சூப்பர் ஸ்டாரின் புதிய ருத்ராக்ஷ மோதிரம் - சில தகவல்கள




சமீபத்தில் நடந்த நட்சத்திர உண்ணாவிரதத்திலும் ரசிகர்கள் சந்திப்பிலும், ரஜினியை சந்தித்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது, அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மோதிரம்.
பெரிய சைசில் இருந்த அது, சூப்பர் ஸ்டாரின் கம்பீரமான கரங்களுக்கு மேலும் மெருகை கூட்டியுள்ளது என்றால் மிகையாகாது.
ருத்ராக்ஷத்தில் பல வகைகள் உள்ளன. அதை அணிவதால் பல நல்ல பலன்கள் உண்டு. சனி தசைக்கும் ருத்ராக்ஷத்துக்கும் அநேக தொடர்புகள் உண்டு. இது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதையெல்லாம் குமுதமும், குங்குமமும் பார்த்துகொள்ளும்.
சுருக்கமாக இங்கு கூறுகிறேன்.

ருத்ராக்ஷத்தை தூய, கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களே மோதிரமாகவோ அல்லது ப்ரேஸ்லெட்டாகவோ உபயோகிக்கவேண்டும். இல்லையெனில் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
மருத்துவ ரீதியாக கைகளில் இருந்து செல்லும் நரம்புகளுக்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூளையின் இயக்கத்தை அவை வெகுவாக கட்டுபடுத்தும். நம் சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி நம் நோக்கத்தை அடைய அதற்க்கு இந்த ருத்ராக்ஷ மோதிரம் மிகவும் துணைபுரியும்.
ஜாதக ரீதியாக கடும் தசையில் இருப்பவர்கள் உரிய ஆலோசனை பெற்று அதற்கேற்றார் போல் இதை அணிவது, அவர்களது கஷ்டத்தை குறைக்கும். துன்பங்கள் அகலும்.
ருத்ராக்ஷம் அணிந்த நேரம் சூப்பர் ஸ்டாருக்கு எல்லாம் நல்லபடியாக நடந்து வருவது போல் எனக்கு தோன்றுகிறது. (இது நம்ம கண்டுபிடிப்பு!! ஹி…ஹி…)
குறிப்பு 1:
ஜஸ்ட் ஒரே மாதிரி போய் எனக்கும் போரடித்துவிட்டது. அதனால் இது ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று கூறவும் ?
குறிப்பு 2:
தீர்க்கதரிசனம்
முந்தைய பதிவில் நான் கூறிய என் பிரச்னையை பற்றி என் நண்பர்களிடம் இருந்து சில ஆலோசனைகள் வந்துள்ளன. அவற்றை பரிசீலித்து பெரும்பாலனவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான ஒரு தீர்வை விரைவில் எட்டுவோம் என்று நம்புகிறேன். இது குறித்து தங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாக கமெண்ட்டில் கூறலாம். அப்படி பலர் முன்னிலையில் கூற விரும்பாதவர்கள் - எனக்கு சங்கடம் ஏற்படும் என்று கருதினால் - எனக்கு ஈமெயில் அனுப்பலாம்.
இக்கட்டான இந்த நேரத்தில் எனக்கு என்ன உதவிகள தேவைப்பட்டாலும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
கடந்த சில ஆண்டுகளாக நான் செய்யும் இந்த பணியின் பலன்களை பற்றி அணுவளவு கூட நான் யோசித்தது இல்லை. ஆனால் இன்று அது குறித்து யோசித்து ஒரு நல்ல தீர்வை எடுக்கவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை எனக்கு. அப்போது தான் நம் பயணத்தை தொய்வின்றி தொடரமுடியும். வெற்றிக் கோட்டின் அருகே வந்து துவண்டு போவது விவகமல்ல. இதை ஒரு பெரிய குடும்பமாக நான் உணர்கிறேன். தலைவர் பல விஷயங்களை சூசகமாக அறிவித்திருக்கும் இந்த இனிய பொழுதில் நம் எல்லாரது பொறுப்பும் முன்னை விட அதிகமாகிவிட்டது. (அவரவர் சொந்த கடமையும் உண்டு - அது தனி.) எல்லாம் கைகூடி வரும் இந்த பொழுதில் அற்ப காரணங்களுக்காக நாம் நம் பயணத்தை ஏன் தடைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற சிந்தனையே இப்போது என்னை ஆக்ரமித்துள்ளது.
நண்பர் ஈ.ரா. ஒரு பதிவில் கூறிய வரிகளை நமது சபதமாக ஏற்போம்:
//தலைவர் மாதிரியே அவரவர் சக்திக்கு ஏற்ப ஒரு காரியத்தை, சாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை டார்கெட்டாக வைத்துக் கொள்ளுங்கள்… தலைவர் சாதிக்கும் நேரத்தில் நீங்களும் ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி நெஞ்சை நிமிர்த்திக்க் கொள்ள முயற்சி செய்யுங்களேன்..
குறைந்த பட்சம் நமது நல்ல காரியங்களால் ஒரு பத்து பேராவது நம் மீது நல்ல எண்ணம் கொள்ள உறுதி கொள்வோம்….
தலைவர் சாதிக்கும் நேரத்தில் நானும் என் பர்சனல் வாழ்கையில் (வலைத் தளம் தொடர்பாக அல்ல) ஒரு பெரிய சாதனையை செய்திருப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். (ஜஸ்ட் என் மேல் அக்கறை கொண்டுள்ளவர்களுக்காக இந்த உறுதிமொழி).
நீங்களும், ஒவ்வொருவரும் இது போன்ற ஒரு உறுதிமொழியை எடுக்கவேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன். தலைவர் ரசிகர் சந்திப்பில் கூறியது அதுதான். இதை தீர்க்கதரிசனமாக கூறிய ஈ.ரா. அவர்களுக்கு என் நன்றி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...