ரஜினி ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது - சத்ருகன் சின்ஹா தகவல


ரஜினி ரசிகர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது என்று ரஜினியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா கூறியிருக்கிறார்.
ரஜினி ஒரு பொது சொத்து; இனி ஒரு கூண்டுக்குள் அடைக்க முடியாது
சொந்த அலுவல் காரணமாக சென்னை வந்துள்ள சத்ருகன் சின்ஹா சனிக்கிழமை சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பேச்சின் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்ட சத்ருகன் சின்ஹா “ரஜினி தற்போது, தனது தனிமையை போற்றும், தக்கவைத்துக் கொள்ளும் நிலையை தாண்டிவிட்டார். அவர் இப்போது ஒரு பொது சொத்து. ஒரு கூண்டுக்குள் இனி அவரை அடைக்க முடியாது. தமிழக மக்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.
தற்போதைய கவனம் எந்திரனில் தான்
தீவிர அரசியலை பற்றி ரஜினி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக பி.ஜே.பி.யின் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார். “ஆனால் தற்போது நடித்து வரும் எந்திரனில் ரஜினியின் தற்போதைய கவனம் இருக்கிறது.”
அரசியலுக்கு வருவதற்கு முன்பு, ரஜினி மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்
ரஜினிக்கு ஏதாவது ஆலோசனை கூற விரும்புகிறீர்களா என்று சின்ஹாவிடம் கேட்டபோது, ஆந்திரதிதில் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் நடிகர் சிரஞ்சீவி தற்போது சந்தித்துவரும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், ரஜினி நேரடி அரசியல் பிரவேசம் செய்வதற்கு முன்பு, மக்களிடம் சமூக ரீதியிலான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். (சூப்பர் சத்ருகன் சார். நல்ல, சமயோசித யோசனை!! ரஜினி ரசிகர்கள் சார்பாக தங்களுக்கு மிக்க நன்றி.)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...