சிங்கப்பூரில் எந்திரன் 100வது நாள் வெற்றி விழா

பல சாதனைகளை புரிந்து சூப்பர் ஸ்டார் அவர்களின் எந்திரன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வரும் சனிக்கிழமையோடு (08-01-2011) 100 வது நாளை தொடுவதால் முதல் நாள் (FDFS) கொண்டாட்டத்தைப்போல 100 வது நாளை சிறப்பாக கொண்டாட சிங்கப்பூர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தீர்மானித்துள்ளார்கள்.

அதிக திரையரங்குகளில் வெளியிடல்

சிவாஜி திரைப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு குறைந்த காலத்தில் அதிக வசூலை பெரும் சூட்சுமத்தை அறிமுகப்படுத்தினார்கள் அதில் இருந்து திருட்டு DVD யில் இருந்து தப்பிக்க இதுவே சரியான வழி என்று அனைவரும் இதையே பின்பற்றி வருகிறார்கள். நாட்களை விட தற்போது வசூல் தான் முக்கியம் என்றாகி விட்டது.

ஆனால் இவை அனைத்தையும் ஒருவர் படம் பொய்யாக்கி வருகிறது என்றால் அது சூப்பர் ஸ்டார் தவிர வேறு யாருமில்லை. அதிக வசூலையும் பெற்று அதிக நாட்களிலும் அதிக திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடுகிறது என்றால் அது சூப்பர் ஸ்டார் தவிர எவருமில்லை. இத்தனை திரையரங்கில் வெளியிடுகிறார்களே இரண்டு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்றார்கள் படம் ஹிட் என்றதும் சரி! அதிகபட்சம் ஐம்பது நாட்கள் ஓடும் ஆருடம் கூறினார்கள் ஆனால் அனைவரின் கூற்றையும் பொய்யாக்கி பல திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 வது நாளை அடையப்போகிறது. எந்திரன் திரைப்படத்தை நீண்ட நாட்கள் ஆகி விட்டது என்று எடுத்து விட்டு புதிய படங்களை வெளியிட்ட திரையரங்குகள் கூட்டமில்லாததால் மீண்டும் எந்திரன் படத்தையே திரையிட்ட சம்பவங்கள் நடந்தன. இதுவே ரஜினியின் திறமைக்கு சாட்சி.

தமிழகமில்லாமல் ஆந்திரா கேரளா (நேரடி தமிழ் படம்) கர்நாடகா, வட மாநிலங்கள், மற்ற நாடுகள் என்று சாதனை அளவு விரிந்து கொண்டே செல்கிறது. இதை எல்லாம் இங்கே விளக்கினால் நேரம் போதாது அத்தனை சாதனைகள். பலரின் தூக்கத்தை கெடுத்து விட்டது எந்திரன். வட மாநில சேனல்கள் மாற்றி மாற்றி எந்திரன் புகழ் பாடிக்கொண்டுள்ளன.

தமிழகம் போன்ற அதிக ஜனத்தொகை உள்ள இடங்களில் கூட தலைவர் படம் ஓடுவது ஆச்சர்யமில்லை மிகச் சிறிய நாடான சிங்கப்பூர் ல் சந்திரமுகி, சிவாஜியை தொடர்ந்து எந்திரனும் 100 வது நாள் என்ற வெற்றிக்கோட்டை தொடுகிறது. இத்தனைக்கும் படம் வெளிவந்த போது சாதனை அளவாக 14 திரையரங்கில் வெளியிட்டார்கள். அதிக திரையரங்கில் வெளியிட்ட அவதார் படத்தை விட அதிக திரையரங்குகள் என்று நினைக்கிறேன். கற்பனை செய்து பாருங்கள்! நினைத்தாலே சும்மா அதிருதில்ல :-)

எந்திரன் வெளியான போதே சிங்கப்பூர் தலைவர் ரசிகர்கள் பட்டையை கிளப்பினார்கள் தற்போது அதே ஆர்வத்தோடு 100 வது நாளையும் வெற்றிகரமாக கொண்டாட தீர்மானித்துள்ளார்கள். வார இறுதி என்பதால் எந்த பிரச்சனையுமில்லை.

எனவே சிங்கப்பூர் ரசிகர்களே! வரும் சனிக்கிழமை (08-01-2011) இரவு 9 மணிக்கு நமக்காக REX திரையரங்கம் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்துள்ளது. திரளாக வந்து கொண்டாட்டத்தில் பங்கெடுக்குமாறு ரஜினி ரசிகர்கள் சார்பாக ரஜினிஃபேன்ஸ்.காம் கேட்டுக்கொள்கிறது.

சனிக்கிழமை (08-01-2011) அன்று 9 மணிக்கு REX ல் சரவெடி தான்! :-)

குறிப்பு: கொண்டாட்டங்கள் 8 மணி அளவிலே தொடங்கி விடும் என்பதால் முடிந்த வரை முன்பே வர முயற்சி செய்யுங்கள்.

www.giriblog.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...