பொதுமக்களிடம் ரஜினியின் இமேஜை வெகுவாக உயர்த்தியுள்ள அறிக்கை!!


கை மீறி சென்ற நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது சூப்பர் ஸ்டாரின் அறிக்கை. இது ஒரு வகை அறுவை சிகிச்சை தான். தேவையற்ற குழப்பங்களுக்கும், கோரிக்கைகள் என்ற பெயரில் நிகழ்ந்த அத்துமீறல்களுக்கும் சூப்பர் ஸ்டார் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

நாம் சொன்னது என்ன?
சூப்பர் ஸ்டார் அறிக்கை வெளியிட்டவுடன் - அதற்க்கு ஏற்ற வகையில் என்னை சமதானப்படுத்திகொண்டு நான் பேசுகிறேன். சமாளிக்கிறேன் - என்று என் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.
நிச்சயமாக அல்ல. எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும் வரையில் அவ்வளவு எளிதில் நான் எதிலும் சமாதானம் அடைவது இல்லை.
இப்பவும் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் நேரடியாக் தடாலென்று கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்ப் பார்த்தது எல்லாம் - 2011 க்குள் - ஆட்சியை பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை இப்போது துவக்குவார் என்று தான். அதாவது மன்றஒருங்கிணைப்பு அல்லது ஒரு சேவை அமைப்பு துவக்குவார் என்று தான் நான் கருதினேன். ஒரு சில ரசிகர்களின் அத்துமீறல்களால் அந்த முயற்சிக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டை எழுந்துள்ளது. (கவனிக்க - தற்காலிக)
இந்த முறை ஏதாவது நடக்கும் என்று நான் நம்பியது - இந்த ஆயத்த பணிகள் குறித்து தான். (மன்ற ஒருகிணைப்பு மற்றும் சீரமைப்பு அல்லது சேவை அமைப்பு)

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்களை முழுதும் உணர்ந்துள்ள ரஜினி
தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுக்குள் எழுந்திருக்கும் எதிர்ப்பார்ப்புக்கள் சூப்பர் ஸ்டாருக்கு முழுதும் புரிந்துள்ளது - என்று - அவரது அறிக்கையை பார்த்தாலே சிறு குழந்தைக்குகூட புரியும்.
அரசியல் பிரவேசம் இப்போதைக்கு இல்லை - அவ்வளவு தான். (எந்திரனில் முழு ஈடுபாட்டுடன் நடித்துகொண்டிருப்பதால்.)
இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம்?
மேலும் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததற்கு காரணம் உண்டு: “நல்ல தலைவன்யா இவன். இவன் என்ன செய்யனும்னு அவன் ரசிகர்கள் அவனுக்கு கத்துகொடுக்குறாங்க” - என்ற ஒரு விமர்சனம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. சரிதானே?
மிரட்டல்களுக்கு பணியும் ஆள் நான் இல்லை
எனவே நிர்பந்தத்திற்கு மிரட்டல்களுக்கு பணியும் ஆள் நான் இல்லை என்று அவர் மக்களிடம் அவர் நிரூபிக்கவேண்டும். (ஒரு தலைவனுக்குரிய முக்கிய குணம் ஆயிற்றே அது!!) எனவே தான் இந்த கண்டிப்பான அறிக்கை. யார் என்ன சொன்னாலும் சாட்டையை நான் தான் வைத்திருக்கிறேன் என்று அவர் அனைவருக்கும் உணர்த்திவிட்டார்.
ரசிகர்களை சந்தித்த பிறகு அவர் இதை சொல்லியிருக்கலாமே என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி சொன்னால் - ரஜினிக்கு சுயமாக எதுவும் சிந்திக்க தெரியாது என்று மக்கள் நினைக்கலாம். ரசிகர்களும் நினைக்கலாம். மேலும் இந்த சந்திப்பிற்கு முன்பு - இந்த இரண்டு மூன்று நாட்களில் என்னென்ன செய்திகள் வருமோ? முதலில் அதற்கொரு முற்றுப் புள்ளி வைப்போம் என்று அவர் நினைத்திருக்கலாம்.)
மேலும் அவர் நிச்சயம் ரசிகர்களை சந்திப்பார். அவர்களது கோரிக்கைகளை கேட்பார். அதில் மாற்றமிருக்காது. ஆனால் உடனடியாக எதுவும் செய்யமாட்டார். சிறிது அவகாசத்திற்கு பிறகு ஏதாவது செய்வார் - என்று நான் நினைக்கிறேன்.

பொதுமக்கள் பாராட்டும் அறிக்கை
பொது மக்கள் இது குறித்து அலட்டிக்கொள்ளவேயில்லை. பொருட்படுத்தவும் இல்லை. அவர்களுக்கு மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட ஆயிரம் ஆயிரம் பிரச்னைகள். அவருக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம் இது. நமக்கு இதனால் ஏதும் பயன் உண்டா? என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ள பொதுமக்களில் ஒரு சிலரிடம் பேச்சு கொடுத்ததில் அவரது அறிக்கை - அவர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது தெரிகிறது. உண்மையாகவே. நான் ஒரு மினி சர்வேயே இன்று காலை எடுத்துவிட்டேன். (அதானால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்). ரஜினியின் இமேஜை இந்த அறிக்கை பலமடங்கு உயர்த்தியிருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. அவரது தைரியத்திற்காக. யார்க்கும் கட்டுப்படும் ஆள் நான் இல்லை என்று உணர்த்தியதற்காக.
அதிருப்தி ரசிகர்கள் - கவலை வேண்டாம் ப்ளீஸ்
ரசிகர்களில் ஒரு சாரார் கடும் அதிருப்தியிலும் விரக்தியிலும் இருப்பது உண்மை. (ஒரு சில நல்ல ரசிகர்கள் backfire ஆனது மிகவும் வருத்தம்.) அவர்கள் வருத்தப்படும் அளவிற்கோ வெறுத்துபோகும் அளவிற்கோ எதுவும் நடக்கவில்லை. எனினும் அவர்களை எப்படி சமதானப்படுத்தேவேண்டும் என்று ரஜினிக்கு தெரியும். கண்டிப்பாக ஏதாவது அவர் இதற்க்கு செய்வார் என்று எதிர்ப் பார்க்கலாம்.
இந்த அரசியல் பிரவேசம் குறித்து எழுந்த செய்திகள், ரசிர்கர் மன்ற அத்துமீறல்கள் - ஆகியவற்றால் பொதுமக்கள் மத்தியில் சரிந்துவிட்ட அவரது இமேஜை முதலில் தூக்கி நிறுத்துவது அவசியம் என்று அவர் கருதியதால் அதற்கான நடவடிக்கை தான் இந்த சூடான அறிக்கை.
ரசிகர்களை பிறகு கூட கவனித்துக்கொள்ளலாம். என்ன, கொஞ்சம் கோபப்படுவார்கள். இரண்டு நாட்கள் நம்மை திட்டிகொண்டிருப்பார்கள். மற்றபடி அவர்கள் எங்கும் போய்விட மாட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்துவது எளிது. அப்படியே போனாலும் அதுவும் நல்லதுக்குத்தான். தேவையில்லதாவங்களை, பில்டர் பண்ண மாதிர் ஆச்சு. என்று அவர் நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது.
அரசியல் நோக்கி வந்திருக்கும் ரஜினி
அறிக்கையை கூர்ந்து படிப்பவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அவர் அரசியலிலிருந்து விலகி செல்லவில்லை. அதை நோக்கி உண்மையில் பல அடிகள் வந்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...