“சூப்பர் ஸ்டாருடன் நான் நடிப்பது மிகப் பெரும் பாக்கியம்” – ராணாவை உறுதி செய்தார் தீபிகா!

ராணா குறித்து மேலும் சற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.  இன்றைய டைம்ஸ் ஒப் இந்தியா – சென்னை டைம்ஸ் இதழில் இது தொடர்பாக வெளிவந்துள்ள விரிவான செய்தி:
தீபிகா படுகோனே ராணாவில் நடிப்பது உறுதியாகிவிட்டது. அதுவும் அதிகாரப்பூர்வமாக. இதுகுறித்து, தீபிகா கூறுவது என்ன?
சென்னை டைம்ஸ் சார்பாக அவரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது…. “இந்தியாவின் மிகப் பெரிய நடிகருடனும் வரலாறு படைப்பவருடனும் நடிப்பது  மிகப் பெரிய பாக்கியம். அது குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன். கால்ஷீட்டுக்காக  நான் கொடுக்கவேண்டிய தேதிகள் குறித்து தற்போது ஆலோசித்து வருகிறேன்!”
தீபிகாவுக்கு இது தமிழில் முதல் படமாகும். பாலிவுட்டில் ஷாருக்கானுடன் அவரது முதல் அறிமுகம் அமைந்தது . தமிழில் சூப்பர் ஸ்டாருடன்.
படத்தின் தயாரிப்பாளரான சௌந்தர்யா அஸ்வின் இதை நம்மிடம் உறுதி செய்தார். “சில நாட்களுக்கு முன்பு தான் ராணாவில் நடிப்பதை தீபிகா உறுதி செய்தார். அவர் எங்களுடன் பணியாற்றுவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.”
சரித்திர படமாக இருந்தாலும், ராணா மிகப் பிரமாண்டமான – ஹை பட்ஜெட் படமாக அமையும் என்று தெரிகிறது.
“அப்பா இதுவரை முழுநீள சரித்திர படத்தில் நடித்ததில்லை. ஆகையால் ரசிகர்களுக்கு ராணாவில் மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. படத்திற்காக இப்போதே கடுமையாக உழைக்க துவங்கியிருக்கிறோம். படத்தில் மிகப் பெரிய மாளிகைகளும் அரண்மனைகளும் போர்க்கள காட்சிகளும் வருகின்றன. இதில் மிகப் பெரிய ஹை-லைட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை ரசிகர்கள் மூன்று வித ரோல்களில் பார்க்கப்போகிறார்கள் என்பது தான்.”
தயாரிப்பாளரே சொல்லிட்டார். அப்புறம் என்ன?
Times of India Orignal News scan
Deepika TOI 640x841  “சூப்பர் ஸ்டாருடன் நான் நடிப்பது மிகப் பெரும் பாக்கியம்”  – ராணாவை உறுதி செய்தார் தீபிகா!
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...