தங்கத்தை உரசுங்கள்…. தலைவனை அல்ல!!


இயக்குனர் ஸ்ரீதரின் மறைவிற்கு ஏன் சூப்பர் ஸ்டார் போகவில்லை, அவர் போயிருக்கவேண்டும் என்று என்னிடம் சில நண்பர்கள் வருத்தப்பட்டதும், அவர்களுக்கு நான் கூறிய பதிலும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=449064&disdate=11/8/2008
இதோ, நேற்று சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்ற இயக்குனர் ஸ்ரீதரின் அஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் உருக்கமான உரை ஒன்றையும் அவர் ஆற்றியிருக்கிறார். மேலும், “ஸ்ரீதரின் இறுதி அஞ்சலிக்கு சில காரணங்களால் நேரில் செல்லமுடியவில்லை. அதற்காக வருத்தப்பட்டேன். அடுத்த நாள் நேரில் சென்று அவரது வீட்டாரிடம் துக்கம் விசாரித்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“தலைவரை உரசிப்பார்த்துவிட்டேன்… ரியல்லி ஸாரி“
அன்று என்னிடம் இது குறித்து, அவசரப்பட்டு கருத்துக்கள் வெளியிட்ட நண்பர், இன்று காலை இதை பேப்பரில் படித்துவிட்டு, எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ். இது - “Just saw the paper and stunned on thalaivar’s speech in Sreedhar’s funeral meeting. Thalaivaa, i misunderstood you. We have see actors in humans. But you are the only human among actors.”
குசேலனின் சுந்தர்ராஜன் கேரக்டர் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. நேற்று கூட மும்பையிலிருந்து ஒரு ஆர்.எஸ் நம்மிடம் வந்து சேர்ந்தார். (ராமதாஸ் அல்ல. நம் ரசிகர் ஒருவர் ). இன்று இவர்.
சங்கநாதன் rajinifans.com இல் கூறியிருப்பதைபோல, இந்த சீசன் சுந்தர்ராஜன்களின் சீசன் போலும்… அடுத்து யாருப்பா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...