ரத்த தானத்துக்கென்று விஷேஷ தளம் - ரஜினி ரசிகர்களின் பாராட்டத்தக்க முயற்சி

ரசிகர்களுக்குள் ரஜினி எதிர்பார்க்கும் சமூக பொறுப்பும் மாற்றமும் வேகமாக பரவி வருகிறது. அதிவேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பமான இணையத்தை சரியான முறையில் பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக தென் மாவட்ட ரசிகர்கள் ரத்த தானத்துகென்று ஒரு விஷேஷ தளத்தை www.rajiniblood.com துவக்கியுள்ளனர்.
நெல்லையை சேர்ந்த நம் ரசிக சகோதரர் திரு. தாயப்பன் அவர்கள் தலைமையில் சிவகாசியை சேர்ந்த நண்பர் பொன்ராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இந்த தளத்தை வழிநடத்துவர்.
அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுபவர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விபரத்தை இதில் தெரிவித்தால் உடனடியாக ரத்த தானமளிப்பவரின் விபரங்கள் தெரியவரும். (தற்போது இது சோதனை முறையில் இயங்குகிறது. விரைவில் இது முழு மூச்சாக இயங்கும்).
நம் தள விருந்தினர்களும் நண்பர்களும் விருப்பப்பட்டால் தங்கள் பெயரை பதிவு செய்து இந்த சீரிய முயற்சிக்கு தோள் கொடுக்கலாம்.
உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் rajiniblood@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மேற்று முதல் (14/06/09) இந்த தளம் இயங்க துவங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் அநேகம் பேர் இதில் பெயரை பதிவு செய்துள்ளனர். மற்ற மாவட்ட ரசிகர்கள் விரைவில் சேரவுள்ளனர்.
ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த இவர்களை நாம் மனமார பாராட்டுகிறோம்.
நண்பர் பொன்ராஜ் இந்த தளம் தொடர்பாக நம்மிடம் கூறியபோது பலர் அறிந்து பயன்பெறும் பொருட்டு செய்தித் தாள்களில் இது வெளிவர ஆவன செய்வதாக கூறியிருந்தோம். அதன் படி, நமது எளிய முயற்சியின் பலனாக இதோ மாலை மலர் தளத்தில் நம் தளத்தல் வெளியான செய்தி அப்படியே வந்துள்ளது. மாலை வெளிவரும் நாளிதழிலும் இது தொடர்பான செய்தி இடம்பெறும்.
http://www.maalaimalar.com/2009/06/15124546/CNI0330150609.html

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...