Rajinikanth Interview in SUNTV - எந்திரன் அனுபவம் கூடிய விரைவில் புத்தகமாக எழுதுவேன் - தலைவர்.

ம்ம வாழ்க்கையில் ஒரு சில நிகழ்வுகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது - அந்த மாதிரி ஒரு தருணத்தில் தான் இருப்பதாக, ஒரு மீடியா நபர் என்ற அடையாளத்தையும் தாண்டி தன்னை ஒரு ரஜினி ரசிகன் என்ற அடையாளத்தோடு தலைவரை பேட்டி கண்டார் விஜய்சாரதி.

தலைவரை விஜய்சாரதி பேட்டி எடுப்பதா என்று உங்களில் சிலர் வினா எழுப்பக்கூடும். ஆனால் உற்று நோக்கினால் இதிலும் தலைவரின் பெருந்தன்மையே வெளிப்படும். தன்னை பேட்டி எடுப்பவரின் அந்தஸ்தை பார்த்து பேசுபவர் அல்ல நம் தலைவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், தலைவரை நேரில் பார்க்கும்பொழுது ஒரு வார்த்தை கூட நம்மால் பேச முடியாது.. அளவிற்கு அதிகமாக பேசும் விஜயசாரதியும் தலைவர் முன்பு அந்த நிலைமையில்தான் இருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்த தலைவரின் பேட்டி நிகழ்ச்சி முழுக்க தான் எந்த விதத்திலும் சூப்பர் ஸ்டார் மாயையில் மாட்டுபவர் அல்ல - என்றும் சிவாஜி ராவ் தான் என்பதை தனது எளிமையான பேச்சி திறன் மற்றும் Body Language மூலம் வெளிபடுத்தினார்.

நாம் எதிர்பார்த்தது போலவே இந்த பேட்டி எந்திரன் பௌவுன்டரியை தாண்டி செல்லலாமல் தலைவர் மிக சாமர்த்தியமாக கையான்டது தலைவருக்கே உரித்தான சிறப்பு திறன்.. ஷங்கர், ரஹ்மான் மற்றும் கலாநிதி மாறன் மீது தலைவர் வைத்திருக்கும் அளவிற்கு அதிகமான மரியாதையை பேட்டி முழுக்க உணர முடிந்தது.

காதல் அணுக்கள் பாடலில் நடித்ததை ஒரு 'Adventure' ஆக குறிப்பிட்ட தலைவர், கிளிமஞ்சாரோ பாடலில் தன்னுடன் நடனம் ஆடிய ஒவ்வொருவரின் திறமையும் மனம் திறந்து பாராட்டியது சிறப்பு.

சிட்டியின் அறிமுக சீன் மிக நன்றாக வந்ததும், அந்த டென்ஷன் போக்குவதற்காக கேரவன் வந்து ஒரு டீ குடித்து ஒரு தம் அடித்தது முதல் திரை படங்களில் புகை பிடிக்காமல் இருப்பதற்கு காரணத்தை சொன்னது வரை - தலைவர் என்றும் எப்பொழுதும் ஒரு திறந்த புத்தகம், எதிலும் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கையை வாழ்கிறார் என்பதை நாம் உணரலாம். இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் படிக்க வேண்டிய பாடம் இது.

ஹாலிவுட் டெக்னிசியன்ஸ் பற்றி குறிப்பிடும் தலைவர் அவர்களது ஒழுக்கம் மற்றும் நேரம் தவறாமை குறித்த தனது கருத்துக்களை சொல்லும்பொழுது அழகு.

ஜனங்களை முட்டாள் என்று நனைப்பவன் - முதல் முட்டாள் என்று ஒரு மிக பெரிய விஷயத்தை மிக சாதரணமாக தனது ஸ்டைலில் சொல்லும் தலைவர், கடந்த முப்பத்தைந்து வருடங்களாக ரசிகன் தன மீது வைத்திருக்கும் அன்பு குறித்து பேசுவது மிக நெகுழ்ச்சி.

எந்திரன் அனுபவத்தை ஒரு புத்தகமாக கூடிய விரைவில் எழுதவிருப்பதாக தலைவர் சொன்னது நாம் எதிர்பார்க்காத இனிய சர்ப்ரைஸ்!!

பேட்டியின் நிறைவின் பொழுது தலைவரின் சமீத்திய ஹிமாலய பயணத்தின் புகை படங்களை திரையில் ஓட - அதன் பின்னணியில் ஒலித்த பாடல் வரிகள் ..

"மாற்றம் கொண்டு வா...
மனிதனை நீ நேசி...
உனது ஆற்றலால் -
உலகை நீ மாற்று..

எல்லா உயிருக்கும்..

நன்மையாய் இரு..
எந்த நிலையிலும் -
உண்மையா இரு"


புரிகிறதா நண்பர்களே ?? - சரி ஓகே.. இப்பேட்டியின் வீடியோ தொகுப்பு இதோ..










-

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...