Thalapathy greets Thalapathy

With chief minister Karunanidhi handling over his responsibilities to his son MK Stalin and christening him as the Deputy Chief Minister, congratulatory messages have been pouring on the pet son of the DMK patriarch. Political circles aver that this recognition is long overdue for the local administration minister who has risen from the grassroots level. Many politicians have called him over telephone and some of them have even made a visit to the new DCM and extended their wishes. Noteworthy among the politicians are P Chidambaram, Puducherry CM Vaidyalingam to name a few.
From the film fraternity superstar Rajinikanth had contacted Stalin and extended his heartfelt wishes over phone. Whether this is indicative of the super star’s political move will have to be waited and watched.

ராகவேந்திரர் கோயில் திறக்கும் ரஜினி!

நடிகர்-நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள புதிய ராகவேந்திரர் கோயிலை ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார். சென்னையை அடுத்த அம்பத்தூரில் பகவான் ராகவேந்திரருக்கு, பலரது நன்கொடை மூலம் ஒரு கோவிலைக் கட்டி வருகிறார் ராகவா லாரன்ஸ். நீண்ட நாட்களாக இக்கோவில் கட்டும் பணிகள் நடந்து வந்தன. தற்போது வேலை முடியும் தருவாயில் உள்ளது. இந்த கோவில் திறப்பு விழா ஆகஸ்டு மாதம் நடக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி இக்கோயிலைத் திறந்து வைக்கிறார்.இதுகுறித்து ராகவா லாரன்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அம்பத்தூரில் கட்டப்பட்டு வரும் ராகவேந்திரா கோவிலை ரஜினி சாரை வைத்துதான் திறக்க வேண்டும் என விரும்பினேன். இதுபற்றி அவரிடம் சொல்லி அழைத்தேன். என் அழைப்பை ரஜினி சாரும் உடனே ஏற்றுக் கொண்டார். ஆகஸ்ட் மாதம்தான் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த தினம் வருகிறது. அதே நாளில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்து திறக்கிறார், என்றார்.ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் அறக்கட்டளைக்காக ரஜினி யும், அவரது மகள் சௌந்தர்யா ரஜினியும் தொடர்ந்து உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth to team with Murugadoss?

That seems to be the hottest buzz which is currently emanating in the Kollywood circles. Apparently, the ace director Murugadoss is said to have prepared an apt story for superstar Rajinikanth and even Rajini was said to have been impressed with it. If all goes well, then it could well be that Rajini might begin this venture with Doss as soon as he wraps up 'Endhiram'. Murugadoss on the other hand is busy with the making of his new movie with Shahrukh Khan.

சிரஞ்சீவியின் நிலை ரஜினியிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

நம்மை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகளை ஆக்கப்பூர்வமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு சிறிய முயற்சியே இது. மற்றபடி ரஜினி அரசியலுக்கு வருவார் என்றோ அல்லது வரமாட்டார் என்றோ கட்டியம் கூறுவது நமது நோக்கம் அல்ல.
—————————————————————————————————————–
சிரஞ்சீவியின் நிலை ரஜினியிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
சமீபத்திய தேர்தல் முடிவுகள் நம் சூப்பர் ஸ்டாரின் மனதில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அவரது எண்ணற்ற ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. காரணம் தமது ரசிகர்கள் சந்திப்பில் அவர் சொன்னபடி அரசியலில் திறமை, உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவைகள் இருந்தால் மட்டும் ஒருவர் ஜெயித்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை சாதகமாக இருப்பது அவசியம் என்பது சமீபத்திய தேர்தல் முடிவுகள் மூலம் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜியாருக்கு பிறகு அரசியல் பிரவேசம் செய்த அனைத்து நடிகர்களும் ஒரு வித அவசரத்திலும், உடனிருந்தவர்கள் உசுப்பேத்தியும் தான் நுழைந்தனரே தவிர அவர்களுக்கு உண்மையில் அதற்க்கான தகுதியோ, சூழலோ அல்லது நிர்பந்தமோ இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ரசிகர்கள் சொன்னாங்க…. அதான் ஆரம்பிச்சோம்….
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல் முதல் தேர்தலிலேயே ஜொலிக்காது போன சிரஞ்சீவியாகட்டும் விஜயகாந்த்தாகட்டும் அரசியல் பிரவேசம் செய்தமைக்கு காரணமாக கூறுவது ஒன்றே ஒன்றைத்தான். “என் ரசிகர்கள் கட்சி துவக்குமாறு வற்புறுத்தினார்கள். அது தான் கட்சி துவக்கினோம்.” ஆனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வற்புறுத்தியும் கட்சி துவக்க மறுக்கிறார். ஏன் மக்களே வற்புறுத்தியும் துவக்கவில்லை. அந்த ஆண்டவன் சொன்னால் தான் கட்சி துவக்குவேன் என்று கூறிவருகிறார். நம் ரசிகர்களிடையே இந்த பதில் சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அவர் வார்த்தைகளில் உள்ள வலிமையை தற்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தன்னையே பரிபூரணமாக நம்பும் ஒருவனுக்கு ஆண்டவன் உரிய காலம் வரும்போதும் காட்டாது விட்டுவிடுவானா என்ன?
கடந்த காலத்தில் சிரஞ்சீவியும், மேலும் சில நடிகர்களும் ஆர்பாட்டமாக அரசியல் பிரவேசம் செய்தபோது விரக்தியில் தள்ளப்பட்ட நமது ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரையும் அவ்வாறு நிர்பந்தித்தபோது, கொஞ்சம் கூட பதட்டப்படமால் “பொறுமை… பொறுமை” என்று அவர் சொன்னதன் அர்த்தம் இப்போது பலருக்கு புரிந்திருக்கும்.
சிரஞ்சீவி கடந்த ஆண்டு தமது அரசியல் பிரவேசத்தை தனது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புக்கிடையே அறிவித்தபோது “அவர் இன்னொரு என்.டி.ஆர்” என்று தான் ஒட்டுமொத்த மீடியாவும் அறிவித்தன. ஆனால் அதே மீடியா இப்போது அவரது தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் ஆரம்பத்தில் சிரஞ்சீவிக்கு கிடைத்தது என்.டி.ஆருக்கு கிடைத்தது போல அசத்தலான வரவேற்ப்பு தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள அவர் தவறிவிட்டார் என்பது தான் உண்மை. (சில மாதங்களுக்கு முன்பு, “சிரஞ்சீவி அரசியலில் ஜொலிப்பாரா?” என்ற கேள்விக்கு “சிரஞ்சீவிகாரு இங்கொக்க என்.டி.ஆரு” என்று குமுதம் அரசு பதில்களில் குறிப்பிட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.)
சிரஞ்சீவி - தவறு நிகழ்ந்தது எங்கே?
குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சியில் அதிகரித்து, தொண்டர்களிடமிருந்து சிரஞ்சீவி தனிமைப்படுத்தப்பட்டது, சிரஞ்சீவி பணம் பெற்று வேட்பாளர்களை அறிவித்தார் என்பது போன்று பரவிய செய்திகள், காங்கிரசாரை மிக மட்டமாக விமர்சித்து பிரசாரத்தில் ஈடுபட்டது, வேட்பாளர் தேர்வில் ரசிகர்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டது, என்று சிரஞ்சீவியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சிரஞ்சீவியின் சாலைப் பிரச்சாரங்களின் போது பல தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாயினர். ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு சிரஞ்சீவியின் இத்தகு பிரச்சாரம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று கூறி நீதிமன்றம் மேற்படி பிரச்சாரங்களுக்கு தடைவிதித்தது. ஆனால் சிரஞ்சீவி அதை ஏற்றுக் கொள்ளாமால் மேல்முறையீடு செய்தது அவரது ரசிகர்கள் அல்லாத நடுநிலையாளர்கள் பலரை முகம் சுளிக்க வைத்தது என்று நம் ஆந்திர நண்பர்கள் கூறுகிறார்கள். (இத்தகு வாகன பிரசாரத்தை தவிர்த்துவிட்டு அதற்க்கு பதிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடங்களில் சிரஞ்சீவி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்திருக்கலாம் என்பது நம் கருத்து.)
ஆந்திர சட்டமன்ற தேர்தல் - கட்சிகள் பெற்ற வாக்குகள்
மொத்த தொகுதிகள் - 294
காங்கிரஸ் கூட்டணி - 36.07 %வென்ற தொகுதிகள் - 157
தெலுகு தேசம் மகா கூட்டணி - 34.93 %வென்ற தொகுதிகள் - 106
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் - 15.36 %வென்ற தொகுதிகள் - 18
ஆந்திரம் ஒரேடியாக சிரஞ்சீவியை கைவிட்டுவிட்டதா?
இந்த முடிவுகளின் மூலம் ஆந்திர மக்கள் ஒரேடியாக சிரஞ்சீவியை நிராகரித்துவிட்டார்கள் என்று கருத முடியாது. போனால் போகட்டும் என்று அவருக்கு ஒரு சிறிய ஆனால் அரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இப்போது பிரஜா ராஜ்ஜியம் வைத்திருக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் சராசரி வெளிநடப்பு எதிர்க்கட்சிகள் போலல்லாமால் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டால் இன்னும் பல இடங்களில் வெற்றியை அளித்து அடுத்த முறை அவரது கட்சியை எதிர்க்கட்சியாக உட்காரவைப்பார்கள். அதையும் சரியாக செய்தால் மட்டுமே அதற்க்கு பிறகு ஆட்சியில் உட்கார வைப்பார்கள். அவர் அரசியலை கற்றுக்கொண்டு, நாளும் தெளிந்து பிறகு நம்மை ஆட்சி செய்ய வரட்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ரஜினிக்கும் பொருந்துமா?
சரி, இதே விஷயம் ரஜினிக்கும் பொருந்துமா? நிச்சயம் கிடையாது. காரணம்- என்னைப் பொறுத்தவரை - சூப்பர் ஸ்டார் என்றைக்கு திமுக-தமாகா கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு அவர்களுக்காக டெலிவிஷனில் பிரச்சாரம் செய்தாரோ அன்றைக்கே அவர் அரசியல் பிரவேசம் செய்துவிட்டார். அதற்க்கு பிறகு இத்துணை வருடங்கள் அவர் மறைமுகமாக பல வெற்றி, தோல்விகளை கண்டு அரசியலை தெள்ளத் தெளிவாக கற்றுக்கொண்டுவிட்டார். அதாவது துரோணரிடம் மறைமுகமாக வில்வித்தை கற்ற ஏகலைவன் போல. ஏகலைவன் அதற்காக தனது கட்டைவிரலை காணிக்கையாக கொடுத்தது போல ரஜினி இந்த கற்றலுக்காக காலத்திடம் தமது செல்வாக்கை சில முறை விலை கொடுக்கவேண்டியிருந்தது. (1998 மற்றும் 2004 தேர்தல் முடிவுகள் ஞாபகமிருக்கிறதா?).
சிரஞ்சீவி ஏன் தோற்றார்… எப்படி தோற்றார்?
சிரஞ்சீவி தோற்றதற்கான காரணங்களை பல ஊடகங்கள் அலசியிருப்பினும் உண்மையில் சிறப்பாக அலசியுள்ள Rediff.com மற்றும் Deccan Herald ஆகியவற்றின் கட்டுரைகளின் வெப் முகவரியை அளித்திருக்கிறேன். ஒரு முறை படியுங்கள். ப்ளீஸ்.
Trouble began at home for Chiru - Rediff.comhttp://election.rediff.com/slide-show/2009/may/22/slide-show-1-why-did-chiranjeevi-fail-in-polls.htm
What went wrong for Chiranjeevi?http://world.rediff.com/election/report/2009/may/17/loksabhapoll-what-went-wrong-for-chiranjeevi.htm
Why Chiru charisma failed to strike chord with voters?http://www.deccanherald.com/content/3438/chiru-charisma-failed-strike-chord.html
விஜயகாந்த்?
தமிழகம் மற்றும் புதுவை மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,38,83,049 வாக்குகள் பதிவாயின. மொத்தம் பதிவான வாக்குகளில் தேமுதிக 30,72,881 வாக்குளைப் பெற்றுள்ளது. இது கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி பெற்ற 8.33 % சதவீதத்தை விட சுமார் 2 % அதிகமாகும்.
தேமுதிகவுக்கு இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் டெப்பாசிட் பறிபோய் மூன்றாவது இடமே கிடைத்தது…. ஏன் சில தொகுதிகளில் நான்காவது இடம் தான். பிரஜா ராஜ்ஜியமும் தேமுதிகவும் ஆளுங்கட்சிக்கெதிரான ஒட்டுக்களை பிரித்து அவர்கள் வெற்றிபெற உதவியாயிருக்கின்றனர் என்ற ஒரு ஒற்றுமையை தவிர்த்து - சிரஞ்சீவியையும் விஜயகாந்த்தையும் இவ்விஷயத்தில் ஒப்பிட முடியாது என்பது அடிப்படை உண்மை.
காரணம் விஜயகாந்த் சிரஞ்சீவிபோல “டாப் ஸ்டார்” அந்தஸ்து நடிகர் அல்ல. இதனால் சினிமாவில் பெரிதாக சாதிக்கமுடியாத விஜயகாந்த் அரசியல் அரங்கில் பெற்றுள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் தானாகவே முக்கியத்துவம் பெறுகிறது. இரு கழகங்கள் மேல் மக்களுக்கு உள்ள வெறுப்பும் சலிப்பும் விஜயகாந்த்துக்கு வாக்குகளாக மாறுகிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடியது. ஆனால் மக்களை மேலும் கவரும் கலையை விஜயகாந்த் சரிவர கற்கவில்லை என்று தான் தெரிகிறது. இல்லையெனில் இந்த தேர்தலில் இன்னும் அவர் கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பார். நாம் அறிந்தவரையில் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, முதல் முறை ஓட்டளித்த பல இளம் வாக்காளர்களின் சாய்ஸ் தேமுதிகவாக இருந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கீழ் காணும் Rediff.com கட்டுரையை காண்க…
How Captain was able to pull votes?http://world.rediff.com/election/report/2009/may/08/voter-voice-waiting-for-captain-to-rule-tamil-nadu.htm
அதேசமயம் தனித்து ஆட்சியை பிடிக்குமளவிற்கு விஜயகாந்திற்கு CAPACITY கிடையாது என்பதும் தெரிந்ததே. வரும் சட்டமன்ற தேர்தலில் இவர் வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் அடுத்த நிலைக்கு முன்னேற முடியும். ஆனால் இவருடன் கூட்டணி வைக்க முன்வருபவர்கள் இவரை ‘முதலைமச்சர்’ வேட்பாளராக ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அப்படி அவர்கள் இவரை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் 2011 முதலமைச்சாரகவே தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் கேப்டன் அதை ஏற்றுக்கொள்வாரா? அல்லது யதார்த்தை புரிந்துகொள்ளும் பக்குவம் தான் அவருக்கு இருக்கிறதா? விஜயகாந்த் இப்படி தொடர்ந்து ஓட்டுக்களை மட்டுமே பிரித்து கொண்டிருப்பதால் அடுத்த தேர்தலில் இவரை ஒரேடியாக மக்கள் நிராகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மாற்றாக இவரை நினைத்து மக்கள் இவருக்கு அளிக்கும் வாக்குகள் இப்படி தொடர்ந்து வீணானால் அதே மக்கள் இவரை புறக்கணிக்கவும் தயங்கமாட்டார்கள்.
முக்கிய கட்டத்திற்கு வருவோம்…
மேற்படி தேர்தல் முடிவுகள் சூப்பர் ஸ்டாரிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
கடந்த பல ஆண்டுகளாக அரசியல் அரங்கை கூர்ந்து கவனித்து, அரசியலை அக்கு வேறு ஆணிவேராக படித்து வரும் சூப்பர் ஸ்டார் இந்த தேர்தல் முடிவுகளினால் மேலும் பக்குவமாகியிருப்பார் என்பது தான் உண்மை.
ஒருவர் தமது அனுபவங்களிலிருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லையே…. அடுத்தவர்கள் அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொள்ளலாமே… புத்திசாலிகள் அப்படித்தானே செய்வார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் ரஜினி அரசியல் பிரவேசம் செய்ய நேர்ந்தால் நிச்சயம் விஜயகாந்த், சிரஞ்சீவி ஆகியோர் செய்த தவறுகளை நிச்சயம் தவிர்ப்பார் என்று நம்பலாம்.
மற்றவற்றிர்க்கு அந்த காலம் தான் பதில் கூறவேண்டும்.

ரஜினியுடன் முதல்முறை இணையும் கலாபவன் மணி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்- தி ரோபோ படத்தில் நடிக்கிறார் நடிகர் கலாபவன் மணி.ரஜினி படத்தில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.வில்லன் நடிப்பில் தனி முத்திரை பதித்தவரான கலாபவன் மணி, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை... நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து கலாபவன் மணி கூறியதாவது: நமக்கு மொழி பேதம் கிடையாது. தென் மாநில மொழிப் படங்கள் அனைத்திலும் நடிக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. மலையாளத்தில் மீண்டும் கதாநாயகனாகிவிட்டேன்.தெலுங்கில் 6 படங்கள் பண்ணுகிறேன். விரைவில் கன்னடம் படமும் நடிக்கப் போகிறேன்.தமிழ்ப் படங்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். காரணம் எனக்கு பெரிய அங்கீகாரம், அதைவிட பெரிய அளவு சம்பளம் கொடுத்து கவுரவித்தது தமிழ்ப்பட உலகம்தான்.இப்போதும் சரித்திரம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன்.இதுவரை ரஜினி சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் அவருடைய எந்திரன் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் எனக்கு நகைச்சுவை கலந்த குணசித்ர கதாபாத்திரம். இந்த வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.முதல் முறை ரஜினி சார் படத்தில் நடிப்பது உண்மையிலே மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது என்றார் மணி.

ஐஸுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா!

கிட்டத்தட்ட முழு நேர டப்பிங் கலைஞராகவே மாறிவிடுவார் போலிருக்கிறது ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா.செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு குரல் கொடுத்த ஐஸ்வர்யா தனுஷ், இப்போது எந்திரன் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் குரல் கொடுக்கிறார். அவரது குரல் ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் அவரே பேசட்டும் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளாராம். ஐஸ்வர்யா தனுஷுடன் சிறிது நேரம் பேசிய பிறகு, தனக்கு அவரே இனி வரும் தமிழ்ப் படங்களிலும் குரல் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் ஐஸ்வர்யா ராய். அதன்படி அவர் நடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு மெகா படமான மணிரத்னத்தின் ராவண் படத்திலும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் தருகிறார் ஐஸ்வர்யா தனுஷ். ஆனால் டப்பிங் குரல் கொடுப்பதை முழு நேரமாகத் தொடர முடியாது என்றும், ஐஸ்வர்யா ராய் விரும்பிக் கேட்டதாலேயே இந்த இரு படங்களுக்கும் குரல் தருவதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.அடுத்து படம் இயக்கும் முயற்சியிலும் உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

4ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினி!

ரஜினி குறித்து சிபிஎஸ்இ 4ம் வகுப்பு பொது அறிவுப் புத்தகத்தில் ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது.'பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர்' என்று கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ரஜினி குறித்த பாடம் இடம் பெற்றிருந்தது. டிக்னிட்டி ஆப் வொர்க் என்ற தலைப்பில் அந்தப் பாடம் அமைந்திருந்தது.இப்போது இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் என்று 4ம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் ஒரு கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டுள்ளது.மேலும் பல்வகை துணுக்குகள் என்ற தலைப்பில் 18வது பாடத்தில் ரஜினிகாந்தின் படத்தைப் போட்டு.. இவர் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது.படத்தின் அடிக்குறிப்பில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட நடிகர் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

DISCLAIMER : THE AUTHOR'S MESSAGE

Humor is the ONLY purpose of this web log. There is no real life reference to the legendary actor that Rajinikanth sir is. It is only his on screen entertainment that is being 'enjoyed'. No abuse of anyform will be permitted by the authors and the owners of this blog.
http://rajinikanthjokepark.blogspot.com/
rajinikanth and the bullet saga
all credit to mousin...

Kollywood’s ‘BAD’ imports

Tamil cinema is a good importer! Of what, you might ask. Not of technology or technicians, but of artistes, and that too of two categories. The first is obvious, heroines. Tamil cinema undoubtedly has more heroines from the North and Kerala than from Tamil Nadu. But heroines are not the only artistes exported from other states. There are also the bad men of Tamil cinema, the villains. The habit of bringing in villains from other states caught on only recently. Till then, villains were mostly from within the state Itself. What prompted the importing trend in the past few years? We will examine that at the end. First, let us take a look at some of the bad men who have come from other parts of our country and made an impression in Kollywood. The order of appearance in this list is by no means a measure of their villainy on screen!
One of the leading villains in Tamil cinema at present, he
made his high impact debut with Dhill. You would have guessed the name by now, Ashish Vidhyarthi. This man has created a stamp for himself in the industry, playing a number of negative roles in both Tamil and Telugu. However, he has not allowed himself to get stereotyped. He has also played some very enjoyable character roles including that in Ghilli and his attempt at comedy in Malaikottai.
If anyone fits the bill of a smiling assassin, it has to be Kota Sreenivasa Rao. Sometimes he is better known up north as Selvar Mani (after the role he played in Sarkar) or down south as Perumal Picha after the role he played in Saamy. Among the numerous roles that he has played, the one that has created the maximum impact is the astrologer of Dhanam. The scheming and cunning man behind the mask of a pious astrologer was brought out to near perfection. This actor too has proved his versatility with other kinds of roles, the recent one being the character he played in Kaartic Anithaa.
Then there are imports from Kerala. Rajan.P. Dev; this senior artiste can handle just about anything and he has proved it in Tamil cinema too. His villain roles will make you fret and fume. How can one overlook the menacing Lal when talking about villains! His Sandakkozhi act is still fresh in our minds. His height and heavy voice make him one of the easiest to cast as a villain. But, if you watch his performance as ‘Bigilu’ in Oram Po, you are sure to understand the versatility that he possesses.
Sayaji Shinde: When he started as Subramania Bharathi in the film Bharathi, no one thought that he would eventually do negative roles. His performances in Dhool and a few other films have cemented his spot as one of the lead villains in Kollywood. But, he keeps doing mellow roles like the one in Santhosh Subramaniam.
Now, to challenge them all, here comes a fresh import. Danny Denzongpa. Many down south might not be familiar with this name. You will be, as soon as Endhiran releases. This reputed actor from Bollywood will be seen pitching against Superstar in Sankar’s big budget extravaganza. Let’s see if he too can make a mark.
As mentioned earlier, let us give a possible explanation for this obsession with imported villains. Can’t Tamil cinema produce good villains on its own? Well, proximity breeds contempt, it can also sometimes breed a lot of familiarity which is not good when a character has to induce anger and/or fear in the audience. That is why may be actors from other industries are used to make that big impact. That is not to say that actors like Daniel Balaji don’t give the same kind of results.

Murugadoss’s dream with Rajnikanth

A R Murugadoss will be directing Shahrukh Khan in a Hindi film which is yet to be titled. Mostly this film could be a remake of Tamil film Ramana. After completing Stalin, a Telugu film which had Chiranjeevi in the lead Murugadoss met Rajnikanth and narrated him a story. Rajnikanth was impressed with the story. So there was news that Rajni will act in Murugadoss film.
When asked about this Murugadoss said, “It is true that I had narrated the story to Rajnikanth. But now he is busy with Endhiran and I am also busy with Shahrukh film. I may get the opportunity to work with Rajni after these projects are completed. My ambition is to direct Rajnikanth and Kamal Haasan.”

‌பிரமா‌ண்ட செ‌ட்டி‌ல் எந்திரன் சண்டை

பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன் படங்களைத் தவிர மற்ற படங்களான ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என அத்தனைப் படங்களும் பல கோடிகளை செலவழித்து எடுக்கப்பட்டவை. தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் எந்திரன், ஷங்கரின் லட்சியப் படம் என்பதால் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பதாக இருந்து, சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சன் பிக்சர்ஸுக்கும் ரஜினியை வைத்து படம் தயாரிப்பது கனவாக இருந்ததால் செலவுக்கு குறைவில்லை. வேகமாக வளர்ந்து வரும் எந்திரன், வில்லன் ரஜினியோடு விஞ்ஞானி ரஜினி மோதும் காட்சிக்காக பல லட்சம் செலவு செய்து மாயாஜாலில் போடப்பட்ட செட்டில் இரண்டு ரஜினியும் மோதும் சண்டைக் காட்சியைப் படம்பிடித்து வருகிறார்கள். இப்படத்தின் இன்னொரு முக்கிய வில்லனாக நடிக்கும் டேனி டென்ஸோங்பாவும் இந்த காட்சியில் கலந்துகொண்டு நடித்தார். ரஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் இந்த மூன்று பிரமாண்டங்களும் இணைந்தால் வசூலுக்கு பஞ்சமிருக்காது.

Aishwarya Rai Bachchan Endhiran Glam Tribal Look Revealed!


Endhiran the Robot movie is talk of the tinsel town these days as the movie is pacing up well. For getting Aishwarya in altogether a rich glam look the Enthiran make up designers is working over Ash to get an expensive exposure. Already the delay for “Sultan the Warrior” is mainly because of the Magnum opus movie “Endhiran the Robot” in which Super Star Rajinikanth is giving much importance for Director Shankar than to his own daughter. Anyway Superstar is going to rule Indian Cinema with these big banners to hit screen soon. For Endhiran Aishwarya Rai Bachchan is going to appear in more than 57 costumes and different look for her in Endhiran the Robot.

Mother of makeovers for ‘Endhiran’


Shankar’s multi crore project ‘Endhiran’s filming is going on at a feverish pitch. Among other things the film boasts superstar Rajinikanth and ex-miss World Aishwarya Rai in lead roles. The lead lady has signed this film for a whooping six crore deal!
‘Endhiran’ is a sci-fi thriller. This film sees Aishwarya Rai donning nearly 57 different makeovers! The beauty has been filmed in an exclusive Mexican tribe’s makeover which is sure to have a jaw-dropping effect on the youth.
Aish will be seen in the Mexican makeover for a song sequence.
Oja Rajini is responsible for the different make over worn by Aish. Much of the filming has been under wraps, but thanks to the enthusiastic technicians who leak out some stories unknowingly. Manish Malhotra’s costumes have given a refreshing look and feel to the film; he is the man behind the costumes for the lead pair throughout the film.
The film which has expectations running high has music by Oscar winner AR Rahman.

ஆடியோ வடிவில் ரஜினி வாழ்க்கை வரலாறு!


ரஜினியின் வாழ்க்கை வரலாறு இப்போது ஆடியோ வடிவில் வெளிவருகிறது. லஹரி நிறுவனம் இந்த ஆடியோவை வெளியிடுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் 'ரஜனி' (Rajani - Vikshiptha, Vishishta, Vichitra) எனத் தலைப்பில் மகேஷ் தேவஷெட்டி என்ற பத்திரிகையாளர் ஒரு புத்தகம் எழுதினார். கன்னட மொழியில் அமைந்த இந்த புத்தகமே இப்போது ஆடியோவாக வருகிறது. இதுகுறித்து லஹரி நிறுவன நிர்வாகி துளசி ராம் வேலு கூறுகையில், "ரஜினி சார் பற்றி மகேஷ் எழுதிய புத்தகத்தை அப்படியே ஆடியோவாக மாற்றுவது ஒரு சவாலான காரியமாகத்தான் இருந்தது. காரணம் இந்த கான்செப்ட் இதற்கு முன் நாங்கள் செய்திராத புதிய முயற்சி. ஆனால் மிகப் பெரிய திட்டமிடலோடு இந்த ஆடியோ புத்தகப் பணியை முடித்துவிட்டோம். இதுவரை வேறு எந்த ஆடியோ நிறுவனமும் இந்தியாவில் இதைச் செய்ததில்லை. இதற்கு முன், தனக்குப் பிடித்த ஒரு தலைவர் அல்லது நடிகர் குறித்த தமது கருத்துக்களை ஆடியோவில் பதிவு செய்து சிலர் வெளியிட்டுள்ளனர். ஆனால் அதற்கும் இப்போது நாங்கள் செய்துள்ள முயற்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. புத்தகத்தின் சுவாரஸ்யம் ஆடியோவில் கேட்கும்போதும் இருக்க வேண்டும். புத்தகத்தின் எந்தப் பகுதியும் விடுபடாத அளவுக்கும் தயாரிக்க வேண்டும். இன்னொன்று ரஜினி என்ற பன்முக மனிதருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அனைவருக்கும் தெரியும். சின்ன தவறு நேர்ந்தாலும் அதன் விளைவு எப்படியிருக்கும் எனப் புரிந்து இந்த முயற்சியில் ஈடுபட்டோம். ரஜினி பற்றிய புத்தகத்தைப் படிக்காதவர்களுக்கு இந்த சிடி மற்றும் காஸெட் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். ரஜினி வரலாற்றை ஆடியோ புத்தகமாக வெளியிடுவதில் எங்களுக்குக் கிடைத்த வெற்றி, இதைப் போன்ற மேலும் பல முயற்சிகளில் இறங்கத் தூண்டுதலாக உள்ளது..." என்றார்.

Hollywood biggies for Rajnikanth's Endhiran


A clutch of Hollywood biggies are coming on board for Tamil superstar Rajnikanth's upcoming film Endhiran.
Budgeted at $24 million, the Tamil film that is being shot in Chennai is touted as one of the most expensive movies ever shot on the Asian subcontinent - and its credits include some of Hollywood's major names, reports contactmusic.com.
To name a few, the Stan Winston special effects house is creating a robot that will be a replica of the Indian film star.
Other Hollywood big names to join the project are costume designer Mary E. Vogt, who created the costumes in Batman Returns and Men In Black, fight-scene designer Woo-Ping Yuen, whose credits include Kill Bill and The Matrix, and an unnamed Hollywood make-up artist assigned to co-star lead actress Aishwary Rai.
The production is being backed by the Sun TV network.
The movie is currently in its fourth month of production and will take another year to complete.

Aishwarya Rajinikanth to dub for Aish

As we all know Aish is shooting for two Tamil films back to back. One is the Shankar directed magnum opus ‘Endhiran’ that has Superstar Rajinikanth and Aishwarya Rai pairing up for the first time. This project has been in the news for the heroine bagging a whooping six crore rupees for signing up the project.
The other film is by ace director Mani Ratnam. This film is a multi lingual project and is being simultaneously shot in Hindi with Aish and hubby doing the lead roles. The Tamil remake of the film sees Chiyan Vikram and Aish in the lead roles. This flick’s title seems to have been inspired from the epic Ramayana and has hence been titled ‘Raavan’.
The story deals with the hero kidnapping another man’s wife and the fate that befalls.
The music for both the films will be by the twin Oscar award winner A.R. Rahman. Another interesting factor is that Rajinikanth’s daughter Aishwarya Rajinikanth will be lending her voice for Aish’s character in Shankar’s ‘Endhiran’ as well as Mani Rathnam’s ‘Raavan’. Reports also indicate that beauty queen Aish is also satisfied with the directors’ choice!

Rajnikanth Vote


Kollywood & Bollywood star Rajnikanth prepares to cast his vote at a polling station in Chennai, India, Wednesday, May 13, 2009. Millions of Indian voters headed to the polls Wednesday to pick a new parliament in the final phase of the country's month long national election.

Sultan The Warrior latest photo gallery wallpapers






Soundarya Rajinikanth clarifies about Warner Bros’ association

Quashing rumours about a fallout between Warner Bros and Ocher Studios, the groups have released an official statement condemning such reports. The official release, that has been circulated to the media houses, state that Warner Bros and Ocher Studios will continue to work together.
“Together, our companies have a number of southern Indian language projects in various stages, from early negotiations to active development. We will announce these projects at the appropriate time. But, any rumor that suggests otherwise is simply not true.” said Richard Fox Executive Vice – President International, Warner Bros.
Soundarya Rajinikanth, managing dirctor, Ocher Studios, says “Ocher Studios Pvt. Ltd and Warner Bros have already established a very successful relationship and the team will very soon announce their forth coming projects. The rumors suggesting otherwise which are doing the rounds are part of someone’s fictitious imagination.”

Rajini Sultan the Warrior Six Pack Abs First Look Posters!


Superstar Rajinikanth “Sultan the Warrior” movie is nearing its completion only some part of the movie is remaining yet. You never see new look of Superstar Rajini in six pack abs but an imagination goes apart as Rajini six pack abs is designed in animation by Hollywood’s best technicians done by Image Matrix which the company done tremendous work on Brad Pitt in “The Curious Case of Benjamin Button”. For designing this exclusive first look animation the following process had been made by the designer of “Sultan the Warrior” after the jump First, a body scan was doneModel rebuildingTexturingMesh rebuildingRigging (attaching a skeleton tothe body).Anatomy finalization

Earlier Soundarya Rajinikanth in a press meet said that the movie is almost ready and it is decided to release soon. For Superstar Rajinikanth fans they will be eager to watch the star on big screen and new six pack abs look.

அமரர் கே பாலாஜிக்கு ரஜினி அஞ்சலி!

பழம்பெரும் நடிகரும், பட அதிபருமான கே.பாலாஜி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. அவருடைய உடல் தகனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
'படித்தால் மட்டும் போதுமா', `விடிவெள்ளி', `பலே பாண்டியா' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், கே.பாலாஜி. `ராஜா', `எங்கிருந்தோ வந்தாள்', `நீதி', `திராவிடன்', `பில்லா' உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களை சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார்.
கே.பாலாஜிக்கு 10 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அவருக்கு, 'ஆபரேஷன்' மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த 10 வருடங்களாக அவருக்கு 'டயாலிசிஸ்' செய்யப்பட்டு வந்தது.
மரணம்
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கே.பாலாஜியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு மூச்சுத் திணறலும், ரத்தக் கசிவும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவரை, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள்.
நேற்று மாலை 5 மணிக்கு, சிகிச்சை பலன் அளிக்காமல் கே.பாலாஜி மரணம் அடைந்தார். அவருடைய உடல், ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெயலலிதா அஞ்சலி
ஏராளமான நடிகர்-நடிகைகளும், திரையுலக பிரமுகர்களும் கே.பாலாஜியின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவையில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கே.பாலாஜியின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இன்று உடல் தகனம்
இறுதி சடங்குகளுக்குப்பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கே.பாலாஜியின் உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக பெசன்ட்நகர் மின்சார மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மாலை 3 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
கே.பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள்.
சுசித்ராவின் கணவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணியமிக்க பட அதிபர்!
பாலாஜியின் பூர்வீகம் கேரளா. ஆரம்ப காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 'அவ்வையார்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, 'மனமுள்ள மறுதாரம்,' 'சகோதரி,' 'பலே பாண்டியா,' 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
'அண்ணாவின் ஆசை' என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அந்த படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். அதன்பிறகு சிவாஜிகணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான்.
ரஜினியுடன்...
ரஜினியை வசூலில் நிரந்தர சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தி பில்லா படத்தின் தயாரிப்பாளர் கே பாலாஜி. அந்தப் படத்தில் டிஎஸ்பி வேடத்திலும் நடித்திருப்பார்.
தொடர்ந்து ரஜினியை வைத்து தீ, விடுதலை என படங்கள் தந்தார். ரஜினியும் பாலாஜியும் ஒருவர் மீது ஒருவர் பெரும் மதிப்பு வைத்திருந்தனர்.
ரஜினியைப் போல தயாரிப்பாளர்களை மதிக்கும் ஹீரோக்கள் இப்போது இல்லாமல் போனதாலேயே புதிய படங்கள் எடுப்பதை நிறுத்திக் கொண்டதாக பில்லா படத்தின் ரீமேக் துவக்க விழாவில் பாலாஜி கூறியிருந்தார்.

இன்று காலை பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினி.
“எனது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட மாதிரி பீல் பண்றேன்… அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. எனது குடும்ப நண்பரை இழந்தது வருத்தமளிக்கிறது”, என்றார் ரஜினி.

ஒரு பாடல்... 100 ஸ்டைல்... அதான் தலைவர் ஸ்பெஷல்!


எந்திரன் படத்தில் ஒரே காட்சியில் 100 விதவிதமான ஸ்டைல்களில் ரஜினி ஆடிப் பாடுகிறார்.
ஹைதராபாத், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு அமைத்து ரஜினி, ஐஸ்வர்யாராய் ஆடிப்பாடும் பாடல் காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார். இந்த பாடல் காட்சி ரஜினி படங்களில் இதுவரை வராத அளவு வித்தியாசமாக படமாக்கப்படுகிறது. அதாவது ஒரே பாடலில் ரஜினியின் 100 விதமான ஸ்டைல்கள் இடம் பெறுகின்றன. 22 நாட்கள் இந்த பாடல் காட்சியைப் படமாக்கினர்.
ரஜினி ஒவ்வொரு ஸ்டைலிலும் வெவ்வேறு ஆடைகள் அணிந்தார். பிரபுதேவா நடனம் அமைத்து கொடுத்தார். 100 விதமான ஸ்டைல்களை இப்பாட்டில் ரஜினி வெளிப்படுத்தியது பிரமாதமாக இருந்தது என்று படக்குழுவினர் பாராட்டினர்.
ஐஸ்வர்யாராயும் விதவிதமான காஸ்ட்யூம்களில் ரஜினியுடன் இப்பாடலுக்கு ஆடினார். அப்போது ரஜினியின் 100 ஸ்டைல்களை பார்த்து அவரும் வியந்தார். சிவாஜி படத்தில் முதல்பாதி சிவாஜி கேரக்டரில் நடித்தார். கிளைமாக்சில் எம்.ஜி.ஆர். என்ற பெயரில் அறிமுகமாகி அதிரடி செய்வார். ரசிகர்களை அந்த கெட்டப் மிகவும் கவர்ந்தது. அதே போன்று இப்பாடலில் ரஜினி வெளிப்படுத்திய 100 ஸ்டைல்களும் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
Related Posts Plugin for WordPress, Blogger...