அரசியல் கேள்வியே வேணாம்பா-ரஜினி

அஜீத் நடிக்கும் அசல் பட பூஜையில் கலந்து கொள்ள வந்த ரஜினியை விடாமல் கேள்வி மழை பொழிந்த நிருபர்களைக் கையமர்த்திய ரஜினி, அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.அவர் அளித்த பேட்டி:அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?அது பற்றி நான் என்ன சொல்றது... என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க... ஆனா ஒரு ஸ்டார் என்பதையும் தாண்டி, அஜீத் நல்ல நடிகர். ஆனால் இன்று வரை அவரது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் விதத்தில், அவரைச் சிறப்பாக யாரும் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். வாய்ப்பு வந்தால் தூள் கிளப்புவார். மிகச் சிறந்த நடிகர் அஜீத்.. நோ டவுட்.மக்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல கலைஞர். நிச்சயம் அவரது ஒவ்வொரு படத்திலும் ஒரு மெஸேஜ் இருக்கும்.சார் ஒரேயொரு அரசியல் கேள்வி கேட்கலாமா?அதான் வேணாம்னு சொல்லிட்டேனே கண்ணா...இந்தத் தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்றாவது சொல்ல முடியுமா?ஹய்யோ..ஹய்யோ... சாரி (அவருக்கே உரிய சிரிப்புடன்)... நான் எதையும் சொல்ல மாட்டேன்னு சொன்னேனே... நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்..சிரஞ்சீவி மாதிரி கட்சி ஆரம்பிக்கும் திட்டமிருக்கா?நோ நோ நோ... இல்லை... அரசியல் கேள்விகள் வேண்டாம் ப்ளீஸ். நான்தான் முதல்லேயே சொன்னேனே... தாங்க் யூ என்றபடி எழுந்துவிட்டார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...