எல்லாம் அவன் செயல


சூப்பர் ஸ்டாரின் நிலைப்பாடு பற்றி சென்ற வாரம் எனக்கிருந்த மனநிலை வேறு… இப்போது இருக்கும் மனநிலை வேறு… இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம்.

“இவ்வளவு காலம் பொறுமையாக இருந்துவிட்டோம். இப்போது அவசரப் படவேண்டாமே…இன்னும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் பொறுத்துதான் பார்ப்போமே. எப்படியும் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும். முதலில் தலைவர் எந்திரனை நல்லபடியாக முடித்து சூப்பர் ஹிட்டாக்க வேண்டும்” என்று நினைக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டேன்.
இந்த மாற்றம் என்னுள் எப்படி எழுந்தது என்று எனக்கு புதிராகவே இருக்கிறது. நிச்சயமாக இது அவர் வெளியிட்ட அறிக்கையினால் மட்டும் அல்ல. எனக்கு அது நன்றாக புரிகிறது. இருப்பினும், என்னுள் இந்த பொறுமை திடீரென்று தோன்றியது ஆச்சரியமாக உள்ளது.
என் நண்பர்கள் சிலர் கூட இதே கருத்தை என்னுடன் பகிர்ந்துகொண்ட போது என் ஆச்சரியம் இன்னும் அதிகமானது.
அப்போது தான் திரு.சங்கநாதன் rajinifans.com இணையத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு பதிவில் இடம்பெற்ற சில வரிகள் என் நினைவுக்கு வந்தது.
“இந்த மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதல் எனக்கும் உண்டு. அதற்குப் பொருத்தமான நாளை அந்த ஆண்டவன் உணர்த்துவார் என்பதை ஆழமாக நம்புகிறேன் நான்.
அதுவரை இந்த மக்களை அவரே பொறுமையாக வைத்திருப்பார் என்பதையும் நம்புகிறேன்.”
- ரஜினி
எத்தனை சத்தியம்…இந்த வார்த்தைகள்!!!!!!
தலைவர் கூறியது போல், இறைவன் நம் மனதை மாற்றிவிட்டார் என்றே தோன்றுகிறது.
சரிதானே?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...