மும்பை தீவிரவாதத்திற்கு பலியானோருக்கு அஞ்சலி செலுத்துங்கள்!







மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதி மக்கள் முதலில் மும்பை தாக்குதலின் தீவிரத்தை உணரவில்லை. புறநகர் பகுதிகளில் வசித்துவந்த அனைவரும் நீரால் சூழப்பட்டு வெளியுலகுடன் துண்டிக்கப்பட்டுவிட்டனர். பல வீடுகளில் கடந்த சில நாட்களாக மின் சப்ளை இல்லை. இதனால் தொலைக்காட்சியோ செல்போனோ வேலை செய்யவில்லை. அத்தியாவசியத்தேவையான பால், குடிநீர் முதிலயவைகள் கூட இன்றி பலர் சிரமப்படுகின்றனர். பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் சகஜ நிலை திரும்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் இது வரை மழை வெள்ளத்துக்கு பலியாகிவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மழை இன்று சற்று ஓய்ந்திருப்பதை அடுத்து, தற்போது தான் தமிழக மக்கள் மும்பை தாக்குதலின் தீவிரத்தை மெல்ல உணரத்துவங்கியுள்ளனர்.
முதலில் இது குறித்து நான் நேற்று பதிவிடலாம் என்று நினைத்த போது என்ன போடுவது யாரை தேற்றுவது என்று எனக்கு எதுவும் புரியவில்லை. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாட்ஷா வெள்ளி விழாவில் ரஜினி நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கெதிரான உரையை சேர்த்து நேற்று வெளியிட்டேன்.
இருப்பினும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு ஒரு தனி பதிவு வெளியிட்டால் அஞ்சலி செலுத்த விரும்புபவர்களுக்கு தூண்டுகோலாக அமையுமே என்ற காரணத்தால், நேற்று வெளியிட்ட “Times of India” அஞ்சலி படிவத்தை URL வடிவத்தில் இங்கும் இணைத்துள்ளேன். கீழ் கண்ட முகவரியை க்ளிக் செய்து உயிர்நீத்த ஆத்மாக்களுக்கு உங்கள் அஞ்சலியை பதிவு செய்யுங்கள்.
Pay your tributes to those who killed in Mumbai
http://timesofindia.indiatimes.com/tributes.cms
தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் தம் இன்னுயிர் நீத்த அப்பாவி மக்களுக்கும், பாரதத்திற்கு விருந்தினர்களாக வந்து எதிர்பாராவிதமாக மடிந்த அயல் நாட்டவருக்கும், தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு கடமையை செய்யும்போது வீரமரணமடைந்த காவல்துறையினருக்கும், அதிரடிப்படையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எங்கள் இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி.
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...