“கொஞ்சம் பொறுங்கள்!!” - ரசிகர்களை சமாதானப்படுத்தும் தளபதி சத்தி


சூப்பர் ஸ்டார் வந்து மூன்று நாட்களாகிவிட்டது. தளபதி சத்தியுடன் நேற்று சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதி செய்யமுடியவில்லை.
ஆலோசனையில் ரஜினி?
தற்போது, தனது நலம் விரும்பிகளுடன் சூப்பர் ஸ்டார் ஆலோசனை நடத்திகொண்டிருப்பதாகவும், விரைவில் ரசிகர் சந்திப்பு தேதி பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. (சூப்பர் ஸ்டாரின் ஆலோசகர் வட்டத்தில் சௌந்தர்யா ரஜினியும் தற்போது சேர்ந்துள்ளதாகவும், தந்தைக்கு சில முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளதாகவும் வேறு சில தகவல்கள் கூறுகின்றன.)

நோ ரெஸ்பான்ஸ்! விரக்தியில் பத்திரிகையாளர்கள்!!!
இந்த நொடிவரை, சூப்பர் ஸ்டார் தரப்பிலிருந்து ஒரு பாசிடிவ்வான தகவல் கூட இல்லை. ஏன், அறிகுறியே கூட இல்லை எனலாம்.
மண்டபத்துக்கு போன் செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கோ அல்லது செய்தி சேகரிக்க அங்கு செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கோ பதில் சொல்ல கூட ஆள் இல்லை. தமிழகத்தின் மிகப்பெரிய நடிகர். சூப்பர் ஸ்டார். அவரது தற்போதைய மூவ்வை தெரிந்துகொள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட பலர் காத்திருக்கும் இன்றைய தேதியில் நிலவும் சூழ்நிலை இது.
தலைமை மன்றத்திடமோ அல்லது ரஜினிக்கு நெருக்கமானவர்களிடமோ செய்தி சேகரிக்க திண்டாடும் பத்திரிகையாளர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விசாரித்துவருகின்றனர். யாராலும் எதையும் உறுதியாக கூறமுடியவில்லை. (விரக்தியில் உள்ள ரசிகர்கள் எதையாவது கூறப்போக, செய்தி கிடைக்காத ஆதங்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அதை திரித்து எழுதும் அபாயம் இருக்கிறது.) தேவையற்ற எதிர்மறை செய்திகள் வருவது இப்படித்தான். இதனால் தான், நான் முன்பே கூறினேன், சூப்பர் ஸ்டாருக்கு ஒரு செய்தி தொடர்பாளர் மற்றும் பி.ஆர்.ஒ கண்டிப்பாக தேவை என்று.
சரி, இப்படிப்பட்ட பதிவுகள் மூலமாகவாவது செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்று சேராதா என்று தான் இந்த பதிவையே நான் அளிக்கிறேன்.

பொங்கி எழுந்த ரஜினி ரசிகர்கள்

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். இடம்- கோபாலபுரம்! கோஷம்- 'தலைவா... அரசியலுக்கு வா!!'
கோபாலபுரத்தில் அமைந்திருக்கும் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணாவின் வீட்டிற்கு முன்பாக குவிந்த ரஜினி ரசிகர்கள் 'தலைவா, அரசியலுக்கு வா' என்று கோஷம் எழுப்ப, அதிர்ந்து போன சத்யநாராயணா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். அங்கே திரளான ரஜினி ரசிகர்கள். 'தலைவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? நாங்க நேரடியாகவே கேட்டு விடுகிறோம். அவரை நாங்க சந்திக்க ஒரு வழி ஏற்படுத்திக் கொடுங்க...' இதுதான் அங்கே திரண்டிருந்த ரசிகர்களின் ஒரே கோரிக்கை. அவர்களை சமாதானப்படுத்திய சத்யநாராயணா, அக்டோபர் முதல் வாரத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டாராம்.
இந்த முறை ஏதாவது உறுதியான பதிலை சொல்லாமல் நகர முடியாது என்ற நிலை ரஜினிக்கு. என்ன செய்யப் போகிறார் சூப்பர் ஸ்டார்? தமிழகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் காற்று வாக்கில் வந்து கவனத்தை கலைத்துவிட்டு போகிறது. அது..? ரிஷிகேஷ் பகுதியில் பெரிய இடம் வாங்கிப் போட்டிருக்கிறாராம் ரஜினி. அங்கு பெரிய ஆசிரமம் கட்டுவது அவரது எதிர்கால திட்டம் என்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக் நினைவுக்கு வருகிறது. 80 களில் நடந்த சம்பவம் இது. சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஒரு ஆன்மீக இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று ஏற்பட்டுவிட்டது ரஜினிக்கு. நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அந்த இயக்கத்திலேயே சேர்ந்துவிட முடிவு செய்துவிட்டார். என்ன நடந்தது தெரியுமா? ஏராளமான ரசிகர்கள் திரண்டு போய் அந்த ஆன்மீக இயக்கம் இயங்கி வரும் இடத்தில் கற்களை வீசினார்கள். சிதறி ஓடியது சாமியார் கும்பல்! மறுநாள் ஆசிரமத்திற்கு வந்த ரஜினியை கையெடுத்து கும்பிட்டு சினிமாவுக்கே அனுப்பி வைத்தது அந்த ஆன்மீக அமைப்பு.
அந்தளவுக்கு வெறி கொண்ட ரசிகர்கள் இப்போது இல்லை. இருந்தாலும், ரிஷிகேஷ் வரைக்கும் போவார்களா என்பதுதான் பெரும் கேள்வி.

ஷங்கருக்கு மறுத்த ஐஸ்வர்யாராய்!


ஐஸ்வர்யா ராய்க்காக எந்திரன் ஷூட்டிங்கை வேக வேகமாக முடித்தாராம் இயக்குநர் ஷங்கர்.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் பெரு நாடுகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்தது ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் – தி ரோபோ ஷூட்டிங்.

கடந்த 27-ம் தேதி ரஜினி - ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டார் ஷங்கர். ஆனால் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கும் தனிக் காட்சிகள் சில படமாக்கப்பட வேண்டி இருந்ததாம்.

இதற்காக கூடுதலாக சில தினங்கள் அமெரிக்காவில் தங்கி படப்பிடிப்பை முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டாராம் ஐஸ்வர்யாவை இயக்குநர் ஷங்கர்.

ஆனால் அதற்கு மறுத்துவிட்ட ஐஸ், தனது கணவர் அபிஷேக் பச்சன் நடிக்கும் துரோணா திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருப்பதால் உடனே மும்பைக்கு திரும்ப வேண்டும் என உறுதியாகச் சொல்ல, வேறு வழியின்றி அவர் தொடர்பான காட்சிகளை இரண்டே நாளில் முடித்துவிட்டு, நேற்று மும்பைக்கு அனுப்பி வைத்து விட்டாராம் ஷங்கர்.

இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராய்க்கு 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. எந்திரனுக்கு 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

தன்னை பற்றிய அனைத்து செய்திகளையும் படித்த சூப்பர் ஸ்டார்…

பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே ‘எந்திரன்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நேற்று நள்ளிரவு சூப்பர் ஸ்டார் சென்னை திரும்பினார்.
வந்தவர் தன்னை பற்றி பத்திரிக்கைகளில் சமீபத்தில் வந்த செய்திகள் அனைத்தையும் படித்தார்.

ஜூவி, ரிப்போர்டர், நாளிதழ்கள், மற்றும் வெப் சைட்டுகள் - அனைத்திலும் வெளியான அவர் சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகள் எல்லாம் அவர் பார்வைக்கு வைக்கப்பட்டதாக தகவல். அனைத்தையும் பொறுமையாக படித்தவர் - எந்த ரிஆக்க்ஷனும் காட்டியதாக தகவல் இல்லை.
ரசிகர்களின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் குறித்தும் அவரது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. (மேற்கண்ட போஸ்டர் எங்கு ஒட்டப்பட்டுள்ளது என்று தெரிகிறதா?)
முதல் பணியாக நாளை ராகவேந்திர மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயனனுடன் ஆலோசனை நடத்துகிறார். ரசிகர்களிடம் நிலவி வரும் எதிர்ப்பார்ப்பு குறித்து சத்தி எடுத்து கூறுவார் என்று தெரிகிறது.
ரசிகர்கள் சந்திப்பு குறித்து அநேகமாக அதிகாரப்பூர்வமாகவே பத்திரிக்கைகளுக்கு செய்தி வழங்கப்படலாம்.
இதனிடையே சூப்பர் ஸ்டாரை உசுப்பேத்தும் வகையில் தலைநகரில் அப்பட்டமான சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவரது பொறுமை ரொம்பவே சோதிக்கப்படுகிறது (நம்முடையதும்தான்). இதுவரை மறைமுகமாக குழி தோண்டிக்கொண்டிருந்தவர்கள் நேரடியாகவே - மிகவும் தைரியத்துடன் - அதை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் செய்திகள் விரைவில்…

ரசிகர்கள் வாழ்வு ரஜினி கையில் - தினமலர்


மற்றுமொருமுறை ரஜினி விஷயத்தில் உள்ளது உள்ளபடி தினமலர் தெளிவான ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
கீழ் கண்ட இன்றைய தினமலர் செய்தி முற்றிலும் உண்மை.
மற்றவை அடுத்த பதிவில் - மேலும் சில விஷயங்கள் சேகரித்த பிறகு!!

மற்றவர்கள் வந்தது வீம்புக்காக! தலைவர் வருவது எங்கள் அன்புக்காக!!

கிட்டதட்ட ஒரு மாத கால ‘எந்திரன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தலைவர் இன்றிரவு சென்னை திரும்புகிறார். மிகவும் பரபரப்பான ஒரு சூழ்நிலையில் அவர் இது போல் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்புவது நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கிறது.

உளவுத்துறை போலீஸார் விழிப்புடன் காத்திருக்கின்றனர் !!

லெட்டர் பேட் கட்சி தலைவர்கள் கணக்குடன் காத்திருக்கின்றனர் !!

அரசியல் கட்சியினர் கிலியுடன் காத்திருக்கின்றனர் !!

புதிதாக வாழ்வு பெற்றவர்கள் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர் !!

பத்திரிக்கைகள் கல்லா கட்டும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் !!

அறிவுஜீவிகள் வழக்கம்போல் ஒன்றும் நடக்காது என்ற நப்பாசையுடன் காத்திருகின்றனர் !!

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருகின்றனர் !!

எதிரிகள் தோற்பதற்கு காத்திருக்கின்றனர் !!

பார்போம் யார் கனவு பலிக்கிறது என்று? !!!

சென்னை முழுதும் கலக்கலான போஸ்டர்கள்

இதற்கிடையே நேற்று மாலை மலரில் ரசிகர்கள் போஸ்டர் பற்றி வெளியான செய்தியை பார்த்து மேலும் சில பகுதி ரசிகர்கள் போஸ்டர்கள் எழுப்பியிருப்பதாக தகவல்.

சென்னை விமான நிலையம், சூப்பர் ஸ்டார் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி, சத்தியநாராயணன் வீடு அமைந்துள்ள கோபாலபுரம், ராகவேந்தரா மண்டபம் மற்றும் அயனாவரம் ஆகிய பகுதிகளில் கலக்கலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டர் வாசகங்களில் சாம்பிள்கள் சில:

வெளிநாடு சென்று திரும்பும் எந்திரனே வருக…வருக..
தமிழ்நாட்டிற்கு இன்பம் தருக..தருக…

ரசிகர்களுக்கு முதல் மரியாதை கொடுத்த இந்தியருக்கு நன்றி..நன்றி…நன்றி!!

மற்றவர்கள் வந்தது வீம்புக்காக! எங்கள் தலைவர் வருவது எங்கள் அன்புக்காக!!


(அட ஓவர் பில்டப்பா இருக்கேன்னுதானே நினைக்குறீங்க…எனக்கும் அந்த பயம் இருக்கு…ம்…ம்…ம்…என்ன செய்ய ?)

தமிழகம் முழுதும் ரசிகர்கள் ஆங்காங்கே, இது போல் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் என்று தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். சிலர், முன்னெச்சரிக்கையாக, ‘தலைவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு நமது கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ளலாம்’ என்று அமைதியாக இருப்பதாக தகவல்.

தமிழகம் முழுதும் வெளியான மாலை மலர் செய்தி

நேற்று நாம் கூறிய செய்தி, இன்னும் பல முக்கிய விபரங்களை சேர்த்து மாலை மலரில் வெளிவந்துள்ளது. தமிழகம் முழுக்க அனைத்து பதிப்புக்களிலும் இந்த செய்தி வெளியானது.

லயோலா சர்வே: என்ன கொடுமை சார் இது?


கடந்த பல ஆண்டுகளாக நான் லயோலா சர்வேயை கவனித்து வருகிறேன். நம்மை பற்றி பாசிடிவ்வாக போட்டிருந்தால் அதை “ஓ.. அப்படியா!!” என்ற எடுத்துக் கொண்டு போய்கொண்டே யிருக்கவேண்டும். தவறாக போட்டிருந்தால் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை, புறக்கணிப்பதே சிறந்தது.

அதென்ன நேர்மறையாக போட்டிருந்தால் எடுத்துக் கொள்ளவேண்டும். எதிர்மறையாக போட்டிருந்தால் புறக்கணிக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம்.
ஊரே அறிந்த நாணயமான ஒரு நல்ல நபரை பற்றி சர்வே எடுத்தால், அவரைப் பற்றி நல்லவிதமாக ரிசல்ட் வருவது இயல்பு. அதே, அவரை பற்றி வேறு விதமாக ரிசல்ட் வந்தால்? கோளாறு சர்வே எடுக்கப்பட்ட நபரிடம் இல்லை. எடுத்த நபரிடம் என்று தானே அர்த்தம்? அதுபோலத்தான் இதுவும்.
ஓகே. ரஜினி குறித்து சர்வே முடிவுகள் கூறியிருப்பது என்ன?
ரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்தவர்களில் வெறும் 4% மட்டுமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
கடந்த பத்தாண்டுகளாக மக்களிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. “அவர் கண்டிப்பாக வரவேண்டும்; வந்தால் நன்றாக இருக்கும்” என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக பதில் சொல்லி சொல்லி புளித்து போன மக்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்?
“வரட்டும்யா. அப்புறம் பார்க்கலாம்!!” என்பதாகத்தானே இருக்கும்.
இது யதார்த்தம் தானே?
“அரசியலில் ரஜினி - அதற்கான மக்கள் ஆதரவு” என்பது பத்து வருடங்களுக்கு முன்பு 40% என்று இருந்தது, காலங்கள் ஓட ஓட படிப்படியாக குறைந்து கடைசியில் 4% என்று வந்து நிற்கிறது. இந்த முறை சரிவு சற்று அதிகம். “வருத்தம்” சர்ச்சை அவரது செல்வாக்கை வெகுவாக பாதித்திருக்கிறது என்பதே உண்மை.
மேலும் அரசியலுக்கே வராத, அது குறித்து மௌனம் காக்கும் ஒரு நபரை பற்றி மக்களிடம் அரசியல் கேள்வி கேட்டதே மிகப்பெரிய தவறு. பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்ப்பார்ப்பில் இருந்து, ஏமாந்த மக்களிடம் எப்படி சாதகமான பதில் வரும்? (இடைப்பட்ட காலத்தில் மக்களின் எதிர்ப்பார்ப்பை பயன்படுத்தி வேறொரு நடிகர் களத்தில் புகுந்த கொடுமையை என்னவென்று சொல்ல?)
ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று திட்டவட்டமாக சொன்ன பின்னோ அல்லது வந்ததற்கு பின்னரோ இந்த சர்வேயை எடுப்பதே பொருத்தமானது.
இதனிடையே, இந்த சர்வேயில் ரஜினி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்து பெரும்பாலான பத்திரிக்கைகள் நாம் எதிர்ப்பார்த்ததை போல பெரிதாக ப்ரொஜெக்ட் செய்யவில்லை. விஜயகாந்தின் அதி தீவிர விசுவாசிகளான தினமலரும், மாலைச்சுடரும் தான் ரஜினி பின்னுக்கு தள்ளப்பட்டார் என்று ஹைலைட் செய்தன. ஸோ, பெரிதாக இது குறித்து நாம் கவலைப்படவேண்டியதில்லை.


சரி, இரண்டாவதாக தமிழக மக்களுக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் எம்.ஜி.யார், சிவாஜி, விஜய் ஆகியோருக்கு பிறகு ரஜினி இடம் பெற்றிருக்கிறார். இங்கு தான் இருக்கு விஷயமே.
எந்த ஒரு நடிகருக்கும் செல்வாக்கு என்பது ஒரு ஹிட் படம் கொடுத்தால் ஏறுமுகமாக இருக்கும். தோல்விப்படம் கொடுத்தால் இறங்குமுகமாக இருக்கும். இது தானே உண்மை? ஒப்புக்கொள்ளகூடியது?
எனவே “குசேலன்” சர்ச்சை மற்றும் அதன் திணிக்கப்பட்ட தோல்வியால் ரஜினி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார் என்று வைத்துகொள்வோம், தொடர்ந்து இரு தோல்விப்படங்கள் கொடுத்த விஜய் எப்படி மூன்றாம் இடத்திற்கு வந்தார்? (அவர் அங்கு படித்தார் என்பாதாலா அல்லது வேறொரு காரணத்தினாலா?)
பில்லா என்ற வெற்றிப்படம் கொடுத்த அஜீத் எங்கே? (விஜயை விட இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை)
தசாவதாரம் கண்ட சிறந்த நடிகரான கமல் எங்கே? இவர்களெல்லாம் தமிழ் நாட்டில் இல்லையா? அல்லது இருக்க கூடாதா? (திருடனுக்கு தேள் கொட்டியது போல் கமல் ரசிகர்கள் திருதிருவென விழிப்பதாக தகவல்.) நமக்காவது குசேலனால் சரிவு என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். சிவாஜி ரிலீஸ் சமயத்தில், எடுக்கப்பட்ட போன சர்வேயின் படி ரஜினியின் புகழ் கூடியிருந்தது. (இணைக்கப்பட்டுள்ள சென்ற சர்வே குறித்த அப்போது நான் எடுத்த மாலைச்சுடர் போஸ்டர் படத்தை காண்க. போஸ்டரில் தேதியை உற்று பார்க்கவும்.) ஆனால் கமல் ரசிகர்கள் கூற்றுப்படி தசாவதாரம் மாபெரும் வெற்றிப்படம் ஆயிற்றே. அந்த படத்தின் பெரும் வெற்றி கமலின் புகழை அட்லீஸ்ட் மூன்றாம் இடத்திற்கு கொண்டுவருமளவுக்கு கூடவா இல்லை? என்ன கொடுமை சார் இது?
ஸோ, இந்த முறை சர்வே முடிவுகள் திரிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. யாரை திருப்திபடுத்தவோ?
ரஜினியின் அரசியல் குறித்து அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புக்கள் நிலவும் சமயத்தில் இந்த சர்வே அவசர அவசரமாக எடுக்கப்பட்டு, எதிர் மறை முடிவுகள் மக்கள் மீது திணிக்கப்படுவது தெளிவாக புரிகிறது. ஸோ, இந்த முறை கை மாறியது எத்தனை கோடிகளோ? அல்லது வாக்குறுதிகளோ ?
(ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகளிடம் மட்டுமே நடக்கும் பேரம் இம்முறை சில நடிகர்களிடமும் நடந்திருக்கும் என்று அவர்களை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது தனிக்கதை.)
மேலும் அறிவியல் பூர்வமான முறைகளை அவர்கள் சர்வே எடுக்க கடைப்பிடிப்பதில்லை. ஆறு கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்து மக்களின் மன நிலையை சும்மா 2000 மக்களை வைத்து தீர்மானித்தால் எப்படி இருக்கும்?
தலைவர், இந்த சர்வே முடிவுகளை பல வகைகளில் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே என் போன்றவர்கள் விருப்பம். இல்லையெனில் இன்று ரஜினியை விஜய்க்கு கீழ் கொண்டு சென்றவர்கள் நாளை வையாபுரிக்கும் கீழ் கொண்டுசெல்லவும் தயங்கமாட்டார்கள்.
தலைவா, விழித்துகொள். புத்திசாலிகளுக்கு ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமமல்லவா?

முழு வீச்சில் தயாராகி வரும் ரசிகர்கள்


அக்டோபர் சந்திப்பு குறித்து சத்தியநாராயணா அனைத்து மாவட்ட ரசிகர்களுடனும் தொலைபேசியில் பேசிவருகிறார். ஒரு மாவட்டத்திற்கு ஐந்து ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என்று ஸ்ட்ரிக்டாக கூறி வருகிறார். ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர் ஐந்து பேர் போதாது, குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திற்கு 15 பேரையாவது அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுவருகின்றனர். சத்தி, “ஆகட்டும் பார்க்கலாம்!” என்று கூறி வருகிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் தற்போது ரசிகர்கள் சந்திப்பின்போது தலைவரிடம் என்ன பேசுவது, என்ன கோரிக்கைகள் வைப்பது என்று தங்களுக்குள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
பெரும்பாலான மன்றத்தினர், கோரிக்கைகளை வேண்டுகோள்களை பேப்பர்களில் நீட்டாக டைப் செய்து கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர்.
இதனிடையே, ரசிகர்களின் சந்திப்பு ஏற்பாடுகள் குறித்து நாளிதழ்களுக்கு அளிக்கப்பட்ட செய்தி பின்வருமாறு:
…………………………………………………………………………………………………………………
தலைவா வா! தலைமை ஏற்க வா!!
வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதாக கூறியிருப்பது தெரிந்ததே. இதையடுத்து ரஜினியை வரவேற்க ரசிகர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சென்னை மாற்று தமிழகம் முழுதும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்படுகிறது. சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சென்னை நகர் முழுக்க, “தலைவா தலைமை ஏற்க வா” என்று ரஜினிக்கு அழைப்பு விடுத்து பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருவான்மியூர் பகுதி ரசிகர்கள் ரஜினி பாஸ்கர் தலைமையில், திருவான்மியூர் பஸ் டெப்போ அருகில் அக்டோபர் சந்திப்பை முன்னிட்டு பேனர் வைத்திருக்கின்றனர்.
நாளை நமதே, தமிழ் நாடும் நமதே என்ற வாசகத்துடன் காணப்படும் இந்த பேனரில் ‘அக்டோபர் அரசியல் புரட்சி வெல்க’ என்று எழுதப்பட்டுள்ளது. பேனரில் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் படங்களோடு மஹாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், அண்ணா, காயிதே மில்லத், பசும்பொன் தேவர் ஆகியோர் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன..
தமிழகம் முழுதும் இதேபோன்று பேனர்கள் வைக்க ரசிகர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
இதையொட்டி சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “தலைவர் முதன் முறையாக அனைத்து மாவட்ட ரசிகர்களை சந்திப்பதாக கூறியிருக்கிறார். எனவே எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பேனர்கள் வைக்க மற்றும் போஸ்டர்கள் ஒட்ட முடிவு செய்திருக்கிறோம். தலைவர் பொதுவாக இத்தைகைய ஆடம்பரங்களை விரும்புவது கிடையாது. இருப்பினும் நாங்கள் அரசியல் கட்சி அல்ல. ரசிகர் மன்றம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அவ்வளவே. சந்திப்பின்போது தலைவரிடமிருந்து நல்ல தகவல் வரும் பட்சத்தில் சமூக நலப்பணிகளோடு அதை கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.”

அக்டோபர் சந்திப்பு - ரசிகர்கள் “எதிர்பார்ப்பு” என்ன?


அக்டோபர் சந்திப்பு உண்மையென்றாலும், அரசியலுக்கு வருவார், கொடி ரெடி, இயக்கம் பெயர் ரெடி, டி.வி.கூட ரெடி என்று பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை எல்லாம் ரசிகர்கள் முழுதுமாக நம்பவில்லை.

இறுதி வாய்ப்பு
அதே சமயம் இது தங்களுக்கு இறுதி வாய்ப்பு என்று அவர்கள் உணர்ந்தேயிருக்கின்றனர். தலைவரை சந்தித்து மனம்விட்டு பேச இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகமே என்பதால், இந்த சந்திப்பிலேயே அவரிடமிருந்து பாஸிடிவ்வான ஒரு பதிலை பெற்றே தீருவது என்று முடிவோடு இருக்கின்றனர்.
இந்த சந்திப்பில் தான் அரசியலுக்கு வருவது குறித்து அவர் இறுதியாக கூறிவிடுவார் என்றோ, கட்சி ஆரம்பித்துவிடுவார் என்றோ ரசிகர்கள் நினைக்கவில்லை. (நானும் நினைக்கவில்லை!)
கடந்த கால ஏமாற்றங்களை இன்னும் மறக்கவில்லை
வணிக காரணங்களை முன்னிட்டு சில பத்திரிக்கைகள் தான் அவ்வாறு கூறிவருகின்றன. ரசிகர்கள் அவற்றை அப்படியே நம்பிவிடவில்லை. கடந்தகால ஏமாற்றங்களை அவர்கள் இன்னும் மறக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு சேவை அமைப்போ அல்லது அதற்க்கான கொடியோ அறிவித்தால் கூட போதும் - மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றே ரசிகர்கள் நினைப்பதாக தெரிகிறது.
இந்த பேனர், போஸ்டர் சமாச்சாரங்கள் எல்லாம், ரசிகர்கள் “சந்திப்பு” குறித்து எதுவும் தெரியாமல் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பில் செய்வதாக நினைக்கவேண்டாம். ஏதாவது ஒரு முடிவை அவர் அறிவித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தை அவருக்கு ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கமாகும். (இது போன்ற நிர்பந்தங்கள் தான் தலைவருக்கு சரி. அவராக எந்த காலத்தில் “நான் அரசியலுக்கு வருகிறேன், பொது நல இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கிறேன்” என்று கூறப்போகிறார்? நடக்கிற விஷயமா அது?) தானாக பழுக்க மறுப்பதை, மக்களின் நன்மைக்காக தட்டி பழுக்க வைக்க ரசிகர்கள் நினைப்பதில் தவறு இல்லையே?
இன்னும் கூட தயார்; ஆனா தலைவர் எதுக்கும் ஒரு வார்த்தை சொல்லட்டும்
இந்த பேனர்கள் தவிர ‘சந்திப்பு’ அன்று ராகவேந்தரா மண்டபம் அமைந்துள்ள கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கோடம்பாக்கம் மேம்பாலத்தில் அடிக்கொரு ‘ஸ்டாண்டீஸ்’ (சிறிய பேனர்கள்) வைக்க திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு படி மேல போய் அன்றே அன்னதானம், ரத்த தானம், உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யத்தயார். இருந்தாலும் தலைவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு அவற்றை செய்யலாம் என்று தங்கள் வேகத்திற்கு அணை போட்டுள்ளனர்.

நான்கு பேர் செய்யாததை இந்த பேனர் செய்யட்டுமே
இதுவும் ஒரு சராசரி சந்திப்பாக முடிந்துவிட்டால் என்ன செய்வது? எனவே இந்த சந்திப்பு குறித்து தாங்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக தலைவருக்கு உணர்த்தவே இந்த பேனர், போஸ்டர் சமாச்சாரங்கள் எல்லாம். ஒரு வேலை பத்திரிகைகளும் அவரது நெருங்கிய நண்பர்களும், வலைத்தளங்களும் ரசிகர்களின் இந்த எதிர்ப்பார்ப்பு குறித்து அவருக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க தவறும் பட்சத்தில், இந்த பேனர்கள் அவரிடம் கொண்டு சேர்க்கும் - என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். உண்மை தானே? எனவே என்னால் இயன்றவரை பத்திரிக்கைகளுக்கு இந்த பேனர் குறித்த செய்திகளை கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறேன்.
சந்திப்பு புஸ்வானமானால் ‘எந்திரன்’ வேண்டாமே…
இந்த சந்திப்பில் தலைவர் தனது அடுத்த மூவ் குறித்து எதுவும் தெரிவிக்காமல், வழக்கம் போல சராசரி சந்திப்பாக முடிந்துவிட்டால் எந்திரனில் அவர் நடிக்காமல் இருப்பது நலம் - என்று பல ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆகையால் அட்லீஸ்ட் எந்திரனின் எதிர்காலதிற்க்காகவாவது தலைவர் ஏதாவது செய்யவேண்டும் என்று சில தீவிர ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதே சமயம் சந்திப்பு பாசிடிவ்வாக முடிந்தால் (அரசியல் குறித்தோ அல்லது இயக்கம் குறித்தோ ஜஸ்ட் ஒரு கோடு போட்டு காண்பித்தால் கூட போதும்) தமிழகம் முழுதும் வரும் தலைவரின் பிறந்த நாள் களை கட்டிவிடும்.
நீங்களும் நானும் நினைப்பது முக்கியமல்ல
சந்திப்பு குறித்தோ, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தோ, அவரது “எந்திரன்” - குறித்தோ நீங்களோ நானோ நினைப்பதைவிட இவர்கள் (தீவிர ரசிகர்கள்) நினைப்பதுதான் முக்கியம். ஏனெனில் ரஜினி இதுவரை கட்டியுள்ள கோட்டையின் கற்கள் இவர்கள் தான். இவர்களை, இவர்களது எதிர்ப்பார்ப்புக்களை புறகணித்துவிட்டு எதையும் சாதிக்க முடியாது. நம்மில் பலர் காகிதப்புலிகள் என்று நமக்கே தெரியும். (நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தால், உங்களில் எத்தனை பேர் ஓட்டு போட தாய் நாடு வருவீர்கள்? அல்லது இங்கிருப்பவர்கள் எத்தனை பேர் களப்பணி செய்ய வருவீர்கள்?)
ரஜினியின் படத்தை ஒன்றிரெண்டு முறை பார்த்தவிட்டு இது போன்று பேசவே நமக்கு தெரியும். ஆனால் இந்த ரசிகர்கள் அப்படியல்ல. ரஜினி நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே தியேட்டரில் அலங்கார வளைவு வைப்பது, ஸ்டார் கட்டுவது, கொடி கட்டுவது, ரஜினியின் திரைப்படத்தை ஒன்றிற்கு பலமுறை பார்ப்பது என்று களத்தில் இறங்கி பணியாற்றுபவர்கள் இவர்கள். இவர்களில் சிலருக்கு காலப்போக்கில் அரசியல் மற்றும் பதவி ஆசை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலனவர்கள் நினைப்பு ஒன்றே ஒன்று தான். “தலைவா, நீ ஆள வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்!” என்பது தன் அது. இவர்களை நீங்கள் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. இவர்களது பணியை, அற்பணிப்பை கொச்சைபடுத்தவேண்டாம்.

என் நிலை என்ன?
என்னை பொறுத்தவரை நான் நினைப்பது ஒன்றே ஒன்றுதான்- தலைவரே பல்வேறு காலகட்டத்தில் சொன்னது தான் - அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றில்லை. இன்று அரசியல் இருக்கும் ஒரு மோசமான சூழ்நிலையில் - அரசியல் பிரவேசம் இல்லாமல் - இந்த தமிழ் மக்களுக்கு வேறு ஏதாவது ஒரு பொது அமைப்பு மூலம் தொண்டுகள் செய்தால் கூட போதும். நாம் மட்டுமல்ல பெரும்பாலான ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அதே சமயம் அரசியல் சவாலை அவரே விரும்பி ஏற்றுகொண்டால், என்னைப்போல மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இருக்க முடியாது.
அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ - என்னை பொறுத்தவரை தலைவர் பெயரோடும் புகழோடும் என்றும் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். சரிதானே?

உங்கள் கவனத்திற்கு
ரசிகர்களின் ஏற்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்பட்ட செய்தி: (எல்லோரையும்விட முன்கூட்டியே உங்கள் பார்வைக்கு!!)

Chennai Fans place banners for October meet - Images


Rajini Fans all over the state are gearing up for October meet with Superstar. Chennai-Thiruvanmiyur fans have placed an excellent hoarding near Thiruvanmiyur Bus Depot.
The qualities of legendary leaders is compared with Superstar in the banner and their names has been presented in a sequence. Very good to read.
Just click the following photographs to ZOOM and READ the texts of banner.
More news on the fans meet and posting about Loyola Surevey is on the anvil. It will be posted tomorrow.
thanks.

Will Rajini step into politics? Mohan Babu opens up!!

One of Superstar’s close friends, Mohan Babu has given a small interview to this week Kumudam, where he has touched a few lines about his friendship with Superstar and his political foray.Just wanted to share with you.
Tamil Nadu, the land of Magnanimity
It is Tamil Nadu alone which provides asylum for most of the artistes. This Mohan Babu too started his life here only. I would love to say that Tamil Nadu is my motherland. When I finished my studies, I didn’t get job in Andhra but got one in Tamil Nadu ina school. My salary was mere Rs.197 that time. Later because of cinema dream, I left my job and was roaming on the roads of Pondy Bazaar. I stayed at a deserted car shed and was searching opportunities. Because only the rent of car shed could afford my wallet. When it was raining, we couldn’t sleep there. The roof will be leaking. I would pass time by simply sitting in rainy days. I cooked my own food.
During this period only Rajini got introduced to me. Both of our life kicked off from there alone amidst several odds. We both were struggling even for our food and tea. I got married in Tamil Nadu only and all my children born here alone. They were brought up and educated in Chennai. So only I address Tamil Nadu as my motherland even in Andhra.
Whoever they may be and whatever their state may be, it is only Tamil Nadu that gives them shelter. I never heard any body in Tamil Nadu saying, that ‘You are a Telugu; you are a Kannadiga.’ Most important phases in my life occurred only when I was in Tamil Nadu. So, just to get the blessings of Tamil people I have brought my son Manoj here.
“Politics? Not now…” Rajini
I know Rajini for the past 27 years. I have appealed him several times to plunge into politics. Whenever I tell him, “It will be nice if you step into politics.”
“Not now. God has granted me more than enough!” would be his answer.
But Mohan Babu concluded the conversation with a quote: “Anything may happen in future!!!!”

Photo Buzz 1 - Aishwarya & Soundharya Rajini in childhood days


Friends, herewith i would like to start a new section called Photo Buzz. Interesting and not-much-seen pictures from Superstar’s personal and career front will be presented in this section. If possible, a news related to that photo will also be presented.
Hope you enjoy the section.
If any of you know any fact/news about the picture you see here, kindly share it with us in comments section.
thanks.
- Sundar
…………………………………………………………………………………………………………………
Childhood Aishwarya and Soundharya
This is a pictorial collection froma newspaper decades ago.
In the picture, can you identify who is Aishwarya Rajini and who is Soundharya Rajini? It’s interesting.

Media laps up the leaked stills of Endhiran




Friends, i know that most of you are expecting some new infos on forthcoming October meet of fans with Superstar. I am in the process of collecting some vital infos. Just wait. Once i get some solid news i shall post that same.
Now, let’s see what’s happening at Endhiran front.
Superstar is much involved in the shoot of Endhiran at Brazil now. First song has already been shot in Peru with Aishwarya Rai. Second song is going on at Brazil now in some unidentified location.
Media laps up the stills
Meanwhile some working stills of the first song has already leaked through internet and many websites have carried the same. No wonder, media lapped up the leaked stills immediately. Almost all evening papers have carried those photographs and served a visual treat to the fans and public. All of them carried the news in wallposter as headlines. It is expected morning papers too would carry the same.

Back to Endhiran shooting update:
They say nearly dozens of Jeeps carry the shooting crew (40 members) daily to the shooting spot from the hotel where the unit stay. Special chefs has been appointed to prepare food for the crew. It is said the budget for these two songs alone would cross 12 crores.

The shoot finishes by this weekend and Superstar returns to Chennai by 28th.
Plans to finish Aiswarya Rai part first
Aishwarya Rai has given a total number of 90+ days callsheet in parts for Endhiran. Shankar is planning the shoot in a way that scenes involving Aishwarya Rai would be finished as soon as possible and so as she will be releived as soon as possible. One more song involving Aishwarya will be shot in Ramoji Rao film city in a hitech set which is presently being erected by Sabu Cyrill.
Superstar wishes AVM Saravanan for quick recovery
Meanwhile, it is reported that Superstar called AVM Saravanan through phone from Peru last week, when he heard of his sudden hospitalization because of an indoor accident. He wished Saravanan sir a quick recovery and also said him that he will visit him once he comes to Chennai. He also spoke to MS Guhan and enquired about the health of his father and extended him moral support.
…………………………………………………………………………………………………………………

எந்திரன் ஸ்டில்கள்....






படப்பிடிப்பில் எடுக்கப்படுகிற ஸ்டில்களின் 'சிப்' அப்படியே ஷங்கர் கைக்கு போய்விடுகிறது. அதை அவர் தனது லேப்-டாப்பில் பத்திரப்படுத்தி விடுகிறார்.
படப்பிடிப்பில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் செல்போனில் படும் எடுக்கவே முடியாது.
-இப்படியெல்லாம் எந்திரன் பற்றி செய்திகள் வருகிறது. இந்த செய்திகளை ஆற அமர படித்துக் கொண்டே படப்பிடிப்பை செல்போனில் படம் எடுத்து இ-மெயிலில் அனுப்புகிறார்கள்! ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்று பிரேம்ஜி ஸ்டைலில் ஷங்கர் மண்டையை பிய்த்துக் கொண்டாலும், இந்த 'நெட்'வொர்க்கை நிறுத்த முடியாது போலிருக்கிறது. படத்தில் நீங்கள் பார்ப்பது பெரு நாட்டில் நடைபெற்ற எந்திரன் படப்பிடிப்பு. அழகு மயில் ஐஸ்வர்யாராயும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆட தயாராகிற இந்த படங்கள் பார்க்கவே ஜாலியாக இருக்கிறதல்லவா? ம்... எப்பவுமே திருட்டு தேனுக்கு ருசி அதிகம்!
-ஆர்.எஸ்.

Titbits 6: Who is the next Superstar and a non-stop laughter riot!!

Friends, I have been under a hectic work schedule for the past two days because of a new project at my workplace. Only from this afternoon, I get relieved from it partially. Thanks for your patience.
The Tid bits section is back in our website.
Very often I read much news related to our thalaivar here and there. Whether they are true or false or just generated for hype, we should agree that they are interesting indeed.
This section will bring such news to your notice with source name if possible.
This post would be spiced up with pics and additional news peice later tonight.
Thanks
- Sankar
…………………………………………………………………………………………………………………
1) Who is the “Next Superstar”?
One of my friends called me last evening and said that there’s a question and answer in Madhan Answers in Ananda Vikatan this week. I told him to brief that since I have stopped buying magazines from Vikatan publications. (I have to affirm that I am buying Kumudam still)
Ok…Let’s come to the matter.
Madhan answers.
Ques: Who is the “Next Superstar”?

Answer: Superstar is a title, not a position. We didn’t call M K Theagaraja Bhagavadhar or MGR as Superstar. We called only Rajini in that title. Why even day after tomorrow if an actor comes to that of equal to Rajini or over takes his mass, we won’t call him in that name.
Thanks Madhan for a wonderful answer. Once again Madhan has established his credentiality. Weldone.
In 2004 I remember, when all magazines wrote off Rajini, only Madhan answered in a polite and pleasing way.
I remember that question and Answer too:
Date: June 2004 (After election defeat)
Ques: Ini Rajini? (What about Rajini hereafterwards?)

Ans: Do you expect my answer would be Rajini will be hereafterwards Gajini? No…just this election failure won’t affect Rajini or his career. He would bounce back. My only concern is Rajini should not retire from the field as Bradman who scored duck in his last match.
As Madhan’s wish, Superstar later gave two stupendous hits Chandramukhi and Sivaji.
(More about Madhan and Superstar in next post of titbits)
2) Want non-stop laughter riot? Read this…
“There was an anti-incumbency wave against ADMK regime during 1996. I travelled all 40 constituencies and canvassed for DMK-TMC combine. They honoured me during the success meet. But they always like those who are singing praisings. But am not like that.”
“Why even for 2004 election, I was responsible for DMK-Congress alliance. I alone met Sonia Gandhi and discussed the alliance possibilities with her and formed the successful alliance. But they were afraid of me whether I would become, competition to their heirs. So, I was pushed to quit them. Just because of the safety of the innocent cadres who were behind me, I joined ADMK in 2006. There too I worked hard and canvassed in all 234 constituencies…”
Do you know who belong to the above laugher quotes?
Ada namma annan Sarath Kumarunga. (The above byte was from his interview to recent Tuglak issue dated 17/09/08.)
Do you know what is Sarath Kumar’s only political ambition?
Political ambition? No he is actually a political amphibian. Jumping from one party to another frequently. He is one of a political leaders without any mass or mission or vision. Just because of stomach burn over Vijayakanth’s success he started a party sorry company and managing it. (It is said that he is yet to pay the ad cost to newspapers for his conference held when he started party).
I remember a big comedy happened during the day of recent Hogenakkal fast. We all know that whole national media’s attention turned towards Rajini at the end of the fast and each and every channel discussed Superstar’s possible political entry. In one such programmes, CNN-IBN invited Sarath Kumar for a debate and in that debate they were keep on asking him about Rajini’s possible political entry which irritated him.
At one stage, he begged, “Please ask me about my party that I am running on my own. I am its leader. That party name….”
CNN-IBN: Mr.Sarath, do you think that Rajini will plunge into active politics?
Sarath: Please ask me about my party. I run a party called…
CNN-IBN: Sarath, do you think that people will go back after Rajini if he starts a party now?
Sarath: Please ask me about my party. I run a party called…

CNN-IBN: But it seems that people are expecting Rajini…
Sarath: No…I run a party called Sa..Ma..
CNN-IBN: What we are asking is whether Rajini…

He was supposed to tell “Vaenaam…azhudhuduvaen…iththoda niruthikuvom” for this time…but he didn’t since it was a LIVE show.
Like this the comedy continued thorughout the programme that day.
Now you got why Sarath reacted so sharply and instantly over Superstar’s “Sorry” controversy….?
Adhu…!!
3) Rajini’s next movie for Pyramid Saimira?
There’s baseless news going round in media that Rajini has agreed to do a movie for Pyramid Saimira to compensate the alleged loss of Kuselan and this movie would which would start after Endhiran would be directed by Murugadoss.
Some of our friends too quoted this that they read this in Gapsawoods and other websites and asked me where such news is true.
Please remember, whatever news you read in Gapsawoods is not authentic or original. They don’t know the art of giving true and accurate news.
If Superstar decides to help Saimira in compensation, some parts of Endhiran’s overseas rights will be given to them in concession rate and that is enough for them to meet the alleged loss. Because they know the hold that Superstar has in overseas and they enjoyed and witnessed in Sivaji itself. (They were sole distributors of Malaysia and Singapore). Then how come this news would be true?
Meanwhile, in yesterday (19/09/08) The Hindu, Entertainment supplement – Itsy Bitsy section Director Murugadoss has denied any such plans of directing such a movie. He has said, “It is false and nothing sort of this happened.” Hindu too expressed its wonder how such news originates.
Now satisfied?
4) Advani, Jayalalitha and Rajini – all in same diaz?
Tamilan Express, a magazine from Express Group has come out with a news that there’s possibility of the three VVIPs appearing in the same stage.
I think you must be aware of BJP leader LK Advani recently released his biography called “My Country; My life.” Ever since the release, he is visiting many cities and holding a launch event with local biggies and stars.
It has been decided to hold such a launch event even for Tamil Nadu in Chennai in the forthcoming October.
The article says that somebody suggested to hold (Cho?) the lauch event in Rajini’s presence with Jaya and Adavani together. BJP leadership too is positive about it and now they are in the
I don’t think that there’s no truth in this news and Superstar will ever agree to this.
Then how such news originates? Just because of Vijayakanth factor. Tamil media is very much after Vijayakanth thesedays and they are just spinning news against mighty opponents to Vijayakanth. They create such news so as that public would get dissatisfaction over them and it would turn positive to Vijayakanth.
So, beware of such malicious propaganda.
…………………………………………………………………………………………………………………
Waiting for more on Superstar’s next move?
Stay tuned…

எந்திரன்: ஹவாயில் இரண்டாவது டூயட்!

ரஜினி-ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் எந்திரன்- தி ரோபோ படத்தின் இரண்டாவது டூயட் பாடல் காட்சியை ஹவாய் தீவுகளில் படமாக்குகிறார் இயக்குனர் ஷங்கர்.எந்திரன் படப்பிடிப்பு இப்போது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் எழில்மிகு இயற்கை காட்சிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது.கடந்த 8ம் தேதி தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பின் முதல் பகுதி வரும் அக்டோபர் 5க்குள் முடிவடைகிறது. அதற்குள் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் ரோபோ ரஜினியின் வடிவமைப்பு போன்றவற்றை முடித்துவிடும் திட்டத்திலிருக்கிறார் ஷங்கர்.6 பாடல்கள் இடம்பெற உள்ள இந்தப் படத்துக்கு இதுவரை 3 பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான். இன்னும் 3 பாடல்கள் மற்றும் ரோபோ ரஜினிக்கான அதிரடி தீம் மியூசிக் என ரஹ்மானுக்கு எக்கச்சக்க வேலை வைத்திருக்கிறாராம் ஷங்கர்.இப்போதைக்கு ட்ராக் மட்டும்தான் போட்டுக் கொடுத்துள்ளாராம் ரஹ்மான். பின்னர் இந்தப் பாடல்களை லண்டனில் உள்ள தனது விருப்ப ஸ்டுடியோவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து தரப் போகிறாராம்.முதல் டூயட் பாடலை தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் புகழ்பெற்ற வரலாற்று நினைவிடமான மாச்சு பிக்கு மற்றும் அமேசான் காடுகளில் வைத்துப் படமாக்கிய ஷங்கர், அடுத்த டூயட் பாடலை அமெரிக்காவின் உல்லாச உலகமான ஹவாய் தீவுகளில் வைத்துப் படமாக்கி வருகிறாராம்.மூன்றாவது பாடல் எந்திரன் ரஜினி பங்கேற்கும் அதிரடிப் பாடல். இது ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது.

எந்திரன் படப்பிடிப்பில் புது கருவி

தமிழ்சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு சிந்தனையும் பிரமாண்டம். 'எந்திரன்' படப்பிடிப்பை எப்போதுமே இன்டோரில் நடத்திவிட முடியாது. அவுட்டோர் வந்தால், பார்வையாளர்கள் தங்கள் செல்போனில் அதை படம் பிடித்து உலகம் முழுக்க பரப்பிவிடும் அபாயமும் இருக்கிறது. சிவாஜி படப்பிடிப்பின் போது, செல்போனில் ரஜினி, ஸ்ரேயாவின் டூயட்டுகளை படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு, ஷங்கரை டென்ஷனுக்குள்ளாக்கியது போல, இனிமேல் முடியாது.
இதற்கு தனி யுக்தியை கண்டுபிடித்திருக்கிறார் ஷங்கர். வி.வி.ஐ.பிகளின் பாதுகாப்புக்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைவர்களின் காருக்கு முன்னே கம்பீரமாக வரும் ஒரு வாகனத்தில் பொறுத்தப்பட்டுள்ள இக்கருவியின் பெயர் ஜாமர். செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்கிற தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட நவீன இயந்திரம் இது. ஜாமர் செயல்படும்போது அருகில் இருக்கும் செல்போன்கள் இயங்காது.
இப்படி ஒரு ஜாமர் கருவியைதான் தனது 'எந்திரன்' படத்திற்காக வாங்கப் போகிறாராம் ஷங்கர். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இதை பொறுத்திவிட்டால் செல்போன்கள் இயங்காது படப்பிடிப்பை செல்போனில் சுடவும் முடியாது. ஷாட்டுக்கு வராமல் வளவளவென்று செல்போனில் கடலை போடும் ஹீரோ, ஹீரோயின்களை சமாளிக்கவும் ஜாமர் கருவிகளை பொறுத்தலாமே!
-ஆர்.எஸ்.

The actor within Superstar - Filmfare’s Top 10


Friends, this fortnight’s (17/09/2008) Filmfare has come up with a wonderful two page article on Superstar.
The article says we have seen enough of Rajinikanth as a Superman in his films and his blockbusters. What about exploring the actor inside the Rajinikanth?
Filmfare lists out Top 10 films in his career where it thinks that he excelled in acting.
(You can click and Zoom the below scan image to read the text)

The list is just top 10 and not with ranking. 10 movies has been picked from his career and given.
Brushing aside the negative talks and Kuselan debacle, the article claims he is the Badshah of the box office.
A good article by FilmFare. Thanks to them.
Do agree with the list?
But I don’t agree with the list and some of the important movies where Superstar floored everybody by his acting are missing in the list. Indeed a master piece is missing.
I don’t want to criticise Filmfare for this list - because each and everybody have their own perception. A movie which i like the most may not be liked by others and viceversa.
Anyway, you guys try your own list and try to post in comments. A valid list - agreeable by all - will be chosen from it and will be posted in our site as Rajini, the great actor’s Top 10.
Let’s see who makes it right.
Note: No need to rank the movies. Just chose 10 movies from Superstar’s career and list out with release year in ascending order.

Superstar’s magnanimity and astounded senior actor!

Superstar has great respect towards senior actors of the industry and has the habit of giving roles to them in each of his movie. Similarly he has the policy of christening beautiful Tamil names to the characters of his films. Many senior artistes have benefitted because of this, over the years. Because senior artistes would be ridden either by money or decline in films they act. There are many artistes who once had a very prosperous lifestyle but a struggling one now. Similarly one they would have been acting round the clock but have to stay at home now. This is very ridiculous. Superstar knows their problem very well and so he tries to give opportunity to them in his each films as much as possible. Similarly Superstar gave opportunity to veteran actor MN Nambiar and actress Sujatha in his own production Baba. But in Baba there’s another actor who also benefitted in Baba. He is none other than Calcutta Viswanathan who came in a very small role as Superstar’s father in the film. One of the finest actors of Kollywood. He was the one who came as father to Superstar in Moondru Mudichu too. The role of Viswanathan in Baba is a meagre one which lasted only for a few seconds and that too in titles alone. But the price he got for that is unimaginable. Calcutta Viswanathan explains on his own words: “Superstar called me one day and said that he has a small role of his father character in Baba and
whether i would be able to do that with just a few days callsheet. Would anybody hesitate? I agreed happily and gave dates instantly as i was free that time.” Baba shooting - a wonderful experience “During the shooting he treated me with great respect and passion and it was a wonderful experience for me. I was floored by his dedication towards his profession. Success has not gone to his head. It would be a tough thing for others if they are in his place. He treats everybody in the unit with the same respect and equality. Though i acted in the film for a few days it was an unforgettable experience for me.”Later the film got released and unwanted happenings spoilt the film and its run. I heard the film didn’t meet the expectations of the people and buyers incurred heavy loss. I felt very sad. It shouldn’t happen for a good soul like Rajini. What about my salary? In this situation, i was yet to receive my salary for the film. I was expecting it for sometime but it didn’t come. I don’t want to ask Rajini the same as he was already under several problems that time. I decided to keep mum and discard my salary as there was a heavy talk about the film’s loss to buyers. One day, Rajini himself called me over phone and asked me to whether i would be able to meet him. That evening i was at his home. He received me warmly and quarrelled with me in a friendly tone. “Sir, won’t you remind me about your salary? I forgot that because of these tension and hiccups. Very sorry.” “No..sir. I didn’t want to claim my salary at this irrelevant situation. Moreover they say that film incurred loss to buyers and distributors. How can I ask my salary at this juncture and embarrass you…” Wow…an unimaginable salary “No…no..we shouldn’t discard or sacrifice our salary which get by acting. Getting paid for work is our right. Leave the problems. I will take care of them. You just keep this amount. Sorry for the dela,” by saying this, he handed over me a lumpsum amount. I couldn’t beleive my eyes. You know what the amount? Five lakh rupees. Rs.5 lakhs just for a few scenes comprising a few minutes. I didn’t expect this much amount for that small role. In the times where we are deprived of our actual salary even when the film turns superhit, it is heartening to see persons like Rajini who pays the salary promptly and that too more than the actual - even amidst LOSS.
That money was a treasure for me and it was very useful for me that time. Rajni sir is one of the golden souls in the industry and I pray ALMIGHTY to keep him always happy without any troubles. A pleased Viswanathan concluded. ………………………………………………………………………………………………………………ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி! திக்கு முக்காடிய மூத்த நடிகர்!!
நண்பர்களே, தனது படங்களின் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நல்ல தமிழ் பெயர் வைப்பது போல், தனது ஒவ்வொரு படத்திலும் கூடியமட்டும் மூத்த நடிகர், நடிகையருக்கு வாய்ப்பளிப்பதை சூப்பர் ஸ்டார் கொள்கையாக வைத்திருக்கிறார்.அந்த கொள்கையால் பலனடைந்த மூத்த கலைஞர்கள் அநேகம் பேர் உண்டு.
காரணம் மூத்த கலைஞர்களுக்கு ஒன்று பணக்கஷ்டம் அல்லது படக்கஷ்டம் இருக்கும். ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்துவிட்டு இன்று பணத்திற்காக கஷ்டபடுபவர்கள் ஒரு வகை. இன்னொரு வகை - ஒரு காலத்தில் பிஸியாக இருந்துவிட்டு கடைசி காலத்தில் படங்கள் எதுவும் இல்லாமல் தனிமையில் காலத்தை தள்ளும் கலைஞர்கள்.தனது சொந்த தயாரிப்பான பாபாவில் நம்பியார், சுஜாதா ஆகியோருக்கு சூப்பர் ஸ்டார் வாய்பளித்தார். இதை தவிர அதிகம் அறியப்படாத இன்னொருவரும் அந்த படத்தில் உண்டு.
அவர் தான் கல்கத்தா விஸ்வநாதன். மூன்று முடிச்சு படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அப்பாவாக வருவாரே…அவர் தான் கல்கத்தா விஸ்வநாதன். பாபா படத்திலும் அவர் ஒரு சில காட்சிகளில் வருவார். சூப்பர் ஸ்டாரின் தந்தையாக, டைட்டிலில் எழுத்து போடப்படும் காட்சிகளில் மட்டுமே அவர் வருவார். அவர் வரும் காட்சிகளின் மொத்த நேரமே ஒரு சில வினாடிகள் தான். ஆனால் அதற்காக அவருக்கு கிடைத்த வெகுமதி இருக்கிறதே…நெஞ்சை தொடுவது அது.
அதை அவரே நம்மிடம் கூறுகிறார்.
“பாபா படத்தில் அவரின் தந்தையாக நடிக்கும் ஒரு பாத்திரம் இருப்பதாகவும், அதை நான் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் ஒரு சில நாட்கள் மட்டும், டேட்ஸ் தருமாறு ரஜினி என்னிடம் கேட்டார். கரும்பு தின்ன கூலியா என்று நான் உடனே ஒப்பு கொண்டேன். சம்பளமெல்லாம் எதுவும் பேசவில்லை.
படப்பிடிப்பில் என்னிடம் மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டார் ரஜினி. மூன்று முடிச்சு சமயத்தில் அவரிடம் பார்த்த அதே தொழில் பக்தி இன்று இருந்தது. இவ்வளவு வெற்றிக்கு பிறகும் அவரிடம் ஆணவம் சிறிதும் இல்லை. தன்னை விட வயதில் மூத்தவர்களை மதிக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வயதில் சிறிதானவர்களையும் மதிக்கும் பண்பும் அவரிடம் பார்த்து வியந்தேன்.அந்த படத்தில் நடித்தது சில நாட்கள் என்றாலும் அவை என்னால் மறக்க முடியாதது.
பிற்பாடு பாபா படம் ரிலீசாகி விரும்பத்தகாத சில சர்ச்சைகள் ஏற்பட்டன. படம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை என்றும், படம் வாங்கியவர்களுக்கு பெரிய நஷ்டம் என்றும் பேசப்பட்டது. ஒரு நல்ல மனிதருக்கு இத்தனை சோதனைகளா என்று நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
இந்நிலையில், எனக்கு படத்தில் நடித்ததற்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் வரவில்லை. ரஜினி சார் இன்று இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதுவும் படம் சரியாக போகவில்லை, பலத்த நஷ்டம் என்று பேச்சு அடிபட்டுகொண்டிருக்கும் இந்த தருணத்தில் எனக்கு என் சம்பளத்தை கேட்க மனம் வரவில்லை. அப்படியே அதை விட்டுவிட்டேன்.
திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து போன். என்னை சந்திக்க விரும்புவதாகவும், தன் வீட்டிற்கு உடனே வர முடியுமா என்றும் கேட்டார். நான் அந்த சமயம் சென்னையில் இருந்ததால், உடனே அவரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றேன். என்னை அன்புடன் வரவேற்று உபசரித்தார். உரிமையுடன் கோபித்து கொண்டார். “ஏன் சார், நான் தான் உங்களுக்கு படத்துல நடிச்சதுக்கு சம்பளத்தை தர மறந்துட்டேன்ன்னா, நீங்களாவது எனக்கு ஞாபகப்படுத்த கூடாதா? ஐ ஆம் வெரி சாரி!” என்றார்.
“இல்லை சார், நீங்க இருக்குற இந்த இக்கட்டான சூழ்நிலைல எனக்கு அதை கேட்கனும்னு தோணலை. படம் வேற சரியா போகலை, நஷ்டம்ம்னு பேசிக்கிறாங்க. அதனால நான் அமைதியா இருந்துட்டேன். மேலும் நான் ஒன்னு மாசக்கணக்கா ஒரு பெரிய ரோல்ல நடிக்கலியே. ஜஸ்ட் ஒரு ஸ்மால் ரோல் தானே. விடுங்க…” என்றேன்.
“நோ..நோ…நாம் நடிச்சதுக்கு நமக்கு வர வேண்டிய பணத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்க மறுக்க கூடாது. அது நம்ம உரிமை. என் பிரச்னைகளை விடுங்க…அது சரியா போயிடும். நீங்க உங்க சம்பளத்தை வாங்கிகோங்க” என்று கூறி என்னிடம் ஒரு பெரிய தொகையை அளித்தார்.
ஜஸ்ட் ஒரு நிமிசத்துக்கும் குறைவா, நான் வந்த அந்த ரோல்லுக்கு அவர் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஐந்து லட்ச ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை நான் எதிர்பார்க்கவேயில்லை. அதுவும் அந்த சின்ன ரோல்லுக்கு.
படம் வெளியாகி லாபத்தை கொட்டினாலே சொன்ன சம்பளத்தை சரியா கொடுக்க மனம் வராதவங்களுக்கு மத்தியில, நஷ்டத்துக்கு நடுவுல, சொன்னதுக்கும் மேல பணத்தை அள்ளி கொடுத்த ரஜினி சார் ரியலி கிரேட். அந்த பணம் அந்த டைத்துல எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. கிட்ட தட்ட ஒரு புதையல் கிடைச்ச சந்தோஷம் எனக்கு.
“சினிமாவுல இருக்குற நல்ல மனுஷங்கள்ல ரஜினியும் ஒருத்தர். அவர் எப்பவும் எந்த குறையும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்,” என்று முடித்தார் விஸ்வநாதன்.
முடிக்கும் போது நெகிழ்ச்சியில் அவர் கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள்.

The minutes of Rajini’s Press meet - September 1995




Friends, I have struck up with some official work and hence i couldn’t post any news yesterday. Today too the same situation. I don’t want to disappoint you today too. So, prepared this for timebeing. Just treat this as a backup stuff for you.
Translation of the same will be available tonight. Non-Tamil readers kindly excuse me.
The following is from Junior Vikatan dated 04/10/1995 after Superstar’s historical press meet.
This press meet was conducted amidst huge expectation on Sep 27, 1995 where it was speculated that Superstar would announce his decision on politics. Sun TV showed a special coverage of this press meet that time.

தலையை கொடுத்த ஷங்கர்

'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய்தான்போலிருக்கிறது. ரோபோ கதையை ஷாரூக்கானிடம் சொல்லி, அந்த திட்டம் கைவிடப்பட்டது யாவரும் அறிந்ததுதான். ஆனால், வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டிய ஷாருக், ஷங்கருக்கு கொடுக்கும் டார்ச்சர்களை பார்த்தால், தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய ஷங்கர் தலையை கொடுத்துவிட்டாரோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.
'தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான்' என்று போகிற போக்கில் சொல்லப்படுகிற பழமொழிக்கு சரியான உதாரணம் இந்த ஷாரூக். ரோபோ தயாரிப்பில் இருந்து விலகிக் கொண்டவர் அப்படியே முழுவதுமாக விலகிக் கொள்ள வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு தானும் அதே போல ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறாராம். இவரை நம்பி கதை சொன்ன ஷங்கருக்கு ஷாரூக் செய்யும் துரோகம் இது என்றால், ரோபோ என்ற பெயரில் வெவ்வேறு சப் டைட்டில்களை சேர்த்து சுமார் ஒன்பது தலைப்புகளை பதிவு செய்து வைத்திருப்பது பச்சை துரோகம்.
இன்று வடமாநிலங்களிலும் வெற்றிக் கொடி நாட்டி வரும் நமது கலைஞர்கள், இனிமேல் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஷங்கர்-ஷாரூக் பிரச்சனை ஒரு உதாரணம்!

ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்ல

அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப செய்யும் தவறு, திரைக் கலைஞர்கள் மீது நடத்தும் அநாவசியத் தாக்கு தல்கள்.யாரைத் தாக்கினால் எளிதில் விளம்பரமும் பரபரப்பும் தங்களைச் சூழ்ந்து கொள்ளும் என்ற சூட்சுமம் புரிந்தவர்கள் இந்த அரசியல் வியாதிகள்.அந்த விளம்பரம்தான் அதிகார வியாபாரத்துக்கு இவர்கள் போடும் முதலீடு. ஆனால் மக்களோ இதைப்பற்றி யோசிப்பதுகூட இல்லை பல நேரங்களில். தாங்கள் கண்ணால் பார்க்கும் உண்மைகளைக் கூட உணராமல், இந்த போலி அரசியவ்வாதிகளின் பின்னால் போய், நல்ல மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்துகிறார்கள்.ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்ற உண்மையை இவர்களில் பெரும்பாலோர் கண்ணால் பார்த்தவர்கள்தான். ஆனால் அதை உணர மறுத்தார்கள், சுயநல மீடியா மற்றும் போலி அரசியல்வாதிகள் போட்ட கூச்சலில் மயங்கி. பலரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் ரஜினி செய்த ஒரு விஷயத்தை, வேண்டுமென்றே எதிர்மறையாக்கி, ஒரு இனத்துக்கே அவரை எதிரியாக்கப் பார்த்தார்கள். இது எத்தனை பெரிய கயமைத்தனம்?இப்போது மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு எதிராக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி வருகிறார் பால் தாக்கரே மற்றும் அவரால் வளர்க்கப்பட்ட விஷ விருட்சமான ராஜ் தாக்கரே. இன்னும் இப்படிப்பட்ட பண்பற்ற தலைவர்களின் பின்னால் லட்சக் கணக்கில் அணிவகுக்கவும், அவர்கள் சொல்லும்போதெல்லாம் போஸ்டர்களைக் கிழிக்கவும், சாணி அடிக்கவும் ஒரு கும்பல் தயாராக இருக்கிறது. இந்தியா படித்தவர்கள் நிறைந்த நாடு என்று வெளியில் சொல்லிக் கொள்வதே எத்தனை வெட்கக்கேடான விஷயம்!பண்பின் இருப்பிடம், கலாச்சாரங்களின் பிறப்பிடம், மக்களாட்சியின் தாயகம் என்று நம்மை நாமே சொறிந்து விட்டுக் கொள்வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? விஞ்ஞானமும், நவீனத்துவமும் வளர வளர மக்களிடம் மனிதத்துவம் மறைந்து வக்கிரம் வளர்ந்ததுதான் மிச்சம்! இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னும் ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்வதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல... இன்னும் சற்றே மிச்சமிருக்கும் மனிதநேயம் அது! By Vinojasan

No more soundbite please!

தமிழ்நாடெங்கும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளை அடுத்த மாதம் சென்னையில் சூப்பர் ஸ்டார் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகும் நேரத்தில் ரஜினி மன்ற வட்டாரங்களிலிருந்து அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.ரஜினி மன்ற நிர்வாகிகள், சூப்பர் ஸ்டாரை அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்று சொல்லி சென்னையில் போயஸ்கார்டன் வீட்டிலும் , ராகவேந்திரா மண்டபத்திலும் குவிந்ததாகவும், பின்னர் சூப்பர் ஸ்டாரை சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் பின்னணி விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள், ரஜினியை தேடி வருவது அன்றாடம் நடைபெறும் வழக்கமான நிக்ழ்ச்சிதான். அனைத்து மன்ற நிர்வாகிகளையும் ரஜினி சந்திக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சந்திப்பு பற்றிய முழு விபரங்கள் சம்பந்தப்பட்ட மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக தேதி, இடம் போன்றவை முறையாக தெரிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை தலைமை மன்றம் செய்து வருகிறது. ரஜினி தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள நினைத்தால் அது அறிக்கை வடிவில் நிச்சயம் ரசிகர்களை சென்றடையும். ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் இடையே எந்தவொரு இடைவெளியும் இல்லை. ரஜினி ரசிகர்களின் உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் தலைமை மன்றத்தின் வாயிலாக ரஜினிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதில் எந்தவித மாற்றமும் இருக்காது. தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவுக்கும் பேட்டியளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்

மறைந்த கலைஞர்களில் பலருக்கும் பிடித்த நடிகர் வி.கே.ராமசாமி அவர்கள். பிறவிக் கலைஞர் என்பார்களே... அந்த வார்த்தைக்குப் பொருத்தமானவர் வி.கே.ஆர். அவரது ரசிப்புக்குரிய பாத்திரங்கள் ஒன்றா இரண்டா... பல நூறு.ஆனாலும் கடைசிவரை அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தவர்.நமது சூப்பர் ஸ்டாரின் பெரும்பாலான படங்களில் வி.கே.ஆரைக் கட்டாயம் பார்க்கலாம்.எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்து தன் மனதில் மிக உ.யர்ந்த இடத்தை ரஜினிக்கு மட்டுமே அவர் கொடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் இந்த இரு பெரும் மேதைகளையும் தாண்டி மேலான இடத்தை ரஜினிக்குத் தந்திருந்தார். அதை நான் உணர்ந்த அந்த நிமிடத்தை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன. அவரைச் சந்தித்து, ஒரு பத்திரிகையாளனாக இல்லாமல், கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை. அருணாச்சலம் படப்பிடிப்பிலிருந்த வி.கே.ஆரிடம் என் விருப்பத்தை ஒரு பி.ஆர்.ஓ. மூலம் சொன்னேன்.அதுக்கென்ன இருக்கு... கழுத காசா பணமா... வாங்க.. வாங்க! என்றார் வாய் நிறைய!ஆனால் உடனே என்னால் அவரைப் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. பாபா ரிலீசாகி இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது. ஊரே அந்தப் படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துக் கொண்டிருந்த தருணம். அப்போதுதான் வி.கே.ஆருக்கு உடல் நிலை சரியில்லாத செய்தி அறிந்து இன்னும் இரு பத்திரிகை நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன். வரவேற்பறையில் தளர்வாய் சாய்ந்திருந்தார்...‘வாங்க... வாங்க...’ குரலில் தளர்வு இருந்தாலும், உற்சாகம் தொக்கி நின்றது.சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.‘எதும் பேட்டி கீட்டி எடுக்கணுமா...?’‘அதெல்லாம் ஒணுமில்லண்ணே. சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்...’‘பாபா பார்த்திட்டீங்களா... எப்படியிருக்கு... என்னென்னமோ பேசிக்கிறாங்களே..’ என்றார்.‘பார்த்தேன்ணே. எனக்குப் பிடிச்சிருந்தது படம்... ஆனா என்னன்னே தெரியல, தாறுமாறா திட்றாங்களே...” ‘நல்ல படம்தான். இந்தக் காலத்துல நல்ல படமெல்லாம் ஓடணுமின்னு கட்டாயமில்லையே... ஆனா பாருங்க... அந்த தம்பியோட நல்ல மனசுக்கு பங்கம் வராது. இப்ப கஷ்டப்பட்டாலும் ஓஹோன்னு வருவாரு பாருங்க. அவரு நிறத்துல கருப்புன்னாலும், மனசுல எம்ஜிஆர் மாதிரி சொக்கத் தங்கம்’ என்றார். எனக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.‘கிட்டத்தட்ட ரஜினியோட எல்லாப் படங்கள்லயும் நடிச்சிருக்கீங்க... உங்க அனுபவத்தைச் சொல்லுங்கண்ணே... இது பேட்டிக்காக இல்ல.. சும்மா இன்ட்ரஸ்ட்ல கேக்கறேன்’, என்றேன்.உடனே அவர் சற்றே தடுமாறிபடி எழுந்தார்.என்கூட கொஞ்சம் வாங்க என எங்கள் தோளைப் பிடித்தபடி தனது வீட்டுப் பூஜை அறைக்குக் கூட்டிச் சென்றார்.நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்தப் பூஜை அறையில் ஏகப்பட்ட கடவுள் படங்கள், சின்னச் சின்னதாய் விக்ரகங்கள்.
அவற்றின் நடுவே... இந்த நூற்றாண்டின் அரிய மனிதர்களில் ஒருவர், நமது தலைவர் சூப்பர்ஸ்டாரின் படம்!

ஒருநிமிடம் ஆடிப்போய் விட்டேன். கண்களில் என்னையும் அறியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டது. வி.கே.ஆருக்கும்தான். என்னண்ணே இது ரஜினி படத்தை இங்க வச்சிருக்கீங்க...?, என்றோம் நாங்கள் மூவரும்.‘அதுக்குத் தகுதியானவர்தான்... வயசுல அவரு சின்னவரா இருந்தாலும் குணத்துல மகான். அவருக்கு என்னோட மரியாதையை வேற எப்படிக் காட்டுவேன்... இன்னிக்கு நான் உடலால நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மனசால கொஞ்சமாவது தெம்பா இருக்கேன்னா அதுக்கு ரஜினி தம்பிதான் காரணம். எப்பவோ ஒருமுறை... ஒரு பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன, அவர்கூட பிளைட்ல போறப்ப, எனக்கும் ஒரு படம் பண்ணித் தரணும்னு கேட்டுக்கிட்டேன் அவர்கிட்ட.கேட்டவுடனே கடவுள் வரம் கிடைக்காதில்ல... அந்த மாதிரிதான் கொஞ்ச நாள் நான் காத்திருந்தேன். அப்புறம் நானும் மறந்திட்டேன். ஆனா அவரோட எல்லாப் படத்திலயும் எனக்கு தவறாம வாய்ப்புக் கொடுத்திட்டிருந்தார். நான் எதிர்பார்க்காத பெரிய தொகை சம்பளமாக் கொடுக்க வைப்பார்.சரி... நமக்கு படம் பண்றதுக்குப் பதில் இப்படி உதவி பண்றார் போலன்னு நினைச்சு சமாதானமாயிட்டேன். ஒருநாள் பேப்பர்லதான் செய்தி படிச்சேன்... அருணாச்சலம்னு ஒரு படத்தை அவர் தயாரிக்கிறதாவும், அந்தப் படம் தயாரிக்கும் 8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ் போட்டிருந்தாங்க. எனக்கு ஒண்ணும் தெரியல... அப்புறம் ரஜினியே போன்ல விஷயத்தைச் சொன்னாரு..அந்தப் படத்துக்கு ஒரு தயாரிப்பாளரா நான் நயா பைசா கொடுக்கல... அவரும் என்கிட்ட இதப்பத்தி ஒண்ணும் கேக்கல.படத்துல நானும் நடிச்சேன், வில்லனா. அப்பவே சொல்லிட்டேன், ரஜினிய திட்டற மாதிரி வசனம் ஏதும் வச்சிடாதீங்கன்னு. படம் முடிஞ்சு பெரிய அளவில் ஓடுச்சி.. ஒருநாள் என்னைக் கூப்பிட்டிருந்தார் ரஜினி... ஒரு பெட்டில வச்சி ரூ.25 லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக ஒரு பெரிய தொகையை தனியா கொடுத்தார்... இந்தக் காலத்துல இப்படியெல்லாம் உதவற குணம் யாருக்கு வரும்... சும்மா கொடுத்தா என் கவுரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு தயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி. அப்போ எனக்கு எம்ஜிஆர் ஞாபகம் வந்திடுச்சி... அவரும் இப்படித்தான். அவரை நம்பினவங்கள திடீர்னு ஒருநாள் தயாரிப்பாளர்னு அறிவிச்சு பெரிய ஆளாக்கிடுவார். எனக்கு இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்தது ரஜினியாலதான். அவருக்கு இதைவிட சிறப்பான பதில் மரியாதையை தர எனக்குத் தெரியல... அவர் ரொம்ப நாள் நல்லாயிருக்கணும். நிறைய பேர் அவரால நல்லா வாழணும்...” என்றார்.இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களில் வி.கே.ஆர். நம்மைவிட்டு மறைந்தார். அரைவேக்காடுகளும், அஞ்ஞானிகளும் எவ்வளவுதான் புழுதிவாரித் தூற்றினாலும் அவற்றையெல்லாம் தனது நல்ல குணத்தால் பொசுக்கிவிட்டு ரஜினி என்ற மனிதர் சூரியனாய் ஜொலிப்பது எப்படி எனப் புரிகிறதா...! -சங்கநாதன்

Pondichery theater cutout quiz answer!


Dear Fans,Thanks for numerous response. Now, we would like to inform you that the cutout placed in Anandha Theater at Pondichery is for Maveeran release in 1986 Deepavali. However, the cutout still is extracted from Thaai Veedu.

மன்னிப்பு கேட்பதால் ஒருவரது மதிப்பு குறையாது - அமிதாப்


பத்திரிக்கைகள் மேலும் பெரிதுபடுத்தி மக்களை குழப்பிவிட்டுவிடுவார்களோ என்கின்ற அச்சத்தில் சூப்பர் ஸ்டார் தனது “வருத்தம்” பற்றிய சர்ச்சைக்கு விரிவான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. மௌனமே சிறந்தது என்று இருந்துவிட்டார்.
இந்நிலையில் தனது ”வருத்தம்” சர்ச்சை பற்றி சூப்பர் ஸ்டார் கருத்து கூறினால் என்ன கூறுவார்?
மேலே கொடுக்கபட்டுள்ள தினமலர் செய்தியில் அமிதாப் கூறியதுதான் ரஜினியின் கருத்தாகவும் இருக்கும்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் போன்றே ஒரு “மன்னிப்பு” சர்ச்சையில் அமிதாப் சிக்கிக்கொண்டார்.
தனது ரசிகர்களோ அல்லது வேறு யாராவதோ ரத்தம் சிந்துவதை சிறிதும் விரும்பாத அமிதாப் தனது இமேஜை தூக்கி தூர போட்டுவிட்டு “மன்னிப்பு” கேட்டு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.


இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் அமிதாப்பை நான் கவனித்திருக்கிறேன். அவரது நடவடிக்கைகளில் ஒரு தேர்ந்த முதிர்ச்சி தெரியும். அவரது தீவிர ரசிகரான சூப்பர் ஸ்டாரிடமும் அந்த குணம் இருப்பது வியப்பில்லை. சில சரிவர புரிந்துகொள்ளாமல் அமிதாப் குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர். அவர்கள் அறியாமையை நினைத்து சிரிக்கிறேன். அவ்வளவே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திவாலானபோது, ஓடி ஒளியாமல், தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை நேர்வழியில் எதிர் கொண்டு, பல திரைபடங்களில் இரவு பகல் பாராமல் நடித்து, க்ரோர்பதி நிகழ்ச்சிசியில் கலந்துகொண்டு தனக்கு தேவையான பணத்தை திரட்டி தனது கடனையெல்லாம் அவர் அடைத்தார்.
எல்லாருக்கும் பிரச்சனை வரும். அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது சூட்சுமம்.

சூப்பர் ஸ்டார் கேட்டது அமிதாப்பை போல மன்னிப்பல்ல, ஒரு ஆழ்ந்த வருத்தம். அவ்வளவே. அதற்கே நம் பத்திரிக்கைகள் அவரை பாடாய் படுத்திவிட்டன.
2002ல் சூப்பர் ஸ்டாரின் காவிரி உண்ணாவிரதத்தில் காணப்பட்ட ஒரு பேனரில் படித்த வாசகம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. “பிறர் நலனுக்காக தன்னை வருத்திகொள்பவனே சிறந்த தலைவன். தூண்டிவிடுபவன் துரோகி!” - எவ்வளவு உண்மை…!!
………………………………………………………………………………………………………………
நண்பர்கள் கூறுவது என்ன?
நண்பர் வினோ இது குறித்து தனது வலைத்தளத்தில் ஒரு அருமையான பதிவை தந்திருக்கிறார். கீழ் கண்ட முகவரியை க்ளிக் செய்து மிஸ் பண்ணாமல் அதை படிக்கவும்.
மிச்சமிருக்கும் மனிதநேயம்!
அப்படியே சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி குறித்தும் ஒரு பதிவு தந்திருக்கிறார். அதையும் படிக்கவும்.
ச்சும்மா அதிருதில்ல…!
அதே போல் விகடனின் பரிதாப நிலையை நண்பர் கிரி புட்டு புட்டு வைத்திருக்கிறார். அத்தோட நாக்கை பிடுங்கி சாவதைபோல நாலு கேள்வி அவர்களை கேட்டுள்ளார். கீழ் கண்ட முகவரியை க்ளிக் செய்து அதையும் படிக்கவும்.
நீங்க நல்லாத்தான் “எழுதறீங்க” விகடன் சார்!

ரஜினியின் அக்டோபர் புரட்சி? பத்திரிகைகளின் பில்டப்பை நம்பலாமா?




“அரசியலுக்கு வரப்போவதை பற்றி ரஜினி வரும் அக்டோபரில் அறிவிப்பாராம் அல்லது ஒரு புது சேவை அமைப்பை துவக்குவது பற்றி முடிவெடுப்பாராம்.” தற்போது பத்திரிக்கைகள் செய்யும் இந்த பில்டப்பை பார்த்தால் செப்டம்பர் மாதம் 1995ஆம் ஆண்டு எனக்கு ஞயாபகத்திற்கு வருகிறது…
முத்து படத்தில் ரஜினி நடிக்க துவங்கிவிட்ட நிலையில், ஆர்.எம்.வீரப்பன் சர்ச்சை கொடிகட்டி பறந்தது….ரஜினி அரசியலுக்கு வருவார்…கட்சி துவக்குவார்…கொடி ரெடி, பிரசார வேன் கூட ரெடி என்று இதே ஜூவிக்களும் குமுதங்களும் கவர் ஸ்டோரியாக எழுதி தள்ளி நன்றாக கல்லா கட்டின.
தினமும் நாளிதழ்களில் ரஜினிதான் முதல் பக்க செய்தி. கிட்ட தட்ட 3 மாதங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள். ஆனால் சூப்பர் ஸ்டாரோ இப்போது் போல அப்போதும் மௌனம்தான். அது அவர்களுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.
ஒரு கட்டத்தில் செய்திகள் எல்லை மீறி போயின…அரசியல் கனவில் மிதந்தனர் ரசிகர்கள். பொது மக்களும் மிகவும் ஆவலுடன் ரஜினியின் அரசியல் அறிவிப்பை எதிர்ப்பார்த்தனர்.
ரஜினிக்கு வர விருப்பம் இல்லையென்றாலும், இப்படி ஒரு நிர்பந்தத்தை அவருக்கு அளித்து அரசியலுக்கு அவரை இழுத்துவிடுவதுதான் பத்திரிகைகளின் திட்டம். காரணம் அப்போதைய அ.தி.மு.க. அரசின் பத்திரிக்கைகளுக்கு எதிரான அடக்கு முறை. (ஜெயா அரசால் நூற்றுகணக்கான வழக்குகள் முன்னணி பத்திரிக்கைகள் மீது போடப்பட்டன. ஹிந்து கூட தப்பவில்லை!)
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெவுக்கு எதிராக பகிரங்கமாக பாட்ஷா விழாவில் அவரது அமைச்சரை வைத்துகொண்டே குரல் கொடுத்த ரஜினி அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிய, அவருக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ கெட்டியாக பிடித்துகொண்டார்கள் அவரை.
ரஜினிக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம்
அதற்க்கு பிறகு இவர்கள் போட்டி போட்டுகொண்டு வெளியிட்ட செய்திகளால் - அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, இவர்களின் நிர்பந்தத்தால், ஒரு பிரஸ் மீட்டாவது வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ரஜினி.
செப்டம்பர் 27 அன்று பிரஸ் மீட் நடைபெறும் என்று நாள் குறிக்கப்பட, இப்போது எப்.எம். ரேடியோக்கள் செய்வதை போல முன்னணி நாளிதழ்களும் அன்றைய முன்னணி சானல்களும் பிரஸ் மீட் குறித்து கவுண்ட் டவுன் கொடுத்தன.
வேறு வழியின்றி செப்டம்பர் 27 அன்று செய்தியாளர்களை சந்தித்தார் சூப்பர் ஸ்டார்.
வரலாற்று புகழ் வசனம்
அந்த பிரஸ் மீட்டில்தான் தான் வரலாற்று புகழ் மிக்க, ஒரு வலிமையான அரசையே தூக்கியெறிய காரணமான “மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!!” என்கின்ற ரியல் லைப் பஞ்ச் வசனத்தை கூறினார்.
மற்றபடி தனது அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தனக்கு மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், அரசிய்லுக்கு வருவதைபற்றியோ, ஆட்சியை பிடிப்பதை பற்றியோ தான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று அந்த பிரஸ் மீட்டில் கூறினார் ரஜினி.
பத்திரிகைகளின் முயற்சி தற்காலிகமாக ஓய்ந்தாலும் பின்னர் நரசிம்ம ராவ் புண்ணியத்தால் ரஜினி அரசியலில் தலையிட்டு தா.மா.காவை தோற்றுவிக்க காரணமாகியது.
இதை இப்போது என் இங்கு கூறுகிறேன் என்றால், அந்தி பிரஸ் மீட்டுக்கு ஜூவி உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்த பில்டப் மிகவும் ஓவர்.
தற்போது….2008 இல்
அதே போல் தற்போது - ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி அக்டோபரில் அறிவிப்பார் என்றும் அல்லது ரசிகர்களை சந்தித்தது பேசி ஒரு அமைப்பையாவது துவக்குவார் என்றும் செய்தி பரப்பி வருகின்றன பத்திரிக்கைகள்.
உண்மையில் ரஜினி, ரசிகர்களை சந்திப்பதாக மட்டுமே வாக்களித்திருக்கிறார். “உங்கள் கோரிக்கைகளை அப்போது அவரிடம் நேரடியாக சொல்லுங்கள்” என்று மட்டுமே தளபதி சத்தி கூறியிருக்கிறார்.

தற்போது சத்தியிடம் கெஞ்சி கூத்தாடி ஜூவி ஒரு பேட்டியை வாங்கியுள்ளது. நான் கூறியதையே அந்த பேட்டியிலும் அவர் கூறியிருப்பதாக தகவல். நாளை கடைகளுக்கு வரும் அந்த இதழில் கவர் ஸ்டோரி இது தான். “அக்டோபர் புரட்சிக்கு தயாராகும் ரஜினி?” சத்யநாரயணா பேட்டி.
அக்டோபர் என்ன நடக்கும்?
ரசிகர்களை சந்தித்தது மனம் விட்டு ரஜினி பேசி நீண்ட நாட்களாகிவிட்டபடியால் இம்முறை அனைத்து மாவட்ட ரசிகர்களையும் சந்திக்கிறார். ஒப்போது ரசிகர்கள் சில கோரிக்கைகளை முன் வைப்பார்கள் அவ்வளவே. ரஜினி தரப்பிலிருந்து அதற்க்கு பிறகு அறிவிப்பு வருவது கேள்விக்குறியே.
வீண் பரபரப்புக்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம். அப்படி உண்மையில் அறிவிப்பு ஏதும் வந்தால், முதல் ஆளாக நான் கூற முயற்சி செய்கிறேன். ஓகே?
படம் நடிக்கமலிருந்தாலே ரஜினி இதுபோன்ற அறிவிப்பு எதையும் வெளியிடுவது அரிது. அப்படியிருக்கையில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் நடித்து வரும் நிலையில் இது போன்ற சர்ச்சைக்கு இடமளிக்கும் எதையும் செய்யமாட்டார் அல்லது கூறமாட்டார் என்பது என் போன்றவர்கள் கணிப்பு.
1995 ஆம் ஆண்டு பத்திரிக்கைகள் ஏற்படுத்திய பரபரப்பு
இதற்கிடையே பத்திரிக்கைகள் 1995 ஆம் ஆண்டு செய்த வீண் பரபரப்புகளுக்கு உதாரணம் தான் இணைக்கப்பட்டுள்ள மாலை முரசு முதல் பக்க செய்தி தாள். (இந்த பத்திரிகையின் பொழைப்பு ஓடியதே ரஜினி ரசிகர்களால் தான். ஆனால் நன்றி மறந்து இன்று ரஜினிக்கு எதிரான கடும் அவதூறுகளை பரப்பி வருகிறது இந்த மாலை நாளிதழ். )

இத்தகைய செய்திகளை தினமும் பத்திரிக்கைகளில் படித்துவிட்டு கடைசியில் ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றதும் பொது மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
அந்த மன நிலை தான் மக்களிடம் இன்றும் தொடர்கிறது.
இதனிடையே ரஜினியின் 1995 செப்டம்பர் பிரஸ் மீட்டுக்கு பிறகு வந்த ஜூவி மிகவும் சுவாரசியம். ஏனெனில் ரஜினி அரசியல் கட்சி கட்டாயம் ஆரம்பித்துவிடுவார் என்று சத்தியம் செய்தது அவர்கள் தானே. அந்த இதழ் + நாளை வெளிவரவிருக்கு இதழ் பற்றி பதிவு நாளை காண்க.

What’s the specialty of Robot that Superstar invents?

Friends, Endhiran’s task master Shankar has decided to present the movie as an up-to-date science and technical masterpiece in Indian movie history.
Because of Sujatha’s sudden demise - though he had finished his part before his departure - some fine tunings are needed here and there in the script and it is reported that Shankar has approached some Science & Technology professors of IIT, whom will make sure that there are no flaws in technology releated facts and scenes.
Meanwhile famous weeklies have come up with cover reports on Endhiran story just cooked on their own imagination just by seeing the ad still that released. They have bloated a full article with just a few infos they knew about the story - long before.
I don’t want to repeat what they have done.
I just reveal you one interesting aspect.
The Robot that Superstar invents in his technical lab will have the power to Time-travel. And rival group tries to get hold of it. And the clash resulting out of it forms the main plot with interesting twists and happenings equal to that of a thriller.
The futuristic period where the Robot travels will be shown in real life CG. (This is the main reason for roping in Hollywood biggies of computer graphics).
In this futuristic episode, some real life sets will be erected and concerned scenes will be shot over there. Sabu Cyrill who has taken the mantle of art direction has already started erecting those sets already in an undisclosed location (possibly at Ramoji Rao film city ) as it will be time consuming. The area where the sets are being erected has been brought under complete vigilance to prevent the leakage of any details or images regarding the sets.
What another specialty in Endhiran is the film is packed not only with science and technology stuffs but also with socio-economic aspects in the right proportion (as that of in Sivaji, the boss).
So, a real treat is in the making….what else we need?
Endhiran, the Robot’s technical specifications
And i wish to share some infos on Robot’s technical aspects which we saw in promotion stills.
Byte Terminology
A zettabyte (symbol ZB) is a unit of information or computer storage equal to one sextillion (one long scale trilliard) bytes.
Computers are getting faster; hard-drives are getting bigger. We had megabytes, then gigabytes. What’s next?
Here is what we can expect in the near future:Tera byte = 1024gbPeta byte = 1024tbExa byte = 1024pbZetta byte = 1024ebYotta byte = 1024zb
What is Hertz?
The hertz (symbol: Hz) is a measure of frequency, informally defined as the number of events occurring per second. The most common use for hertz is to describe frequency of rotation, in which case a speed of 1 Hz is equal to one cycle per second.
What is Tera Hertz?

4 responses to "What’s the specialty of Robot that Superstar invents?"saravanan said:September 12, 2008
wow grat bro, its amazing to see the technology from u bro… then means the ROBO can make up as fast as that works in movie.. we shall wait

Shankar cautious this time - Opts for uninhabited locations


Friends, the following news is from last evening Maalai Malar which says that because of Sivaji lessons Shankar this time has taken stringent measures to prevent leakout of any stills related to Endhiran shooting which is going on now at Peru.


It is also said that some fans identified Superstar even there and security persons ensured that they didn’t catch the shooting spot proceedings in mobiles or cameras. But i don’t think this is true. Because the place where Shankar now shooting is an uninhabited place i.e. no people will be found there. Because of leakage fear Shankar has opted such a spot.
Meanwhile sources say that to ensure timely release, Shankar has arranged spontaneous editing of the finished portions. Antony will edit the finished portions and wil be keeping them ready. Once the entire shoot completes final editing will be done. Considerable amount of time can be saved by this method.
A request to ShankarShankar sir, please release a few more stills and prevent the leakage. We are very eager to see the looks of Superstar. The one which you released didn’t serve our appetite. We want more.

Meeting the Legend called ‘Superstar’ – The Golden Moments of wedding couple!!




Herewith I introduce you Mr.Karthikeyan, who recently got the golden opportunity of meeting Superstar and taking snaps with him. His experience of meeting the legend is more or less equal to a suspense thriller. I have requested to narrate his experience to you all friends with the photographs. This is the very latest look of Superstar – just before he kicked off to shoot Endhiran in South America.
A big heartful thanks to Karthikeyan for sharing with us his vibes with the legend. Also a big thanks to LIC Fan clubs president Mr.Sridhar who helped me in this regard.


செய்திக்கு போவதற்கு முன் ஒரு சின்ன விளக்கம்
ஸ்ரீ ராகவேந்திரர், பாபாஜி - சூப்பர் ஸ்டாருக்கு யார் குரு, யார் தெய்வம்?
என்னிடம் சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம், “தலைவர் இப்போதெல்லாம் ஸ்ரீ ராகவேந்திரரை வணங்குவதில்லையா? பாபாஜி பற்றித்தான் அதிகம் பேசுகிறார். பாபாஜிதான் தெய்வம் என்றால் ராகவேந்திரர் அவருக்கு இப்போது யார்?” என்று கேட்டார்.
நான் சொன்னேன், “இப்போதும் ஸ்ரீ ராகவேந்திரர் மேல் தலைவர் அதே பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார். அவ்வப்போது மந்த்ராலயத்துக்கு ரகசியமாக சென்றும் வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரர் தெய்வம் என்றால் பாபாஜி அவருக்கு குரு. தெய்வத்தைவிட நாம் கண்ணால் காணும் குரு மீது நமக்கு பற்று கொஞ்சம் கூடுதலாக இருக்குமல்லவா? அது போலத்தான் இதுவும். பாபாஜி குரு என்றால் ஸ்ரீ ராகவேந்திரர் குருவுக்கெல்லாம் குரு. குரு ராஜர்.”
இப்போதும் தான் கலந்து கொள்ளும் திருமண விஷேஷங்களில் மணமக்களுக்கு பரிசாக லேமினேட் செய்யப்பட்ட ஸ்ரீ ராகவேந்திரர் படத்தையே சூப்பர் ஸ்டார் தருகிறார். அதற்க்கு சாட்சி தான் மேலே நீங்கள் காணும் படம்.
யுகங்கள் மாறினாலும் யுக தர்மங்கள் மாறினாலும் தலைவர் மாறமாட்டார்! என்றும்!!

ரோபோ கையில் ரோஜா! சூப்பராக ஒர்க் அவுட் ஆன ஷங்கரின் டெக்னிக்!!


மூளை முடுக்கெல்லாம் எந்திரன் பற்றித்தான் இப்போது பேச்சு
நண்பர்களே, எந்திரன் நடைபோட துவங்கிவிட்டான். இனி எந்திரனின் கதை குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள், யூகங்கள், ஆரூடங்கள் வெளிவரத்துவங்கும்.
நம் பங்கி்ற்கு எந்திரன் கதை குறித்தும் அந்த படம் உரு பெற்ற விதம் குறித்தும் நான் இது வரை கேள்விப்பட்டதை தருகிறேன். சுவராஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு?
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு - ஒரு மலையை தூக்கிய பிரமிப்பில் இருந்தார் ரஜினி. அடுத்து என்ன படம் செய்வது, என்ற குழப்பம் இருந்தது. அதே போல், ஷங்கரும் அகில இந்திய அளவில் சிவாஜிக்குப் பிறகு அறி்யப்பட்டுவிட்டதால் ரோபோவை துவக்க இது தான் சரியான தருணம் என்று நினைத்து அது ஒட்டிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஷாருக்கை சந்தித்து கதை சொல்லி எல்லாம் ஓகேயாகி டிஸ்கஷனில் இருந்தபோது இருவருக்குள்ளும் கருத்து வேறு்பாடு ஏற்பட்டு, படம் கைவிடப்பட்டது. (எல்லாம் ஈகோ பிரச்னை தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்)
ஷாருக் கைவிட்டதால் பயங்கர அப்செட்டிலிருந்த ஷங்கர், தன்னை நிரூபித்து காட்டி பாலிவூட்டின் மூக்கை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்.

மூன்று பேர் மட்டுமே
ரோபோவை பொறுத்தவரை - அந்த பட்ஜெட்டுக்கு - அந்த படத்தை மூன்று பேர் மட்டுமே செய்யமுடியும். ஒருவர் ஷாருக். இன்னொருவர் அமீர்கான். மற்றொருவர் நம் சூப்பர் ஸ்டார். இதில் ஷாருக்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட, அமீர் கானுக்கு விருப்பம் இருந்தாலும் ஷங்கரை நம்பி இரு முழு ஆண்டுகள் ஒப்படைக்க அவர் தயாராக இல்லை.
நிலைமை இப்படி இருக்க, ஒரு நாள் எதைச்சையாக ஷங்கருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார், அவரது அடுத்த படம் பற்றி அக்கறையுடன் விசாரிக்க, ஷங்கருக்கு மூளையில் பொறி தட்டியது. தனது உதவியாளர்களுடன் அவசரமாக விவாதித்து சூப்பர் ஸ்டாரின் இமேஜுக்கு ஏற்றவாறு இன்னும் அந்த ஸ்க்ரிப்டை பாலிஷ் செய்து கதையை ரஜினிக்கு கூற, ஒரு வெற்றிகரமான இயக்குனரை தேடி அடுத்த படம் நடிப்பதற்கு பதில் சிவாஜி என்ற அசத்தலான படம் அளித்த ஷங்கருக்கே அடுத்த படத்தையும் தரலாம் என்று ரஜினி முடிவு செய்ய - அப்படி பிறந்தது தான் இந்த எந்திரன். மேலும் ரஜினியை பொறுத்தவரை ஷங்கர் ஒரு சேப் பெட். மேலும் உண்மையிலேயே இந்த ரோபோ ரஜினி நடிக்க வேண்டியது தான். “எது யாருக்கு உரியதோ அதை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது” என்ற கூற்றுக்கு ஏற்ப அது ரஜினியிடமே வந்துவிட்டது. என்னே விந்தை!!
இதற்கான ஆதாரத்தை விரைவில் தருகிறேன்.
மெலிதான அரசியல் நெடி
ரஜினியிடம் ஓகே வாங்கும் பொருட்டு ஷங்கர் ஒரிஜினல் எந்திரன் கதையில் சில சில மாற்றங்கள் செய்துள்ளார். படத்தில் மெலிதான அரசியல் நெடி கண்டிப்பாக இருக்கும். கதை பாதிக்காத வகையில் ஷங்கர் அதை பேக்கேஜ் செய்துள்ளார். வெறும் சயின்ஸ் பிச்ஷனாக மட்டும் இல்லாமல் சமூகவியலும் சிறிது சேர்க்கபட்டுளது. மேலும் சூப்பர் ஸ்டார் இதை ஓகே செய்ததன் முக்கிய காரணம், படம் நிச்சயம் குழந்தைகளை கவரும் என்பதால் தான்.
மேலும் ரஜினி கூறிய சிற்சில மாற்றங்களையும் ஆலோசனைகளையும் ஷங்கர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். உடனே றோபோவில் (எந்திரன்) ரஜினி நடிப்பது என்று முடிவானது.
எத்தனை கோடிகள் வேண்டுமானால் செலவழிக்க தயார்
ரஜினி நடிக்கிறார் என்றதும் எத்தனை கோடிகள் வேண்டுமானால் செலவழிக்க தயார் என்றும் மேலும் மொத்த படத்தின் வியாபாரமும் “ஒயிட்டாக” நடத்தப்படும் என்றும் ஐங்கரன் உறுதியளித்ததால் உடனே அது சூப்பர் ஸ்டாரால் டிக் செய்யப்பட்டது. மேலும் சிவாஜியை வெளிநாடுகளில் நல்ல முறையில் வெளியிட்டு ரஜினியின் நம்பிக்கையை ஐங்கரன் பெற்றிருந்தது. ஷங்கரும் தனக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ள ஐங்கரன் படத்தை தயாரிப்பது பெட்டர் என்று நினைத்தார்.
இதோ தற்போது எந்திரன் படத்தை வெற்றிகரமாக பல ஹேஷ்யங்களுக்கிடையே துவக்கிவிட்டனர்.
எந்திரனின் உண்மைக்கதை என்ன?
இதுக்கே மூச்சு முட்டுது. கொஞ்சம் ஒரு நாள் வெயிட் பண்ணுங்களேன். எந்திரனின் நிஜக்கதை சுருக்கம் நாளை தரப்படும். (அட முழுக்கதை இல்லீங்க. ஜஸ்ட் ஒரு சின்ன முன்னோட்டம் தான்.)

எங்கெங்கு காணிலும் எந்திரன் பற்றியே பேச்சு
தமிழ் நாட்டில் மூளை முடுக்கெல்லாம் எந்திரன் பற்றித்தான் இப்போது பேச்சு. ஷங்கர் வெளியிட்டுள்ள வித்தியாசமான முதல் டிசைன் கிட்டத்தட்ட அனைவரையும் கவர்ந்திருக்கிறது. கவர்ந்திருக்கிறதோ இல்லையோ பேசவைத்திருக்கிறது.
முக்கிய நாளிதழ்கள் அனைத்திலும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
வித்தியாசமாக காணப்படும் ரஜினியின் தோற்றம் மற்றும் போஸ்டர் டிசைன் ஐ சேலம் நகரில் பொதுமக்கள் ஒரு நிமிடம் உற்று பார்த்துவிட்டுத்தான் செல்கின்றனராம். (சேலத்திலிருந்து நண்பர் ஒருவர் கூறியது). அதாவது சேலத்தில் போஸ்டர் ஒட்டிய அடுத்த நிமிடம் இரண்டு பேர் வேடிக்கை பார்க்க அது சீக்கிரமே இருப்பது பேர் ஆனதாக தகவல். (அட நெசமாதாங்க!!) இவனுங்க திருந்தவே மாட்டனுங்க என்று அந்த பக்கம் சென்ற சில பேர் கமென்ட் அடித்ததாக உபரி தகவல்.
மற்றும் பல ஊர்களிலும் எந்திரன் விளம்பரம் குறித்து பேசத்துவங்கிவிட்டனர். (கரண்ட் கட், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள்ல சிக்கி தவிக்கிற மக்களுக்கு இது மாதிரி சென்சேஷனல் செய்திகள் தேவை!!)
சென்னையில் எந்திரன் போஸ்டர் - ஒரு அனுபவம்
காலை பேப்பர் பார்த்துவிட்டு உங்களுக்கு செய்திகள் அப்டேட் செய்த பிறகு, அலுவலகம் செல்லும் வழியில் எந்திரன் போஸ்டர் எங்காவது தென்படுகிறதா என்று பார்த்தல் ஏமாற்றமே மிஞ்சியது. முந்தின இரவு கடும் மழை பெய்ததால் போட்டார் ஒட்டப்படவில்லை என்று புரிந்தது. ஏற்கனவே ஓட்டபட்டிருந்த பலவேறு சுவரொட்டிகள் வருண பகவானின் புண்ணியத்தால் சுவர்களிளுருந்து பிய்ந்து தொங்கிகொண்டிருந்தன.
சரி இன்று இரவு தான் மீதமுள்ள போஸ்டர்களை ஒட்டுவார்கள் என்று அலுவலகம் சேர்ந்துவிட்டேன். பின்னிரவு பணி முடித்து திரும்புகையில் கோடம்பாக்கம் சிக்னல் சந்திப்பில் போஸ்டர் ஓட்டபட்டிருந்ததை பார்த்து வண்டியை நிறுத்தி காமிராவில் க்ளிக் செய்ய தொடங்கினேன்.
அந்த போலீஸ்காரர் சொன்னது என்ன?
சிக்னலில் பணியிலிருந்த போலீஸ்காரர் என்னை பார்த்தார். என்ன நினைத்தாரோ என் அருகில் வந்தார். சரி, ஹிஸ்டரி ஆப் த இன்சிடென்ட் முதல் ஜியாக்ரபிய் ஆப் த இன்வால்வ்மென்ட் வரை அனைத்தையும் இவரிடம் சொல்லவேண்டுமா என்று நினைத்து அசௌகரியமாக உணர்ந்தேன். (இப்போதிருக்கும் நிலையில் பொது இடங்களில் இது போன்று இஷ்டத்திற்கு காமெராவை உபயோகப்படுத்த முடியாது)
என்னருகில் வந்தவர், என்ன ஏது என்ற விசாரிக்க, நான் ஒரு ப்ரீலான்ஸ் (Freelance) போட்டோக்ரபார் என்று கூறினேன். பிறகு அவர் காத்திருந்தது போல என்னிடம், “அது வந்து சார், அந்த ரோஜாப்பூ பத்தி என்ன நினைக்கிறீங்க? வித்தியாசமா இருக்குல்ல அது” என்றாரே பார்க்கலாம். அப்படிப்போடு!!!!! நான் சுதாரித்து கொண்டேன்.
“எனக்கு தெரியல சார். நீங்களே சொல்லுங்க…” என்றேன். (ஜஸ்ட் பொது மக்கள் பார்வை எப்படி இருக்குன்னு தெரியவேண்டாமா?)
“உதட்டுக்கு பதில்லா ரோஜாப்பூ வெச்சிருக்கிறது புதுமையா இருக்கு. இங்கிலீஷ் படம் போஸ்டர் மாதிரி இருக்கு டிசைன். காலைல கூட நானும் சார்ஜென்ட்டும் இது பத்திதான் பேசிகிட்டு இருந்தோம். ரஜினியை இது வரைக்கும் பார்த்திராத கெட்டப்ல காட்டுவாங்கன்னு அவர் சொன்னாரு.”
“ஒ….அப்படியா?”
“சார் எவ்வளவோ போஸ்டர் பார்த்திருக்கோம். கைல அருவா, இல்லைன்னா கத்தி இல்லைன்னா மெஷின் கன் இல்லாட்டி குண்டு - இது தான் வெச்சிருப்பாங்க. ஆனால் இதுல ரோஜாப்பூ வெச்சிருக்கிறது ரொம்ப சூப்பரா இருக்கு. பாக்குறதுக்கு அழகாகவும் இருக்கு.” என்று விளக்கம் கொடுத்தார் அந்த காவலர்.
இன்னும் சற்று நேரம் அவரிடம் பேசிவிட்டு வண்டியை கிளப்பினேன்.
மக்கள் அனைத்தையும் மறந்துவிட்டு இயந்திரன் மூடுக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிந்துகொண்டேன்.
இப்போது புரிந்ததா ஷங்கர் ஏன் ரோபோ (ரஜினி) கையில் ரோஜாப்பூ கொடுத்தார் என்று? மக்களை பேசவைத்துவிட்டாரே. சபாஷ். உண்மையில் ரோபோ கையில் ஏ கே 47 எதிர்ப்பார்த்த நம் அனைவரின் யூகங்களை பொய்யாக்கிவிட்டு ‘ரோஜாப்பூ’ கொடுத்து விளம்பரத்தை பேசவைத்துவிட்டார் ஷங்கர். ரியல்லி க்ரேட் மிஸ்டர் ஷங்கர்.
இணைக்கப்பட்டுள்ளது சென்னையில் எடுத்த இன்றைய போஸ்டர்கள். மழை காரணமாக ஒரு சில இடங்களில் மட்டுமே போஸ்டர் காணப்பட்டது. மீதி இடங்கள் இன்று இரவு ஒட்டப்படும் என்று தெரிகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...