இந்த சூழ்நிலையில் வேண்டாமே…ரசிகர்களுக்கு தளபதி சத்தி வேண்டுகோள்!!

சென்னையில் வரும் புதன் கிழமை நடைபெறுவதாக இருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்து யாரும் வரக்கூடாது என்று தளபதி சத்யநாராயணன் தடை விதித்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர் மன்ற பிரமுகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் அவசர கூட்டம் கூட்டபோவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே சூப்பர் ஸ்டாரின் தலைமை மன்றத்தில் பரபரப்பி தொற்றிகொண்டது.
இந்த சிக்கலான சூழ்நிலையில் இது போன்ற ஒரு கூட்டம் (எந்த நோக்கத்திற்காகவும்) நடை பெறுவதை தலைமை மன்றம் விரும்பவில்லை. எனவே சத்தி வெளிமாவட்டங்களுக்கு போன் செய்து “இங்கு கூட்டம் எதுவும் யாரும் ஏற்பாடு செய்யவில்லை. தயவு செய்து வரவேண்டாம். இன்றைய சூழ்நிலையில் இது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் நடைபெறுவதை ரஜினி சிறிதும் விரும்பமாட்டார். உங்களது கோரிக்கைகளையும், எண்ணங்களையும் நிச்சயம் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். உங்களையே அது குறித்து அவரிடம் பேச ஏற்பாடு செய்கிறேன். அது வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு ஏதாவது செய்து தலைவருக்கு சங்கடங்கள் ஏதும் ஏற்படுத்திவிடாதீர்கள்,” என்று தன்னிடம் பேசும் அனைத்து ரசிகர் மன்ற பிரமுகர்களுக்கும் அறிவுரை கூறியிருக்கிறார் சத்தி.
இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை நகர மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “தளபதி சத்தி கூட்டம் பற்றி கேள்விப்பட்டால் நிச்சயம் இது போன்று கடிவாளம் போடுவார் என்று எங்களுக்கு தெரியும். அதனால் தான் பெயர் கூட போடாமல் அறிக்கை வெளியிட்டோம். அதையும் மீறி தளபதி எங்களை அடையாளம் கண்டுவிட்டார். அவரது வார்த்தையை தட்ட முடியாது. இருப்பினும் சூப்பர் ஸ்டாருக்கு எதிராக செய்யப்படும் அவதூறுகளுக்கும் குசேலன் படத்திற்க்கு எதிராக ஏவப்படும் பிரச்சாரங்களுக்கும் பதிலடி கொடுப்பது குறித்தாவது ஆலோசிக்க அனுமதி கோரியிருக்கிறோம். இது குறித்து மாற்ற மன்ற பிரமுகர்களுடன் பேசி வருகிறோம். நல்ல முடிவு எடுக்கப்படும்.”(அப்படி கூட்டம் நடந்தால் அதை உங்களுக்கு விரிவாக எனது இணையத்தில் விளக்குகிறேன்)
என்னை பொறுத்தவரை தளபதி சொல்வது சரிதான். மீடியா மேற்படி ரசிகர் மன்ற கூட்டத்தை ரஜினிக்கு எதிராகவே பிரச்சாரம் செய்யும் அபாயமிருக்கிறது. நல்லதோ கெட்டதோ - மீடியாவுக்கு ரஜினி வேண்டுமே…வலிய போய் பிரச்சனையை வாங்குவானேன்?
இந்த ரசிகர் மன்ற செய்தியை முதலில் பிரசவித்ததே நாம் தான். அப்படியிருக்க அதற்க்கு கை கால் வாய் முளைத்து எப்படியெல்லாம் ரஜினிக்கு எதிராக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவியிருக்கிறது தெரியுமா?
நண்பர் சரத் கண்ணன் எனக்கு ஒரு ஆங்கில வெப் சைட்டின் லிங்க் அனுப்பியிருந்தார். (கமெண்ட்ஸ் பகுதியில் அண்ணன் வஸி கூட இதைத்தான் கூறியிருக்கிறார்.) அதை ஓபன் செய்து பார்த்து அதிர்ந்துவிட்டேன். “குசேலன் தோல்வியை சரிக்கட்ட ரசிகர்கள் கூட்டத்தை கூட்டும் ரஜினி.” - இது எப்படி இருக்கு?
ஒரு செய்தி எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது பார்த்தீர்களா?
தனது புதிய படங்களை கருத்தில் கொண்டு ரஜினி இது போல் ரசிகர் கூட்டத்தை தனது ராகவேந்தரா மண்டபத்தில் கூடியிருக்கிறாராம். இதற்கு முன் பாபா தோல்வியின் பொது கூட இப்படி செய்திருக்கிறாராம். அடப்பாவிகளா…பிரச்சனையே அது தானே!! இப்படியெல்லாம் எங்கள் தலைவனுக்கு சிந்திக்க தெரிந்திருந்தால் அவர் இந்நேரம் பிரதம மந்திரியாகவே ஆகியிருப்பாரே…
ஹூம்…!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...