று எஸ்.வி.ரமணன் ரஜினியுடன் கலந்து பேசி முடிவு செய்தவுடன் “இந்த பேட்டியில் உங்கள் கேள்விகளை ரஜினியிடம் கேட்கலாம் - உங்கள் கேள்விகளை அனுப்பவும்” என்று நாளிதழ்களில் விளம்பரம்செய்தனர் .
(எஸ்.வி.ரமணன் சூப்பர் ஸ்டாரின் மனைவி வழி உறவினர் ஆவார். ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஐடெக்ஸ் கண் மை விளம்பரத்தில் ஒலிக்கும் குரல் நினைவிருக்கிறதா? அது இவர் தான். கணீரென்ற குரல்லுக்கு சொந்தக்காரர் இவர். டி.வி.க்களில் பாடல் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளில் வருவது வேறொரு ரமணன். அவர் பெயர் ஏ.வி.ரமணன்.)
உலகம் முழுதும் இருந்து வந்து குவிந்த கடித மலைகளுள் சிறந்த 100 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்க்கு சூப்பர் ஸ்டார் பதில் சொல்லியிருந்தார். ஒவ்வொரு பதிலுக்கும் பொருத்தமான பாடல் காட்சிகள், வசனங்கள், க்ளிப்பிங்குகள் காட்டப்பட்டன. அது நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்டியது. ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை…இப்போ பார்த்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்!! (நமது rajinifans.com ராம்கியும் அதில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.)
சஸ்பென்ஸ் ஏற்படுத்திய ரஜினியின் தோற்றம்
ரஜினி எத்தகு தோற்றத்தில் பேட்டியில் காட்சியளிப்பார் என்று ரசிகர்களுக்குள் பெரிய பட்டி மன்றமே அப்போது நடந்தது. இதற்க்கு முன்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது (Sep 27, 1995) புகைப் பிடித்தவாறு பேட்டியளித்தது பல விமர்சனங்களை கிளப்பியது. எனவே இந்த முறை பேட்டி கொடுக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி ரஜினியை அவருக்கு நெருக்கமானவர்கள் கேட்டுகொண்டனர்.
சூப்பர் ஸ்டார் எந்த தோற்றத்திலும் வசீகரித்துவிடுவார் என்பதற்கு இந்த பேட்டியும் ஒரு சாட்சி. (மீசையில்லாமல், கண்ணாடியுடன் ஒரு வித்தியாசமான, அட்டகாசமான கெட்டப்பில் காட்சியளித்தார்.)
சந்தேகங்களுக்கு விடை
இன்னொரு முக்கிய விஷயம் இந்த பேட்டி அளித்த காலகட்டம், பாட்ஷா படம் பேரு வெற்றி பெற்று ரஜினிக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள் நிறைய பேர் கிடைத்திருந்தனர். குழந்தை ரசிகர்களும் எண்ணிக்கையில் கூடியிருந்தனர்.
அத்தோடு ஏற்கனவே இருந்த நீண்டகால ரசிகர்கள் மனதில் அவர் கம்பீரமாக வீற்றிருந்த காலம். இப்போது நமக்கு தலைவரைப் பற்றிய சில சந்தேகங்கள் இருக்கிறதல்லவா அது போல அப்போதுகூட பல சந்தேகங்கள் மனதில் இருந்தன. உதாரணத்துக்கு: (இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது, தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்று கூறப்படுவது பற்றி அவர் கருத்து, அவர் காந்தியவாதியா அல்லது ஆன்மீகவாதியா இப்படி பல பல சந்தேகங்களுக்கு இதில் விடை கிடைத்தன.) இப்படி பல கேள்விகளுக்கு ரஜினி இந்த பேட்டியில் பதில் சும்மா நச் நச் என்று பதில் அளித்திருந்தார். அதனால் இந்த பேட்டிக்கு பின்னர் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டு நடந்தனர். (அது ஒரு அழகிய கனாக்காலம்).
வெட்கமில்லா விஷகாந்த்
இப்படி ஒரு பேட்டியை ரஜினி கொடுத்தவுடன் நொந்துபோன விஷகாந்த் உள்ளுக்குள் ஆற்றாமையுடன் இருந்தார். இந்த பேட்டி ஒளிபரப்பான அடுத்த வாரம் வந்த குமுதம் இதழ் ரஜினியிடம் கேட்கப்பட்ட அதே 100 கேள்விகளை விஷகாந்திடம் கேட்டது. விஷகாந்தும் கொஞ்சம் கூட வெட்கமின்றி அந்த கேள்விகளுக்கு பதில் கூறியிருப்பார். (அப்போதிலிருந்தே அந்தாளு இப்படித்தான்!!) (கேக்கவே கொடுமையா இருக்கே…படிக்க எப்படியிருந்திருக்கும்??!!)
ரசிகர்களாக மாறிய நடுநிலையாளர்கள்
ரஜினியின் இமேஜ் பொதுமக்கள் மத்தியில் உயர்ந்ததற்கு இந்த பேட்டியும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. அதேபோல் தங்கள் தலைவரைப் பற்றியும் அவரது பரந்த மனப்பான்மை மற்றும் முதிர்ச்சி, வாழ்வியல் கண்ணோட்டம், சமூக சிந்தனை மற்றும் இன்ன பிறவற்றை ரசிகர்கள் தெரிந்துகொள்ள முழு வாய்ப்பையும் இந்த பேட்டி ஏற்படுத்திகொடுத்தது. இந்த கேள்வி-பதில் தொகுப்பை பார்த்து ரஜினியின் ரசிகர்களாக மாறிய நடுநிலையாளர்கள் எண்ணற்றோர் உண்டு.
பல ரசிகர்களுக்கு தலைவரின் பெருந்தன்மை, மற்றும் அவரது நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ள இந்த பேட்டி மிகவும் உதவியாக இருந்தது.
நாட்டுப்பற்று, குடும்ப நலன், தொழில் பக்தி இவற்றை பார்த்து இவரது நலம்விரும்பிகளாக மாறிய தாய்குலங்கள் அநேகம். அந்த அளவு இந்த பேட்டி ரஜினியின் இமேஜை உயர்த்தியது. இந்த பேட்டி ஏற்படுத்திய தாகம் தான் அடுத்து வந்த பொது தேர்தலில் மக்களை நேரடியாக சந்திக்கமலேயே வெறும் சன் டி.வி பேட்டியின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார் ரஜினி.
அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷன் தான் சாட்டிலைட் கிங். எனவே தூர்தர்ஷனில் ஒளிபரப் பப்பட்டதால், இந்த பேட்டியின் ரீச் அபாரமாக இருந்தது. இந்த பேட்டி கொடுத்த இமேஜ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்களேன். எனவே சூப்பர் ஸ்டார் இதே போல் மறுபடியும் ஒரே ஒரு - ஒரு - பேட்டி அளித்தால் போதும் அவரை புரிந்துகொள்ளாத பல மரமண்டைகளுக்கு உறைக்கும், அவரது இமேஜ்ஜும் பல மடங்கு உயரும். நமக்கும் மன பாரம் பெரிதளவு குறையும்.
ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்
சூப்பர் ஸ்டார் தனது கொள்கைகளை தளர்த்தி, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திருக்கு ஒரு முறையோ அல்லது பண்டிகை காலங்களிலோ இத்தகைய நிகழ்ச்சிகள் வாயிலாக சின்னத் திரை மூலமாகவாவது மக்களை சந்திக்க வேண்டும். (காலம் மாறிவிட்டது. எனவே இது போன்ற விஷயங்களில் நாம் பின் தங்கி விடக்கூடாது தலைவா!!)
ஒவ்வொரு கேள்வி பதிலும் இன்றைய காலகட்டத்திலும் கூட பொருத்தமாக இருப்பது ஆச்சரியம். முரண்பாடு துளிகூட இல்லை. அதுவும் அந்த அரசியல் தொடர்பான ஸ்டார் கேள்வி பதில், சூப்பர். (பொறுமை…பொறுமை….!!)
உதாரணத்துக்கு ஒரு கேள்வி பதில்
அன்றைய காலகட்டங்களில், நடிகர் மன்சூரலி கான் டி.வி.க்களிலும் பத்திரிக்கைகளிலும் ரஜினியை கண்டபடி விமர்சித்து வந்தார். இப்போது எப்படியோ அப்போதும் நாம் குய்யோ முய்யோ என்று குதித்தோம். ஆனால் சூப்பர் ஸ்டார்?
…………………………………………………………………………………………………………………
கேள்வி: பத்திரிக்கைகளிலும் டி.வி. பேட்டிகளிலும் ஒரு நடிகர் தங்களை கண்டபடி விமர்சனம் செய்துவருகிராரே? இது பற்றி நீங்க என்ன சொல்றீங்க? ரத்தம் கொதிக்கிது தலைவா…
ரஜினி : ஹா…ஹா…ஹா…(சிரிக்கிறார்) கண்ணா, இது ஜனநாயக நாடு. அரசியல் சட்டம் நம் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கு. அவங்கவங்க கருத்துக்களை சொல்ல அவங்கவங்களுக்கு முழு உரிமை உண்டு. விமர்சனங்களை - நான் - வரவேற்கிறேன்.”
…………………………………………………………………………………………………………………
(உடனே பாட்ஷா படத்தில் ஆனந்தராஜ், ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியும், அதன் தொடர்ச்சியாக அவரது தம்பி, “ஒரு பூனை கூட ஒரு அறையில வெச்சு நாம கார்னர் பண்ணினா புலியா மாறிடும். ஆனா அண்ணா, உங்களுக்கு கோவமே வராதா?” என்று கேட்கும் காட்சியும் அதற்க்கு ரஜினி பலமாக சிரிப்பதும் காட்டப்பட்டது. (கேட்கும்போதே சிலிர்க்குது இல்ல? இப்போ உள்ள சூழ்நிலைக்கும் ரொம்ப பொருத்தம் இந்த காட்சி!)
முன்னோட்டம் தொடரும்…

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...