Indian Tamil Fisherman Killing

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இது வரை நடுக்கடலில் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் திரு.ஜெயக்குமார் என்ற மீனவரை சிங்கள கடற்படை நடுக்கடலில் தூக்கிலிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் உலக அளவிலும் இணையத்திலும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்திய தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்ததால் சிங்கள கடற்படை அவர்களை கொல்வதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. எல்லையைக் கடப்பது கிரிமினல் குற்றமல்ல. கடப்பவர்கள் மீனவர்கள் என்பதால் இது சிவில் குற்றமே. எனவே சிங்கள கடற்படைக்கு அப்பாவி இந்திய தமிழக மீனவர்களை சுடவோ தூக்கிலிடவோ எந்த ஒரு உரிமையும் கிடையாது. மேலும், தூக்கிலிட்டு கொடுரமாக கொலவது தம் நாட்டை காக்கும் கடற்படையின் செயல் அல்ல. அது கொடுரமான சைக்கோ மனம் கொண்டவர்கள் செய்வது.
ரஜினிஃபேன்ஸ்.காம் தளத்தின் சார்பாக சிங்கள கடற்படையினால் அப்பாவி தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்படுவதை கடுமையாக கண்டிக்கிறது. பலியான மீனவர்கள் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரக்கத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணையத்தில் http://www.savetnfisherman.org/ என்ற வலைத்தளத்தின் மூலம் டுவிட்டர் தளத்தில் சார்பாக உலகலாவிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டு வருகிறது. நமது ரசிகர்களையும் வலைத்தள வாசகர்களையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். இந்தப் போராட்டம் இன்று (28-ஜனவரி-2011) இந்திய நேரப்படி இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரை வலுவாக நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க நீங்கள் செய்ய வேண்டியது:
1. உங்கள் டுவிட்டர் கணக்கில் லாகின் செய்யுங்கள் (டுவிட்டர் கணக்கு இல்லையெனில் புதிய கணக்கை துவங்கவும் http://www.twitter.com)
2. தமிழக இந்திய மீனவர்கள் படுகொலை பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
3. கருத்துக்களின் கடைசியில் #tnfisherman என்று சேர்க்கவும் ( #tnfisherman என்ற சொல்லுக்கு முன்னும் பின்னும் ஒரு ஸ்பேஸ் விடுங்க)
4. உங்கள் கருத்துக்களை போஸ்ட் பண்ணவும்

இந்தியத் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடிக்கும் வாழ்வுரிமையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நிற்போம்.

நன்றி.
- ரஜினிஃபேன்ஸ்.காம்

Credits:
( Naveen Varadarajan) "Crossing International waters is a Civil Offense, not criminal. (If they are fishermen)" http://twitter.com/#!/filmmakernaveen/status/30693737499721728
dagalti "Strangulation is not what a defending navy does. It's what lunatics who enjoy painful killing do." http://twitter.com/#!/dagalti/status/30828445583806464

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...