
அவற்றின் நடுவே... இந்த நூற்றாண்டின் அரிய மனிதர்களில் ஒருவர், நமது தலைவர் சூப்பர்ஸ்டாரின் படம்!
ஒருநிமிடம் ஆடிப்போய் விட்டேன். கண்களில் என்னையும் அறியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டது. வி.கே.ஆருக்கும்தான். என்னண்ணே இது ரஜினி படத்தை இங்க வச்சிருக்கீங்க...?, என்றோம் நாங்கள் மூவரும்.‘அதுக்குத் தகுதியானவர்தான்... வயசுல அவரு சின்னவரா இருந்தாலும் குணத்துல மகான். அவருக்கு என்னோட மரியாதையை வேற எப்படிக் காட்டுவேன்... இன்னிக்கு நான் உடலால நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மனசால கொஞ்சமாவது தெம்பா இருக்கேன்னா அதுக்கு ரஜினி தம்பிதான் காரணம். எப்பவோ ஒருமுறை... ஒரு பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன, அவர்கூட பிளைட்ல போறப்ப, எனக்கும் ஒரு படம் பண்ணித் தரணும்னு கேட்டுக்கிட்டேன் அவர்கிட்ட.கேட்டவுடனே கடவுள் வரம் கிடைக்காதில்ல... அந்த மாதிரிதான் கொஞ்ச நாள் நான் காத்திருந்தேன். அப்புறம் நானும் மறந்திட்டேன். ஆனா அவரோட எல்லாப் படத்திலயும் எனக்கு தவறாம வாய்ப்புக் கொடுத்திட்டிருந்தார். நான் எதிர்பார்க்காத பெரிய தொகை சம்பளமாக் கொடுக்க வைப்பார்.சரி... நமக்கு படம் பண்றதுக்குப் பதில் இப்படி உதவி பண்றார் போலன்னு நினைச்சு சமாதானமாயிட்டேன். ஒருநாள் பேப்பர்லதான் செய்தி படிச்சேன்... அருணாச்சலம்னு ஒரு படத்தை அவர் தயாரிக்கிறதாவும், அந்தப் படம் தயாரிக்கும் 8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ் போட்டிருந்தாங்க. எனக்கு ஒண்ணும் தெரியல... அப்புறம் ரஜினியே போன்ல விஷயத்தைச் சொன்னாரு..அந்தப் படத்துக்கு ஒரு தயாரிப்பாளரா நான் நயா பைசா கொடுக்கல... அவரும் என்கிட்ட இதப்பத்தி ஒண்ணும் கேக்கல.படத்துல நானும் நடிச்சேன், வில்லனா. அப்பவே சொல்லிட்டேன், ரஜினிய திட்டற மாதிரி வசனம் ஏதும் வச்சிடாதீங்கன்னு. படம் முடிஞ்சு பெரிய அளவில் ஓடுச்சி.. ஒருநாள் என்னைக் கூப்பிட்டிருந்தார் ரஜினி... ஒரு பெட்டில வச்சி ரூ.25 லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக ஒரு பெரிய தொகையை தனியா கொடுத்தார்... இந்தக் காலத்துல இப்படியெல்லாம் உதவற குணம் யாருக்கு வரும்... சும்மா கொடுத்தா என் கவுரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு தயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி. அப்போ எனக்கு எம்ஜிஆர் ஞாபகம் வந்திடுச்சி... அவரும் இப்படித்தான். அவரை நம்பினவங்கள திடீர்னு ஒருநாள் தயாரிப்பாளர்னு அறிவிச்சு பெரிய ஆளாக்கிடுவார். எனக்கு இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்தது ரஜினியாலதான். அவருக்கு இதைவிட சிறப்பான பதில் மரியாதையை தர எனக்குத் தெரியல... அவர் ரொம்ப நாள் நல்லாயிருக்கணும். நிறைய பேர் அவரால நல்லா வாழணும்...” என்றார்.இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களில் வி.கே.ஆர். நம்மைவிட்டு மறைந்தார். அரைவேக்காடுகளும், அஞ்ஞானிகளும் எவ்வளவுதான் புழுதிவாரித் தூற்றினாலும் அவற்றையெல்லாம் தனது நல்ல குணத்தால் பொசுக்கிவிட்டு ரஜினி என்ற மனிதர் சூரியனாய் ஜொலிப்பது எப்படி எனப் புரிகிறதா...! -சங்கநாதன்
No comments:
Post a Comment