ராணா – ஃபோட்டோ ஷூட் அடுத்த வாரம் ஆரம்பம்?

ராணா பற்றி தினம் தினம் புதுப் புது செய்திகள் வந்தவண்ணமுள்ளன. தயாரிப்பு தரப்பில் ஆரம்பத்தில் அளித்த ப்ரெஸ் நோட்டோடு சரி. அதற்க்கு பிறகு எந்த தகவலும் இல்லை. கே.எஸ். ரவிக்குமார் அதற்க்கு பிறகு டிஸ்கஷனில் பிசியாகிவிட, தினம் தினம் புதுப் புது செய்திகள் வெளியான வண்ணமுள்ளன. அவற்றில் ‘எது உண்மை’ என்று நடக்கும்போது தான் தெரியும்.
இந்நிலையில், ராணாவில் நடிக்க தீபிகா ஒப்புக்கொண்டுவிட்டதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டில் ஏற்கனவே, முன்னணியில் இருக்கும் தீபிகாவிற்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகா ஆகிய தென்  மாநிலங்களில் காலூன்ற ராணாவை விட்டால் சரியான வாய்ப்பு அமையாது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. மேலும், சென்ற ஆண்டு, ஐஸ்வர்யா ராய்க்கு ரோபோவை தவிர வேறு படங்கள் எதுவும் வெற்றிப் படமாக அமையவில்லை என்பதும் தீபிகாவை நிரம்ப யோசிக்க வைத்திருக்கிறது. எனவே, ராணாவை ஒப்புக்கொள்வதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க தீபிகா திட்டமிட்டிருக்கிறார்.
இதனிடையே, இந்த வாரம் வெளியான குங்குமத்தில் ராணா குறித்த குட்டி கவர்ஸ்டோரி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இருக்கும் பெரும்பாலான விஷயங்கள் நமக்கு தெரிந்தது தான் என்றாலும், படத்துக்கான ஃபோட்டோ ஷூட் அடுத்த வாரம் துவங்க இருப்பதாக கூறியிருப்பது சூப்பர் தகவல்.
ராணாவும் ஹராவும் ஒன்றா, வேறு வேறா, ராணா எத்தகைய படம், இது முழு நீள ஆக்க்ஷன் படமாக இருந்தாலும் இதில் அனிமேஷன் இடம்பெறுமா ? அல்லது ஆக்க்ஷன் மட்டுமா போன்று ரசிகர்களுக்கு இருக்கும் பல சந்தேகங்களை சூப்பர் ஸ்டாரே விரைவில் தீர்த்துவைப்பார் என்று கூறப்படுகிறது.
சீக்கிரம் தலைவா…! சீக்கிரம்…!!
Over to Kungumam…

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...