எந்திரனின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் & தந்தையர் தினத்தன்று சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த அன்புப் பரிசு…!!

1) தந்தையர் தினம் - சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த அன்புப் பரிசு…!!
ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை தான் பெரும்பாலானா நாடுகளில் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், தங்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு தங்களை பேணிக்காக்கும் தத்தமது தந்தையர்க்கு அவரவரது பிள்ளைகள் வாழ்த்துக் கூறி பரிசுப் பொருட்களை வழங்குவர்.
சமீபத்தில் தந்தையர் தினத்தன்று, சூப்பர் ஸ்டாரின் அன்பு மகள்கள் இருவரும் தங்கள் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்தை கூறி எதிர்பாராத அன்புப் பரிசு ஒன்றை அளித்து அவரை திக்குமுக்காடச் செய்துவிட்டார்களாம். “எங்கப்பா ரொம்ப ரொம்ப உறுதியானவர்” என்று கூறி பெருமைப்படுகின்றனர் இரு மகள்களும். (என்ன பரிசு கொடித்திருப்பாங்க…ம்… செம சஸ்பென்சா இருக்கே…!)
2) கவிஞர் மதன் கார்க்கி - ‘எந்திரன்’ தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்!!
வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ படத்திற்கு பாடல் இயற்றுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை எழுதும் வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா? சும்மா வைரமுத்துவின் வாரிசு என்ற ஒரே தகுதியை மட்டும் பெற்றுகொன்று கார்க்கி அந்த வாய்ப்பை பெறவில்லை.
மேற்கொண்டு படியுங்கள் புரியும்.
மதன் கார்க்கி கவியரசு வைரமுத்துவோட மகன் என்பது நிறைய பேருக்கு தெரியும். ஆனால் தெரியாதது : அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் Research Scholar ஆகவும் B.E., M.E., வகுப்புகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார் என்பது.
கார்க்கி கூறுகிறார், “நான் முதல் முறை ஷங்கர் சாரை சந்திச்சப்போ, வைரமுத்துவோட மகனா அறிமுகமாகளை. என் பெயர், profession எல்லாம் சொல்லிவிட்டு, எந்திரன் படத்தில் சுஜாதா சார் இல்லாத வெற்றிடத்தை ரோபோடிக் தொழில்நுட்பம் பற்றி தெரிந்த என்னால் ஓரளவு குறைக்க முடியும் என்று நம்பிக்கையுடன் பேசினேன். அதுக்கு பிறகு நடந்த ரெண்டாவது சந்திப்பில் தான், நானும் ஷங்கர் சாரும் ஓரளவு நெருங்கி வந்தோம். எந்திரனில் பாடல் எழுதும் வாய்ப்பும் வந்தது. இப்போ எந்திரனில் ஒரு பக்கம் பாடலாசிரியராகவும் ஒரு பக்கம் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளராகவும் முழு மனதுடன் பணியாற்றி வருகிறேன்.”
தொழில் நுட்ப காட்சிகளில் கவன செலுத்த நிச்சயம் கார்க்கி போல அந்த துறையில் வல்லுநர் ஒருவரும் எந்திரன் டீமுக்கு தேவைதான். சரியான நபர் சரியான படத்தில் சேர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள் கார்க்கி…!!
(இணைக்கப்பட்ட படத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற கார்க்கியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார்..!!)

3) ஒரே சாய்ஸ் ரஜினி தான் - ஸ்ரேயா
மார்கெட் இருக்கும்போதே நாலு படம் நடித்தோமா, கல்லா கட்டினோமா என்று குதிரைக்கு லாடம் கட்டியது போல 24 மணிநேரமும் ஷூட்டிங் ஷூட்டிங் என்று எந்திரத் தனமாக உழன்று, இளமையும் பருவமும் போன பிறகு, அவற்றை தேடுவது தான் பெரும்பாலான நடிகைகளின் வாடிக்கை.
ஆனால் இவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் ஸ்ரேயா. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து வருகிறார். பிறருடன் பேசும் பழகும் interact செய்யும் வாய்ப்புக்கள் வந்தால் அதை ஆர்வமோடு அணுகுகிறார். Times Avenues வொர்க்ஷாப்பில் கலந்துகொள்வதில் இருந்து, நடிகர் சூர்யாவின் ‘Joy of giving week’ சேவை நிகழ்ச்சி வரை அனைத்திலும் பளிச் புன்னகையுடன் ஆஜராகிவிடுகிறார் ஸ்ரேயா. புதிய படங்களில் ஸ்ரேயா சற்று குறைவா தான் கமிட் ஆகியிருக்கிறார் என்றாலும் அப்படி உள்ள எத்தனை நடிகைகள் மேற்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்?
ஸ்ரேயா சமீபத்தில் செய்த புதுமை - சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின் கோவை மாவட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்டு யோகா பயிற்சி பெற்றது தான். ஸ்ரேயாவை வெள்ளியங்கிரி மலையில் பார்த்து வியப்பவர்களுக்கு அவர் சொல்லும் பதில், “என்னை நான் தேடி செல்லும் பயணம் இது.” ஆஸ்ரமத்தில் தங்கி ஒரு நடிகை என்ற பந்தா எதுவுமின்றி அனைவரிடமும் சகஜமாக பழகி… மொத்தத்தில் அசத்திவிட்டார் ஸ்ரேயா.
இந்த பயிற்சியில் தான் பங்கேற்ற அனுபவங்கள் குறித்து இந்த வார குங்குமத்திற்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாக கூறியுள்ளார் ஸ்ரேயா.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி:.”உங்களுக்கு பிடித்ததெல்லாம் என்ன?”
“வெண்மை நிறம் ரொம்ப பிடிக்கும். பிடித்த கடவுள் என்று குறிப்பிட்டு கூற முடியவில்லை. இந்தியில் அமிதாப் பச்சன், மாதுர் தீட்சித், தமிழ்ல பிடிச்ச நடிகர்னா எப்பவுமே என் சாய்ஸ் ரஜினி தான். பிடித்த இடம் கோவா. தொந்தரவில்லாத இடம் அது.”
(அவர் ரஜினி பற்றி கூறியிருக்கும் இந்த ஒரு சில வார்த்தைகள் தான் நம் தளத்தில் இந்த செய்தி இடம் பெற காரணம் என்று நான் உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன? )
4) சோப்பிக்கண்ணை பாராட்டிய ரஜினி
ஒரு படத்திற்கு நல்ல டாக் வந்துவிட்டால் அந்த படத்தை பார்க்க ரஜினி தயங்குவதேயில்லை. படத்தை பார்த்து ரசித்து சம்பந்தப்பட்ட டீமிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துவிடுவார். இந்த ஆண்டு துவக்கத்தில் வந்த ‘வெண்ணிலா கபடிக் குழு’ முதல் நேற்று வந்த ‘பசங்க’ படம் வரை இதற்க்கு சாட்சி. இப்படி கோலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னை சூப்பர் ஸ்டார் update செய்து கொள்வதும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம்.
சமீபத்தில் ‘பசங்க’ படத்தை ரசித்த சூப்பர் ஸ்டார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தாராம். அதுமட்டுமல்ல படத்தில் நடித்த சரோஜா புகழ் சோப்பிக்கண்னின் நடிப்பை பார்த்து “சூப்பரா நடிச்சிருக்காங்க” என்று சர்டிபிகேட் வழங்கினாராம். விஷயத்தை கேள்விப்பட்ட சோப்பிக்கண்ணு வேகாவுக்கு பயங்கர குஷி. இருக்காதா பின்னே? One man industry கொடுத்த பாராட்டாச்சே…!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...