நடப்பவற்றை கூர்ந்து கவனித்துவரும் சூப்பர் ஸ்டார்


குசேலன் படம் தொடர்பாக நாம் எதிர்பாராமல் நடந்த பல விஷயங்கள் சூப்பர் ஸ்டாரை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டதாம். நடக்கும் அனைத்தையும் அவர் தற்போது கூர்ந்து கவனித்து வருவதாகவும் சம்பவங்களை உள்வாங்கிகொண்டிருப்பதாகவும் நமக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே ரசிகர்கள் தங்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகள் மூலமாகவும் நோட்டீஸ்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள் இவற்றை ரஜினியின் பார்வைக்கு அனுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் இந்த அளவிற்க்கு மனம் வெதும்பும்படி அமைந்துவிட்டதே என்று அவர் மிகவும் வருத்தபடுவதாக தகவல்.
ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டியாயதன் அவசியத்தை அவர் உணர்ந்தேயிருக்கிறார்.
அவரது கவனத்தில் இருப்பது ஒன்றே ஒன்று தான்: அவரது அடுத்த ஸ்டெப் மிகவும் முக்கியமாதலால் அதை மிகவும் கவனத்துடன் எடுத்து வைக்க தீர்மானித்திருக்கிறார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள பழியை தீர்க்கும் விதமாக அது அமையவேண்டுமே என்ற தீவிர சிந்தனை அவருள் எழுந்துள்ளது.
இணைக்கப்பட்ட மாலை மலர் செய்தியில் நாம் ஏற்கனவே கூறியபடி திரையரங்கு உரிமையாளர்களின் முடிவு மற்றும் ரசிகர்கள் கூட்டத்திற்கு தளபதி சத்தி போட்ட தடை ஆகியவை குறித்து விரிவான தகவல் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...